வியாழன், 24 டிசம்பர், 2009

அதிக வாக்குகள் பதிவு ஏன்?: கருணாநிதி விளக்கம்



சென்னை,​​ டிச.23: இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானதற்கான காரணத்தை முதல்வர் கருணாநிதி விளக்கி உள்ளார்.திருச்செந்தூர், ​​ வந்தவாசி ​(தனி)​ தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.​ கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கட்சித் தலைவரும்,​​ முதல்வருமான கருணாநிதி புதன்கிழமை காலை வந்தார்.தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றியை பெற்று இருக்கின்றன.​ மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இடைத் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்கு அளித்திருக்கிறார்கள்.​ அதற்கு என்ன காரணம்?​​திமுக அரசின் சாதனைகள்,​​ மக்கள் தொடர்பு,​​ மக்கள் பிரச்னைகளில் காட்டுகிற அக்கறை ஆகிய காரணங்களுக்காக மக்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு வருவார்களா?​​வந்தால் உங்களுக்கே தெரியும்.உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குப் பதிவை கட்டாயமாக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்களே?​ அதைப் பற்றி உங்கள் கருத்து.அந்தக் கருத்து பற்றி இரு வேறு அபிப்பிராயங்கள் தமிழகத்தில் உள்ள தலைவர்களால் சொல்லப்பட்டுள்ளன.​ பழுத்து வந்த பிறகு அந்தக் கருத்து பற்றி நான் என் கருத்தைச் சொல்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
கருத்துக்கள்

'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை.''

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 3:08:00 AM

Really Mr Karunanithi?

By S
12/24/2009 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக