வியாழன், 24 டிசம்பர், 2009

கவி​ஞர் புவி​ய​ர​சுக்கு சாகித்ய அகா​தெமி விருது!



சென்னை, ​​ டிச.​ 23:​ இந்த ஆண்​டுக்​கான சாகித்ய அகா​தெமி விருது,​​ கவி​ஞர் புவி​ய​ர​சுக்கு ​(79) வழங்​கப்​ப​ட​வுள்​ளது.​ கையொப்​பம் கவி​தைத் தொகு​திக்​காக இந்த விருது வழங்​கப்​ப​டு​கி​றது.​ இது இவர் பெறும் இரண்​டா​வது சாகித்ய அகா​தெமி விருது ஆகும்.​வா​னம்​பாடி கவிதை இயக்​கத்தை ஆரம்​பித்​த​வர்​க​ளில் முக்​கி​ய​மா​ன​வ​ரான இவர், ​நாடக ஆசி​ரி​ய​ரா​க​வும் பெரும் பங்​க​ளிப்​பைச் செய்​த​வர்.​ மேடை நாட​கங்​கள் மட்​டு​மின்றி ஏரா​ள​மான தெரு நாட​கங்​க​ளுக்​கா​க​வும் இவர் பாராட்டு பெற்​ற​வர்.​ ஏறத்​தாழ 80 நூல்​கள் எழு​தி​யி​ருக்​கும் புவி​ய​ர​சுக்கு இதற்கு முன் நஜ்​ருல் இஸ்​லாம் எழு​திய ரிபெள் அண்டு அதர் போயம்ஸ் என்ற நூலின் மொழி பெயர்ப்​புக்​காக ​(புரட்​சிக்​கா​ரன்)​ சாகித்ய அகா​தெமி விருது வழங்​கப்​பட்​டது.​இவர் எழு​திய மனி​தன் என்ற ரேடியோ நாட​கம் 19 இந்​திய மொழி​க​ளில் மொழி பெயர்க்​கப்​பட்டு ஒரே நேரத்​தில் அனைத்து வானொலி நிலை​யங்​க​ளி​லும் ஒலி​ப​ரப்​பப்​பட்​டது.​கமல்​ஹா​ சன் தயா​ரித்து இயக்கி நடிக்​கும் "மரு​த​நா​ய​கம்' படத்​தி​லும் பார்த்​தி​பன் நடித்த "ஹவுஸ்​ஃ​புல்' படத்​தி​லும் பணி​யாற்​றி​ய​வர்.​ஷேக்ஸ் ​பி​ய​ரின் ஹேம்​லெட்,​ ஒத்​தல்லோ,​​ உமர்​க​யா​மின் ருபா​யத் போன்ற பல மொழி பெயர்ப்​பு​க​ளைத் தமி​ழுக்​குத் தந்​தி​ருக்​கும் இவர்,​​ இப்​போது தாஸ்​த​யா​வெஸ்​கி​யின் 1200 பக்க நாவ​லான கர​ம​ஸோவ் சகோ​த​ரர்​கள் என்ற ரஷிய நாவலை மொழி பெயர்த்​து​வ​ரு​கி​றார்.​ கவி​ஞர் புவி​ய​ரசு கோவை​யைச் சேர்ந்​த​வர்.​ 30 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக தமி​ழா​சி​ரி​ய​ரா​கப் பணி​யாற்​றி​ய​வர்.​ ​இவ ​ரது மூன்​றாம் பிறை​ என்ற நாட​கக் காவி​யம் மாநில அள​வில் முதல் பரி​சுக்​கான தங்​கப்​ப​தக்​கம் பெற்​றது.​ சர்​வோ​தய இயக்​கத்​தி​லும்,​​ தமி​ழ​ரசு இயக்​கத்​தி​லும் பங்​கு​கொண்டு தமிழ் ஆட்சி மொழி,​​ பயிற்சி மொழி மற்​றும் தமி​ழக எல்​லைப் போராட்​டங்​க​ளி​லும் பங்​கேற்று பல முறை சிறை சென்​ற​வர்.​இவ​ரது "ஞானக்​கிளி' என்ற 13 வாரத் தொடர் சென்னை தொலைக்​காட்​சி​யில் ​ஒளி​ப​ரப்​பா​யிற்று.​நீண்ட கால நாட​கத்​துறை அனு​ப​வம் பெற்ற இவ​ரது எல்லா மேடை நாட​கங்​க​ளும் பல முதல் பரிசு பெற்​றவை.​ அதற்​காக "நாட​கக் கலா​ரத்​தி​னம்'​ என்ற விருது பெற்​றுள்​ளார்.​ இவ​ரது "மூன்​றாம்​பிறை'​ நாட​கக் காவி​யம் பல பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் பாட நூலாக வைக்​கப்​பட்​டது.​வானம்​பாடி கவிதை இயக்​கத்தை தோற்​று​வித்​த​வர்​க​ளில் இவர் முக்​கி​ய​மா​ன​வர்.
கருத்துக்கள்

வாழ்த்துகள்! பாராட்டுகள்! இங்ஙனம் தினமணி நேயர்கள் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 3:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக