வெள்ளி, 29 அக்டோபர், 2010

இலங்கையில் பழைமையான தமிழ் கல்வெட்டு மாயம்?

கொழும்பு, அக்.29- இலங்கையில் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்த பழைமையான தமிழ் கல்வெட்டு காணாமல் போய்விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திசமஹாராம பகுதியில் ஜெர்மனி அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டு திடீரென காணாமல் போயுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அம்பாந்தோட்டையில் பழங்கால துறைமுகத்துடன் தமிழர்களுக்கு இருந்த தொடர்புக்கு, காணாமல் போன கல்வெட்டு முக்கிய ஆதாரமாக இருந்தது என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

மக்களையே மாயமாக்கும் இலங்கை - கூடடு நாடுகளுக்குக் கல்வெட்டுகளை மாயமாக்குவது ஒரு பெரிய வேலையா? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:25:00 PM
கல்வெட்டு மட்டுமா?
By gk
10/29/2010 3:59:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக