ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

எளிமையாக க் கற்கலாம் ஆங்கிலம்!


சொல்கிறார்கள்


ஆங்கில வழிக் கல்வியை, "கற்க' எனும் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வரும், ஆல்டஸ் அறக்கட்டளை அமைப் பாளர் கீர்த்திவாசன்: பொதுவாக, கல்வி, வசதி வாய்ப்புள்ள குழந்தைகளுக்கும், வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கிடைப்பது கிடையாது. அதனால், கல்வியின் தரம், சமச்சீர் இல்லாமல் உள்ளது. இந்த முரண்பாட்டில், மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தின், சிறு முயற்சி தான், இந்த, "கற்க' திட்டம். ஒரு மாணவனுக்கு முழுமையான கல்வி கிடைக்க வேண்டுமானால், ஆழமான, அடிப்படைக் கல்வி, சரியாக அமைய வேண்டும். அப்போது தான், அவனால், முழுமையான திறமையுடன் செயல்பட முடியும்.மயிலாப்பூரிலுள்ள, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படிக்கும், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் முறையாக ஆங்கில வழிக் கல்வியைத் துவக்கியுள்ளோம். பாட வாரியாக ஆங்கிலம், கணிதம், அறிவியல் என, மூன்று வகுப்பறைகளை பிரித்து வைத்துள்ளோம். ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றாற் போல், வகுப்புகளை மாற்றியமைத்து, அதற்கேற்ற சூழ்நிலையில், பாடங்கள் நடத்தப்படும்.முக்கியமாக, பாடம் நடத்தும் போது, கரும் பலகைப் பயன்பாட்டை, பெரும்பாலும் தவிர்க்கிறோம்; செயல்வழிக் கற்றல் முறை தான். உதாரணமாக, கணிதத்தில் சிறிய எண், பெரிய எண்களை வரிசைப்படுத்த ஐஸ்கிரீம் குச்சிகளை பயன் படுத்தி கற்றுத் தருகிறோம். இந்தக் கற்றல் முறையை, மாண வர்கள் மிகவும் ரசிக்கின்றனர்.இந்த முறையில் சொல்லிக் கொடுக்கும் போது, கடினமான கணக்குப் பாடம் கூட, எளிதாக அவர்களுக்குப் புரிகிறது. ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்கின்றனர். அதேபோல், ஆங்கில வார்த்தைகளை, கணினி வழியாக கற்றுக் கொடுக்கிறோம். ஆங் கிலத்திலுள்ள நாட கங்கள், கதைகள், பெரிய திரை, "டிவி'க்களின் மூலம், காண்பிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம், எளிதில் பாடங்கள் கற்கின்றனர். வறுமையை வெல்ல, விதைகளை விதைக்கிறோம்.

மனிதனுக்கு த் "தானம்' அழகு

 கண் தான விழிப்புணர்வு பற்றி பிரசாரம் செய்யும் ஜெயராமன்: ரோட்டரி கிளப் உதவியுடன், கண்தான விழிப்புணர்வு குறித்த, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். நாமும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, செயலில் இறங்கினேன். கண் தான அவசியம் குறித்து, அனைவரும் அறிந்திருப்பர் என, நினைத்திருந்த எனக்கு, அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவில், 500 கண் வங்கிகள் உள் ளன. 15 லட்சம் பேர், "கார்னியா' எனும் விழி வெண்படலத்தில் ஏற்பட்ட பாதிப்பால், பார்வைத்திறன் இல்லாமல் உள்ளனர். மாற்றுக் கண் பொருத்துவதன் மூலம், இவர்களுக்கு பார்வை தர முடியும்.ஆண்டிற்கு, ஒரு லட்சம் கண்கள் தேவை. கடந்த ஆண்டு மட்டும், 75 லட்சம் பேர், கண் தானம் செய்திருக்க முடியும். இதன் மூலம், 150 லட்சம் கண்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 500 வங்கிகளிலும் சேர்த்து, 40 ஆயிரம் கண்கள் மட்டுமே பெற முடிந்தது.அதிலும், மற்றவர்களுக்கு பொருத்தக் கூடிய நிலையில் இருந்தது, வெறும், 15 ஆயிரம் கண்கள் தான். கண் வங்கியை தொடர்பு கொண்டு, எத்தனை பேர் உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர் எனக் கேட்ட போது, அதிகபட்சம், 4,000 பேர் என்ற தகவல், அதிர்ச்சியாக இருந்தது.கண் தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்னும் எளிமையாக, புதுமையாகச் செய்தால், நிறையப் பேர் கண் தானம் செய்யவும், கண்களை தானமாக பெற்றுத் தரவும் முன் வருவர் எனத் தோன்றியது. அதன் விளைவு தான், எஸ்.எம்.எஸ்., சேவை.கண் தானம் செய்ய விரும்புபவர், 108ஐ தொடர்பு கொண்டால், அவர்கள், அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கண் வங்கிக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவர். மருத்துவக் குழுவினர் வந்து, கண்களை பெற்றுக் கொள்வர். தவிர, கண் தானம் செய்ய விரும்புவோர், தங்கள் பெயர், ஊர் விவரங்களைச் சேர்த்து, 99443-13131 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., செய்தால் போதும்.தொடர்புக்கு: 098341-43650.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக