கொழும்பு, அக்.30- ஹிட்லரின் ஆட்சிமுறையை இலங்கை அரசு பின்பற்றுகிறது என்று இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.நவம்பர் 8-ம் தேதி ஜனநாயக உரிமைகளை மீட்பதற்காக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ம் தேதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மங்கள சமரவீர கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 7:19:00 PM
10/30/2010 7:19:00 PM


By Ungaa Aaththaa Tamiludaa..,
10/30/2010 4:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English 10/30/2010 4:57:00 PM