திங்கள், 21 டிசம்பர், 2009

மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறந்​தி​ருக்​காது​: முதல்​வர் கரு​ணா​நிதி



சென்னை, ​​ டிச.​ 19:​ மார்க்​சிஸ்ட் கட்​சிக்​காக அனு​ச​ர​ணை​யோ​டும்,​​ நேசத்​தோ​டும் தி.மு.க.​ செய்​த​தை​யெல்​லாம் அக்​கட்சி மறந்​தி​ருக்​காது என நம்​பு​வ​தாக முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​துள்​ளார்.​இது குறித்து அவர் தி.மு.க.​ தொண்​டர்​க​ளுக்கு சனிக்​கி​ழமை எழு​திய கடி​தத்​தில் கூறி​யுள்​ள​தா​வது:​திண் ​டுக்​கல்​லில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் ஒரு மாநா​டும்,​​ பேர​ணி​யும் நடத்​து​கின்​ற​னர்.​ திரி​புரா மாநில முதல்​வர் பங்​கேற்​கும் அம்​மா​நாட்​டுக்கு போலீ​சார் அனு​மதி தர மறுப்​ப​தா​க​வும்,​​ முதல்​வர் தலை​யிட்டு அனு​மதி வழங்க வேண்​டும் என​வும் மார்க்​சிஸ்ட் செய​லா​ளர் என்.​ வர​த​ரா​ஜன் வெள்​ளிக்​கி​ழமை மதி​யம் எனது செய​லா​ள​ரி​டம் தொலை​பே​சி​யில் பேசி​யுள்​ளார்.​அச்​ செய்​தியை அறிந்த நான்,​​ மார்க்​சிஸ்ட் கட்சி மாநாட்​டுக்​கும்,​​ பேர​ணிக்​கும் அனு​மதி வழங்க காவல்​துறை அதி​கா​ரி​க​ளி​டம் கூறு​மாறு,​​ எனது செய​லா​ள​ரி​டம் கூறி​னேன்.​அ​தன் பின்,​​ வெள்​ளிக்​கி​ழமை வெளி​யான மார்க்​சிஸ்ட் கட்சி நாளி​தழை படித்​தேன்.​ அதில்,​​ "மதுரை தொகு​தி​யில் மு.க.​ அழ​கிரி வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரி,​​ மார்க்​சிஸ்ட் வேட்​பா​ளர் மோகன் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தி​ருந்​தார்,​​ மோகன் மறைந்​து​விட்​ட​தால்,​​ மார்க்​சிஸ்ட் மாற்று வேட்​பா​ள​ராக மனு செய்த ஏ.​ லாசர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்​து​வார்" என செய்தி வந்​துள்​ளது.​வ​ழக்கு நடை​பெ​றட்​டும்.​ நீதி​மன்​றம் தீர்ப்பு கூறட்​டும்.​ தீர்ப்பை ஏற்க தி.மு.க.​ தயா​ராக உள்​ளது.​ ஆனால்,​​ மார்க்​சிஸ்ட் கட்சி தலை​மை​யில் உள்ள சில​ரின் உணர்​வு​க​ளை​யும்,​​ தி.மு.க.​ தலை​மை​யின் உணர்​வு​க​ளை​யும் ஒப்​பிட்​டுப் பார்ப்​ப​தற்​காக சில​வற்றை கூறு​கி​றேன்.​தி.மு.க.​ ஆட்​சி​யில் இருந்​த​போது,​​ 23.4.1997}ல் மதுரை மாந​க​ராட்சி மார்க்​சிஸ்ட் உறுப்​பி​னர் லீலா​வதி கொலை செய்​யப்​பட்​டார்.​ இது குறித்து லீலா​வதி கண​வர் அளித்த புகா​ரின் பேரில்,​​ மாந​க​ராட்சி தேர்த​லில் லீலா​வ​தியை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட வள்ளி என்​ப​வ​ரின் கண​வர் கரு​ம​லை​யான்,​​ அவ​ரது சகோ​த​ரர் முத்​து​ராம​லிங்​கம் மற்​றும் 4 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​வ​ழக்​கில் குற்​ற​வா​ளி​கள் தி.மு.க.வின​ராக இருந்​த​போ​தும்,​​ அப்​போது ஆளுங்​கட்​சி​யாக தி.மு.க.​ இருந்​த​போ​தும்,​​ அந்த வழக்கு முறை​யாக நடை​பெற்​றது.​ அரசு வழக்​க​றி​ஞ​ருக்​குப் பதில் மார்க்​சிஸ்ட் கட்சி வழக்​க​றி​ஞர் ஆஜ​ரா​க​வும் ஒப்​புக்​கொண்​டோம்.​ நீதி​மன்​றத்​தில் தி.மு.க.வைச் சேர்ந்த குற்​ற​வா​ளி​கள் தண்​டிக்​கப்​பட்​டார்​கள்.​ஆ​னால் அதற்கு இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன்பு,​​ அ.தி.மு.க.​ ஆட்​சிக் காலத்​தில்,​​ குட​வாச​லில் தங்​கய்யா என்ற மார்க்​சிஸ்ட் தொண்​டர் கொல்​லப்​பட்​டார்.​ அந்த வழக்​கிலே குற்​றஞ்​சாட்​டப்​பட்​ட​வர்​கள்,​​ அந்த ஆட்​சி​யில் இருந்த ஒரு அமைச்​ச​ரின் காரி​லேயே பாது​காப்​பாக அழைத்​துச் செல்​லப்​பட்​ட​னர்.​ தி.மு.க.​ ஆட்சி வந்​த​பி​ற​கு​தான்,​​ அந்த வழக்​கி​லும் நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டன.​மார்க்​சிஸ்ட் கட்சி நண்​பர்​கள் இதை​யெல்​லாம் மறந்​தி​ருக்க மாட்​டார்​கள் என நம்​பு​கி​றேன்.​2006 சட்​டப்​பே​ரவை தேர்த​லின்​போது செய்​து​கொண்ட உடன்​ப​டிக்​கை​படி,​​ 2007 மாநி​லங்​க​ள​வைத் தேர்த​லில் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் டி.​ ராஜா​வுக்கு தி.மு.க.​ வாக்​க​ளித்து வெற்றி பெறச் செய்​தது.​ மார்க்​சிஸ்ட் கட்​சி​யு​டன் அத்​த​கைய உடன்​ப​டிக்கை எது​வும் செய்து கொள்​ள​வில்லை.​ எனி​னும் தோழ​மைக் கட்​சி​க​ளி​டம் கொண்​டுள்ள தோழமை உணர்வு கார​ண​மாக,​​ 2008 மாநி​லங்​க​ள​வைத் தேர்த​லில் மார்க்​சிஸ்ட் கட்சி வேட்​பா​ளரை தி.மு.க.​ ஆத​ரித்​தது.​அக்​கட்சி வேட்​பா​ளர் டி.கே.​ ரங்​க​ரா​ஜ​னின் வேட்பு மனுவை நானே முன்​மொ​ழிந்​தேன்.​ அப்​போது பேட்​டி​ய​ளித்த ரங்​க​ரா​ஜன்,​​ "மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் சார்​பில் தமிழ்​நாட்டி​லி​ருந்து மாநி​லங்​க​ள​வைக்கு தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட பி.​ ராம​மூர்த்தி,​​ எம்.ஆர்.​ வெங்​கட்​ரா​மன்,​​ நல்​ல​சி​வம்,​​ இப்​போது நான் ​(ரங்​க​ரா​ஜன்)​ ஆகிய நால்​வ​ருமே தி.மு.க.​ ஆத​ர​வில் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​ட​வர்​கள்.​ கூட்​டணி கட்​சி​க​ளி​டையே ஒற்​று​மையை பாது​காக்க வேண்​டும் என்ற உணர்​வோடு முதல்​வர் கரு​ணா​நிதி தேர்​தல்​க​ளுக்​கான ஒதுக்​கீ​டு​களை செய்​துள்​ளார்" எனத் தெரி​வித்​தார்.​தோ​ழ​மைக் கட்​சி​க​ளோடு,​​ அவர்​கள் தோழ​மை​யாக இல்​லாத காலத்​தி​லும் கூட,​​ நேச உணர்​வோடு,​​ விட்​டுக் கொடுத்து,​​ அனு​ச​ர​ணை​யாக நடந்து கொள்ள வேண்​டும் என்​ப​தற்கு உதா​ர​ண​மாக தி.மு.க.​ நடந்து கொள்​கி​றது.​அதே நேரத்​தில் மற்ற கட்​சி​கள்,​​ குறிப்​பாக மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி எப்​படி நடந்து கொள்​கி​றது என்​பதை அக்​கட்சி தொண்​டர்​களே தெரிந்து கொள்ள வேண்​டும் என கரு​ணா​நிதி கூறி​யுள்​ளார்.
கருத்துக்கள்

முதல்வரின் கருத்தில் முறையான கூட்டம் ஒன்றிற்கு இசைவு தருவது கூட பேரததின் அடிப்படையில்தான். ஆனால் இதை மார்க்சியப் பொதுவுடைமை வாதியினர் மீறுகிறார்கள் அல்லது புரிந்து கொள்ளவில்லை எனத் தொனி தெரிகிறது. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கிலும் தினகரன் ஊழியர்கள் கொலை, அலுவலக எரிப்பு வழக்குகளிலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றது போல் இதிலும் நீதிமன்றத் தீ்ர்ப்பை ஏற்போம் என்னும் உண்மையை இப்பொழுது கூற வேண்டிய தேவை இல்லையே! மாண்புமிகு கலைஞர் உண்மையை வெளியிட்டு நிலை தடுமாறுவது ஏன் என்று தெரியவில்லை. எபப்டியோ இதுவரை எதிர்க்கட்சிகள் கூட்டங்களுக்கு இசைவு தராததற்குக்காரணம் பேரம் படியவில்லை என்பதைப் புரிநது கொண்டு இனிமேல் கூட்டம் நடத்த இசைவு வேண்டுமென்றால் பேரத்துடனவாருங்கள் என அழைப்பு விடுக்கிறார் என உரியவர்கள் புரிந்து கொண்டால் சரி. வாழ்க மக்களாட்சி!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 5:32:00 AM

தமிழினம் அழிகிறது ....விலைவாசி. விண்ணை முட்டுகிறது .....தமிழ்நாட்டு மக்கள் ....குறிப்பாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலை வெட்டி இல்லாத, வேலைக்கு செல்ல துப்பு இல்லாத சோம்பேறிகள் .....தியேட்டரில் டிக்கெட் வாங்கவும்....கட்அவுட் பாலபிஷேகம் செய்ய அலை மோதுகிறார்கள்...

By Velu Pillai
12/20/2009 10:53:00 PM

த‌மிழ் நாட்டு முத‌ல்வ‌ருனு ம‌ரியாதை கொடுக்கனும் போல் உள்ள‌து ஆனால் உன‌ செய‌லைப் பார்த்தால் சிரிப்பாய் வ‌ருது கொய்யலே..... வ‌ய‌சாயி போன‌ ஒதுங்கி போக‌வேண்டிய‌து தானே ஒய்... ஏன் புல‌ம்ப‌ல் .........

By சுக‌மா சொல்லு
12/20/2009 5:32:00 PM

Ettappa and Kutti sathaan stop talkong like this

By raman
12/20/2009 10:39:00 AM

tamil naddu muthalvar velaiya eathu?

By dhanabal
12/20/2009 9:02:00 AM

இதுக்கு மேல் என்ன செய்யனும். அழகிரி வெற்றி பெற்றதை மார்க்சிஸ்ட் அன்கீகரிகிறது என கேசை வாபஸ் வாங்கு என கருணா சொல்லாமல் சொல்கிறார் .எஸ்.ஆர்.சேகர்

By sekar
12/20/2009 8:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக