ஞாயிறு, 21 மார்ச், 2010

பெ ண் ணா கரம் இடை த் தே ர் தல்


தருமபுரி, மார்ச் 20: மக்கள் மீது நம்பிக்கை இன்றி இடைத் தேர்தல்களை புறக்கணித்த அதிமுகவை பென்னாகரம் இடைத்தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பி.என்.பி. இன்பசேகரனுக்கு ஆதரவு திரட்டி, பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லாத அதிமுக கடந்த இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போது பென்னாகரம் வாக்காளர்களை குழப்பவே அதிமுக போட்டியிடுகிறது.2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட முன்னோட்ட தேர்தலாக அதிமுக பென்னாகரம் இடைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது.வரலாற்று சிறப்புமிக்க தமிழகத்தின் புதிய சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்ததும், கூட்டத்தை புறக்கணித்து சென்றதும் மக்கள் மீது அக்கட்சி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறது என்பதை புலப்படுத்தியுள்ளது.மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகம் நாட்டில் முதல் நிலை மாநிலமாக உயர்ந்து வருகிறது.பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவிற்கு மணி மண்டபம் கட்டியதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் திமுக நீங்காத இடத்தை பெற்றுள்ளது என்றார்.
கருத்துக்கள்

எல்லாக் கட்சியையும் மக்கள் புறக்கணிக்கும் நாள் விரைவில் வரவேண்டும். காங்கிரசுக் கடசி இந்தியாவில் இருந்து மறையும் நாளே மனித நேயம் மலரும் நாளாகும்.ஊழல்களைப் பெருமளவில் பெருக்கியதற்குக் காரணமான காங்கிரசு இந்திய நிலத்தில் ஒரு பகுதியை அயல்நாட்வர்க்குத் தாரை வார்த்த காங்கிரசு அயலக மண்ணில் இனப்படுகொலை புரிந்த காங்கிரசு கட்சி நலனுக்காக நாட்டு மக்களையே கொன்றொழித்த காங்கிரசு விரட்டியடிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்களுக்காக மக்களே ஆளும் உண்மையான மக்களாட்சி ஊழலும் ஒழுக்கக் கேடும் இல்லாத உண்மையான மக்களாட்சி விரைவில மலர நாம் முயல வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/21/2010 3:06:00 AM

நீங்க உரக்கப் பேசியதால் தி மு க வுக்கு ஒரு single ஒட்டு கூடுதலா கிடைக்க போறதில்லை!....ஏழை இந்தியனின் வரிப் பணம் பாழ் !!! கோயிலுக்கு சாமி கும்பிட வந்த ஆளுமாதிரி தெரியல ....எதோ கூட்டத்தோட வந்து சுண்டக்கடல வாங்கி தின்னுட்டுப் போற ஆளு மாதிரி தெரியுது !!!!

By rajasji
3/21/2010 2:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக