வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

என்னால் பெற்றோருக்கு ப் பெருமை!




சொல்கிறார்கள்



என்னால் பெற்றோருக்கு ப் பெருமை! இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, இசையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் திவ்யதர்ஷன்: சிறு வயதில் பேச்சு வந்தவுடன், "டிவி'யில் வரும் பாட்டை பார்த்து, "ஹம்மிங்' செய்து கொண்டே இருப்பேன். என் செய்கை, அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இசையில் உள்ள ஆர்வத்தை அறிந்த என் அப்பா, இசை வகுப்பில் சேர்த்து விட்டார். மூன்றரை வயதிலேயே, "கீ போர்டு' பழக ஆரம்பித்தேன். ஒரு வருடத்திலேயே நன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டேன். என் மாஸ்டர், "நோட்ஸ்' தந்தால், அதையும் அழகாக வாசிக்க ஆரம்பித்தேன். என் இசை, எங்கள் பகுதியில் பிரபலமானது. ஒரு முறை திருமண விழாவில், "கீ போர்டு' வாசிக்க ஆள் இல்லாததால், என்னையும், அழைத்துச் சென்றனர். நான் வாசித்தது, அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. வந்தவர்களெல்லாம் பாராட்டினர். அதிலிருந்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்று வாசிக்கிறேன். நான் பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம், பதக்கமும், ஷீல்டும் வென்று விடுவேன். மணப்பாறை கோவில் விழாவில், என், "கட்-அவுட்'டும் வைத்திருந்தனர். என் பெற்றோருக்கு பெருமையாக இருந்தது. என் இசைத் திறமையை பார்த்து, நான் கேட்ட, "கீ போர்டை' என் பாட்டி, 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தார். "நோட்ஸ்' இல்லாமல் மனப்பாடமாக என்னால், 70 பாடல்களை, "கீ போர்டு' மூலம், வாசிக்க முடியும். "மெலோடி'யான பாடல்களுக்கு இசை வாசிப்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியில் கூட, நண்பர்கள் என்னை பாட்டுப் பாடச் சொல்லி ரசித்துக் கேட்பர். என் படிப்பு கெடாத வகையில், இசை பயிற்சிக்கும், நிகழ்ச்சிக்கும் நேரம் ஒதுக்குகிறேன். விடுமுறை நாட்களில் தான் கச்சேரிக்கு செல்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக