வெள்ளி, 29 அக்டோபர், 2010

வெடிபொருள் வாங்க விடுதலைப் புலிகளுக்கு ராஜரத்னம் உதவினார்?

கொழும்பு, அக்.29- விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெடிபொருட்கள் வாங்குவதற்காக அமெரி்ககாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராஜ் ராஜரத்னம் நிதியுதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எஃப்.பி.ஐ. புலனாய்வு போலீஸார் நடத்திய விசாரணையில், பிரதீபன் என்னும் புலிகள் ஆதரவாளரின் கணினியில் இருந்து இத்தகவல் கிடைத்துள்ளதாக "திவயின" பத்திரிகை தகவலை மேற்கொள் காட்டி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.ராஜரத்னத்தின் நிதியுதவி மூலம், சுமார் 205 டன் வெடிபொருட்களை விடுதலைப் புலிகள் வாங்கினர் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ராஜ் ராஜரத்னம் ஏற்கெனவே அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

இந்திய விடுதலைக்கு உதவியவர்களை ஆங்கிலேயர்கள் குற்றவாளிகளாக 
நடத்தினார்கள். 
அதுபோல்தான் இதுவும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக