திங்கள், 25 அக்டோபர், 2010

ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லையா?

First Published : 24 Oct 2010 01:26:52 AM IST

Last Updated : 24 Oct 2010 01:17:39 PM IST

ஒச்சாயி படத்தில் ஒரு காட்சி.
சென்னை,அக்:23: தமிழகத்தில் சமீபத்தில் திரையிடப்பட்டுள்ள ஒச்சாயி திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயர் இல்லை எனவும், அப்படி தமிழ்ப் பெயராக இருந்தால் அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் கோரப்பட்டிருப்பதற்கு மதுரைப் பகுதியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.  புதுமுகங்கள் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் "ஒச்சாயி' படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டுள்ளது. தமிழ் அகராதியில் "ஒச்சாயி' என்ற பெயருக்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்று வரி விலக்கு ஆணையம் விளக்கம் அளித்து வரிவிலக்கை மறுத்துள்ளது.   புதுமுக இயக்குநர் ஆசைத்தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஆச்சிக் கிழவி திரைக்கூடம் நிறுவனம் சார்பில் திரவியபாண்டியன் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் தயா, தாமரை நடித்துள்ளனர். மதுரை மாவட்ட கிராமத்து இளம் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து "ஒச்சாயி' உருவாக்கப்பட்டுள்ளது.    கடந்த 15-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. உசிலம்பட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி தனது முதல் இயக்கத்தில் உருவான படத்துக்கு குலதெய்வத்தின் பெயரில் ஒச்சாயி எனப் பெயர்சூட்டியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.  ஆனால், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் மட்டும் ஒச்சாயி தமிழ்ப் பெயர் என்பதை தமிழ் அகராதி மூலம் நிரூபிக்கவேண்டும் என கூறுவதாகத் தெரிகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளி வந்த படத்துக்கு "சிவாஜி' என்று பெயரிடப்பட்டிருந்தது. "சிவாஜி' தமிழ்ப் பெயரே கிடையாது. ஆனால் "சிவாஜி' படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  எந்திரன், "வ' குவார்ட்டர் கட்டிங் போன்ற திரைப்படங்கள் வரி விலக்குக்காக பரிசீலக்கப்படும்போது ஒச்சாயி போன்ற தமிழ் கிராம தேவதைகளின் பெயரால் எடுக்கப்படும் திரைப்படங்களைப் புறக்கணிப்பதை எதிர்த்து கண்டனம் எழுந்துள்ளது.  "அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள் உருவாக்கும் படங்கள்; பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் என அனைத்துக்கும் கேள்வி கேட்காமல் வரி விலக்கு தரப்படுகிறது. ஆனால், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் தலைப்பு தமிழில் இருந்தாலும் அவற்றிக்கு வரி விலக்கு அளிப்பதில் பல கேள்விகள் கேட்டு வரி விலக்கு அளிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்' என்கிறார்கள் சிறிய  திரைப்படத் தயாரிப்பாளர்கள்.  இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பியிடம் கேட்டபோது, உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல; இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

நிறுவனத்தின் பெயர் மரியாதைக்குரிய பெயர் இல்லை என மாற்றுப் பெயரில் குறிப்பிட்டுள்ள நண்பரே! ஆச்சி என்பது உறவு அடிப்படையிலும் அகவை முதிர்ந்தவரையும் குறிப்பிடும் மரியாதைக்குரிய சொல். கிழவி என்பது உரிமையுடையவர் என்பதைக் குறிக்கும் நல்ல சொல். அதனை மரியாதைக் குறைவாக எண்ணுவது தவறு. திரைக் கூடம் என்றும் தமிழிலேயே பெயரை வைத்துள்ளார். துன்பத்தை விரட்டும் அம்மன் என்னும பொருளில் ஓச்சாயி எனக் குறிக்கப்பெற்று அஃது ஒச்சாயி என மாறியிருக்கலாம். பணத்திற்காக மனைவி களிப்பிற்காக வைப்பாட்டி எனக் கொண்டுள்ள ஒழுக்கங் கெட்டவர்களைப் போல் தமிழி்ல்பெயர் வைத்துக் கொண்டு ஆங்கிலத்தி்ல் விளக்கப் பெயர் வைக்கும் தறிகெட்ட நெறி கெட்ட நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்திருக்கையில் இதற்கு மறுப்பது சிற்றூர் மக்களுக்கும் சிறு தெய்வ வழிபாட்டிற்கும் எதிரானதாகும். எப்படியும் தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து முதல்வர் வரி விலக்கு அளிப்பார். எனவே அவருக்கு முன்னதான நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:37:00 AM
ஆச்சிக் கிழவித் தமிழ்க்கூடம் எனத் தமிழில் பெயர் வைத்துள்ளதால் உங்கள் சொல்படி கேட்க வேண்டும் என்று இல்லை. விதி என்றால் விதிதான். ஒன்று கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் பெயருடன் சேர்த்து விளக்கம் இருக்க வேண்டும். படத்தயாரிப்பாளர் வெளியாளாக இருந்தாலும் வெளியீட்டாளராவது சுற்றமாகவும் வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும். எனவே, வெறும் தமிழ்ப் பெயர் வைத்து எங்களை இழிவு படுத்துவதால் உதவ இயலாது. இப்படியே விட்டால் தாய்மொழி என்னும் குறுகிய வட்டத்திற்கள் அனைவரையும் அடைத்து விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டடியுள்ளது. இவ்வாறு உரியவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். எதற்கு வம்பு? ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து விடச் சொல்லுங்கள். உதவி கிடைக்கும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:29:00 AM
மதுரையின் கிராமப்புறங்களில் ஒச்சு, ஒச்சாத்தேவர், ஒச்சாயி, ஒச்சம்மாள் போன்ற பெயர்கள் பரவலாக உள்ளன. அண்ணன் அழகிரியின் பாசறையில் இருக்கும் ஒச்சு பாலு முன்னாள் சட்டமன்ற வேட்பாளர். அர்த்தமே இல்லாத 'வ' என்ற எழுத்துள்ள படத்துக்கு வரிவிலக்கு கொடுத்தவர்களுக்கு ஒச்சாயி தமிழ்ப் பெயர் என்பது எப்படித் தெரியும்?. தமிழ் என்பதே தமிழ்ப் பெயர் தான் நிரூபிக்கச் சொன்னாலும் சொல்வார்கள், மொழியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
10/25/2010 12:18:00 AM
யோவ், டைரக்டரு, லூஸாய்யா நீ? ஒச்சாயி. வாட் ஈஸ் திஸ் பிளடி ஒச்சாயி ? இத யார் மேன் பேர் வச்து ? ஒன்னும் புரியலெ ! இது சன் பிக்சர் தயாரிப்பா ? நோ. இல்ல ஸ்டாலின் மகன், அல்லது தயாநிதி, அருள்நிதி, உதயநிதி, அழகிரி க்ளௌட் நைன் இந்த மாதிரி எந்த வகையிலாவது முதல்வர் குடும்பத்துக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டா ? ஒரு எழவும் இல்லெ. பின்னெ எப்டி மேன் இத தமிழ் சொல்றே ? ஹீரோ ஒரு மஞ்சள் துண்டாவது போட்டுகிட்டு ஒரு பாட்டு உண்டா இல்லெ ஓட்டுக்காக ரசிகர்களெ காக்கா புடிக்கிறமாதிரி ஒரு ரஜனி, கமல் விஜய் மாதிரி பெரிய தல ராராவது உண்டா? அத்த உடு வாய்க்கி விளங்காத, மறுபடியும் திருப்பி பாடமுடியாத ஒரு இங்கிலீஸு பாட்டாவது அதிலெ உண்டா ? அதுவும் இல்லெ. இதெல்லாம் விட நீ ப்ரிய பருப்பா கேக்கிறேன். நாங்க சாமியெவே நம்புறது இல்லெ. பகுத்தறிவு பாசறைகள். எப்டி இத டமில்னு ஒத்துக்கிறது மேன். பின்னெ சாமி பேரெ வச்சா எப்டி மேன் இதுக்கு டாக்ஸ் கம்மி ப்ன்ன சொல்றெ?
By Niamathullah - Dubai.
10/24/2010 5:45:00 PM
The fitting response to the CMO official asking for dictionary proof for the title word is to publicly withdraw his application seeking tax exemption. Thereby let the CM and his government get the proof of definition and spirit of the phrase SELF-RESPECT. Let us note that when the Tamil film industry accepted the tax exemption for the title being in Tamil, it pledged its artistic character and of course self-respect.
By S. Arunagiri
10/24/2010 12:04:00 PM
இயக்குனர் அவர்களே உங்களது கருத்தும்,விவாதமும், சரிதான், உங்கள் குலதெய்வத்து பெயரை உங்களுடன்,போகட்டும்,கதைகேற்ற பெயரை வைத்தால் சரி. உங்களுக்காக நாமும் வாதாடலாம்,ஆனால்,உங்கள் கம்பெனி பெயரும் மரியாதைக்குரிய பெயர் போல இல்லை,எனவே உங்கள் படத்தை நீங்கள் குறிப்பிட்ட அந்த சில நபர்கள் மட்டுமா பார்க்க எடுத்தீர்கள்?பிற மாவட்டத்துக்காரர்களும்,படம் பார்க்கும்படியாக திரைப்படம் எடுங்க சார்.
By kamalhashan
10/24/2010 11:55:00 AM
தினமணி உங்களுக்கு ரஜினி மேல் ஏன் இப்படி ஒரு காண்டு.......எப்பவும் ரஜினியை போட்டு தாக்குறீங்க..... உங்களுக்கென்று ஒரு தரம் உள்ளது...மரியாதை உள்ளது..நீங்களே ஏன் அதை கெடுத்து கொள்கிறீர்கள் ... ஏன் தசாவதாரம் உங்கள் கண்ணில் படவில்லை....அது வடமொழிக்கலப்பில் இருந்தும் வரி விலக்கு கிடத்ததெப்படி.... என்றும் நடுநிலைமையில் இருப்பதால் தான் உங்களை அனைவரும் மதிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்
By தமிழன்
10/24/2010 11:48:00 AM
குவார்ட்டர் கட்டிங் என்பது போல தூய தமிழில் பெயர் வைத்திருக்கலாமே?
By உதயநிதி ரசிகர் மன்றம்
10/24/2010 9:36:00 AM
vetkakedu... karunanidhi thannai thamizhina thalaivar endru azhaithukolla vetkappadavendum. avar nalla kudumba thalaivar.. sivaji thamizh , enthiran thamizh, thasavatharam thamizh , quarter cutting thamizh ...aanal ochaayi thamizh allavaam... bal thakkareyvai kadavulaka vanangum thamizh pattralargalai nanbarkalaka konda karunanidhithikkum thamizhukkum ulla thodarbu, udhattukkum vaarthaikkum ulla thodarbu endru theriyamal avarai thamizhina thalaivar endru kondadum ilichavayarkal thayaka thamizharkal enbathai 'ochayi' nirubikkirathu, verenna ?
By vasantha.m.s.
10/24/2010 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக