செவ்வாய், 23 மார்ச், 2010

செம்மொழித் தமிழாய்வு அறிஞர்களுக்கு பொற்கிழிகள்:​ கருணாநிதி வழங்குகிறார்



சென்னை, ​​ மார்ச் 22: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பிலான பொற்கிழிகளை,​​ முதல்வர் கருணாநிதி வரும் ஞாயிற்றுக்கிழமை ​(28-ம் தேதி)​ வழங்குகிறார்.​ இதுகுறித்து,​​ தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில்,​​ இந்திய அளவில் சிறந்து ​விளங்கும் அறிஞருக்கு ரூ.5 லட்சம் பொற்கிழியுடன் தொல்காப்பியர் விருதும்,​​ அயல்நாடு வாழ் இந்திய அறிஞருக்கு தலா ரூ.5 லட்சம் பொற்கிழியுடன் குறள்பீட விருதும்,​​ 5 ​இளம் தமிழறிஞர்களுக்கு விருதுகளையும் குடியரசுத் தலைவர் ஆண்டுதோறும் அளிப்பார்.'2005}2006,​ 2006}2007 மற்றும் 2007}2008 ஆண்டுகளுக்கான தமிழ் அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.​ அவர்களுக்கான,​​ பொற்கிழிகளை மாநில அரசே வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.​ ​ இதற்கான விழா வரும் 28}ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ​தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் நடைபெறுகிறது.​ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரும்,​​ முதல்வருமான கருணாநிதி இந்த பொற்கிழிகளை வழங்குகிறார்.​ குடியரசுத் தலைவரின் குறள்பீட விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டுக்கான ரூ.5 லட்சம் பொற்கிழி பின்னர் வழங்கப்படும்'' என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ விருது வழங்கும் விழா,​​ தில்லியில் ​குடியரசுத் தலைவர் மாளிகையில் விரைவில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

தமிழறிஞர்களை முத்தமிழறிஞர் பாராட்டிப் பொற்கிழி வழங்குவது பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் சமற்கிருத அரபி அறிருக்கான விருதுகளையும் பொற்கிழிகளையும் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ள பொழுது தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்திப் பின்னர் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. முதல்தடவை வழங்கப்படும் பொற்கிழி யாவது குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினால் உலகோர் கவனத்தைக் கவரும். மேலும் சமற்கிருத , அரபி அறிஞர்களுக்கு ஒரு முறை பொற்கிழி தவிர ஆண்டுதோறும் 50,000 உரூபாய் வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. அதனை ஏன் தமிழுக்கு நடைமுறைப்படுத்த வில்லை? செம்மொழித் தலைப்பில் சமற்கிருதம், பாலி, பிராகிருதம்,அரபி, பெர்சியன்,திபேத்தியன் மொழிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி போல் தமிழுக்கு வழங்குவதில்லை. செம்மொழியாக ஒப்புக்கு ஏற்பளித்து விட்டு இத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எந்த நிதி உதவித் திட்டமும் தமிழுக்கு வழங்கப்படுவதில்லை. மததிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டிப்போம்.

விருதாளருக்கு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 3:01:00 AM
மஞ்சள் துண்டாருக்கு, தான் மன்னர் என்று நினைப்பு.
By மதுரைக்காரன்
3/23/2010 1:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக