சனி, 29 ஆகஸ்ட், 2009

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த
நார்வே அமைச்சர் கோரிக்கை



ஓஸ்லோ, ஆக.28- இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்லும் விடியோ காட்சிகளை சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த 'சேனல்-4' என்ற தொலைக்காட்சி வெளியிட்டது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் தான் நேரில் வலியுறுத்தவுள்ளதாகவும் எரிக் சோல்ஹெய்ம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002ல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின்போது சமாதானத் தூதுவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

I was watching Thamarai's speeches in youtube. Excellent speech. India should answer for the genocide.

By Madhivadhani
8/29/2009 12:07:00 AM

Thankful to Norway! I am ashamed that TamilNadu is in India and I am also part of this bloody India. I am not an Indian anymore. I hate Bharatha matha now.

By Kirubakaran
8/28/2009 11:57:00 PM

India has no moral grounds to talk about human rights. India will pay a price for what it did or did not do in SL to save Tamils. All the blood in the hands of Manmohan, Sonia, Rahul, Priyanka,Chidambaram, Krishna, Karunanidhi, Shivshankar, & Nirupama Menons, Narayanans will haunt them. "Yaanaimel Thunjiya Thevar" Chozhan will definitely rerise and get the rights of Tamils restored.THANKS A LOT NORWAY.

By NRITamil
8/28/2009 11:47:00 PM

Needhi is just/ok while 'Justice' is an injustice anti-Tamil. We'll see all Tamil films sans VJ?, as whole film industry starved and revolted against injustice to Tamils anywhere if it happens. Themadhura thamizhosai ulagamellam ariyumvagai seyvorrkku vazhthukkal

By Judge
8/28/2009 11:46:00 PM

ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும். இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும். தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் யதார்த்தம். இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமை. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை . பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர். வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

By VANI KUMAR, UK
8/28/2009 11:03:00 PM

Tamils around the world say "NO" to Karuna-nithi and his products such as SUN TV and SUN productions. DONT screen 'Enthiran' and 'Ninaithalae Innikum' in countries where Tamils live.

By Justice
8/28/2009 10:08:00 PM

நடிகர் விஜய் தமிழினப் படுகொலைலை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத்தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் இராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட் படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்.

By Neethi
8/28/2009 10:04:00 PM

IN Srilanka, there is no Human beings.There is full of Barbarians,Vultures which are eating human beings. So the efforts of Humanists ,like Eric ,are in vain or like a stone which is put in the well..

By Ka.VEZHAVENDHAN
8/28/2009 9:18:00 PM

ஒழுங்காக விழிப்புடன் இருந்த பிரபாகரனை 'சமாதானம்' என்ற வலைக்குள் நார்வே அரசை வைத்து மேற்குலக நாடுகள் வஞ்சகமாக விழ வைத்தன. சமாதான காலத்தில் நிறைய துரோகிகள் தமிழர் பகுதிகளில் ஊடுறுவ வைக்கப்பட்டார்கள். புலித் தலைவர்கள் ஆழ ஊடுறுவும் படையால் கொல்லப்பட்டார்கள்.

By நவீன் சென்னை
8/28/2009 4:58:00 PM

When will India speak against atrocities? Probably when we are betrayed by our own diplomacy! India is no more a land of Gandhi and Nehru! It has lost its heart and soul- only the skeleton is left! FIAT JUSTICIA - LET JUSTICE BE DONE!

By GERSHOM CHELLIAH
8/28/2009 4:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஐ.நா.வின் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனே நீக்க வேண்டும். அப்பொழுதுதான் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். போர்க் குற்றவாளிகளாகக் கொலைக்கு உதவிய இந்தியா உள்ளிட்ட பிறநாட்டுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் பான்கீமூனையும் சேர்கக் வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற கொடுமை எங்கும் நிகழக் கூடாது என்பதற்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்--
இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக