வெள்ளி, 24 ஜூலை, 2009

மருத்துவமனையாகிறது முதல்வர் இல்லம் ?




சென்னை, ஜூலை 23: சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லம் எதிர்காலத்தில் இலவச மருத்துவமனையாகச் செயல்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்ட' தொடக்க விழா உரையின் நிறைவாக, முதல்வர் செய்த அறிவிப்பின் விவரம்:- ""இன்றைய விழாவில் உங்களில் ஒருவன் என்ற முறையில் என் சார்பாக ஓர் அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன். பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பும், பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் - கோபாலபுரத்தில் நான் வசிக்கும் ஒரு வீடும் (Street House) (இந்த வீட்டின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி), திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் 14 ஏக்கர் நிலமும்தான் உள்ளது. இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல் அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நேரத்தில் எல்லாம், இப்போது கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்குப் பதிலாக அரசு பங்களா ஒன்றில் வசிக்க வீடு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வரும் பார்வையாளர்களையும் வெளிநாட்டினரையும் என் இல்லத்தில் வரவேற்றுப் பேசுவதற்குக்கூட போதுமான அளவுக்கு இடம் கிடையாது. புகைப்படக்காரர்கள் நின்று படம் எடுக்கக்கூட வசதி இல்லாத நிலை என்பதை தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.இலவச மருத்துவமனை: கோபாலபுரத்தில் நான் வசிக்கும் இந்த இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு, 1968 - ல் என் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளேன். இப்போது அந்த இல்லத்தினை என்னுடைய காலத்துக்குப் பிறகும், என் மனைவியின் காலத்துக்குப் பிறகும் தமிழக அரசுக்கோ அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடைமையாக்குவதென்றும், அந்த இல்லத்தில் ஓர் இலவச மருத்துவமனையினை என் தாய் - தந்தையர்களான அஞ்சுகம் - முத்துவேலர் பெயரில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். இதற்கு என் மனைவி, பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

1/2) இலவச மருத்துவமனை என்பது நல்ல திட்டம். ஆனால், புரட்சித் தலைவர் தம் இல்லத்தில் காது கோளாதோர் பள்ளி நடக்க வேண்டும் என்று விரும்பினார். அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் அனைவரும் அறிந்ததே! போதுமான இடவசதி இல்லையென்று கலைஞரே குறிப்பிடப்படும் இடத்தில் மிகப்பெரும் செல்வர்கள் வசிக்கும் பகுதியில் இலவச மருத்துவமனை நடத்துவதால் ஏழை எளியோருக்கு உரிய பயன் கிட்ட வாய்ப்பிருக்காது. அரசுடைமையாக்கும் பொழுது ஆட்சி மாற்றத்தித்றகு ஏற்ப புறக்கணிப்பும் ஈடுபாடும் அமையும். பல நல்லதிட்ங்களை அறிமுகப்படுத்துவதில் உலகிலேயே முதல்நிலை முதல்வராக இருக்கும் கலைஞர் அவர்கள், தன்னுடைய பெயரில் இருக்கும் சொத்தைத்தான் - அதுவும் தன்னுடைய காலத்திற்குப் பிறகும் தன்னுடைய மனைவியின் காலத்திற்குப் பிறகும் இலவச மருத்துவ மனையாக்க வேண்டும் என்று தேவையில்லையே! எனவே, இப்பொழுதே - தான் வாழும் காலத்திலேயே - தன் குடும்பத்தார் பெயரில் இருக்கும் பல்லாயிரம கோடி உருபாய் சொத்து மதிப்பில் ஒரு பகுதியைச் செலவிட்டுச் சென்னையில் ஏழை எளியவர்களுககுத் தேவைப்படும் பகுதியில் புதிய இலவச மருத்துவமனையை அமைக்க முன்வரவேண்டும். (தொடர்ச்சி

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 3:38:00 AM

2/2) (1/2 இன் தொடர்ச்சி) இல்லையேல் கட்டடம் மட்டும்தான் கொடுத்துள்ளார்; மருத்துவமனைக்குச் செலவழிக்க வேண்டியது அரசு / அறக்கட்டளையின் பொறுப்பு என்று சொல்லப்பட்டு இக்கனவு நனவாகாமலேயே போகும். அவர் இருக்கும்போ்தே அடித்துக் கொண்ட குடும்பத்தினர் பின்னரும் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சரியாகாது. எனவே, கலைஞர் அவர்கள் உடனடியாக அஞ்சுகம் முத்துவேலர் இலவச மருத்துவமனையைத் தான் விரும்பும் வடிவமைப்பில் பல்துறை வசதிகளுடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 3:37:00 AM

Karunanedhi family owns more than Rs.5000 crores properties. Now Karunanedhi playing drama that he don't want this house, what is the use of this house, there are thousands of Goverment hospitals are available already, let Goverment hospitals serve the people. People don't want any corrupt money, he made all the properties by corruption. Karunanedhi tamils traitor because of him we don't get Cauvery water, Mullai Periyar dam problem not solved, Eelam Tamils more than 50,000 people are killed. After doing all the sin his life now saying he will give this house. Karunanedhi made tamil people in begger stage, now people have to get everything free such TV, Rice and others. There is no growth in the state, no employment created, Karunananedhi making tamils life miserable. No tamils will forgive his crime against humanity.

By yogaraja
7/24/2009 3:37:00 AM

BEAUTY FOR TAMIL IS TO TALK AND CRITICIZE DECENTLY. EVEN IF YOU DON'T LIKE OTHERS STAND LETS NOT KINDLY DO AN STREET FIGHT. LETS AT LEAST MAKE A CHANGE IN OUR FUTURE TAMIL COMMUNITY.

By tamizhan
7/24/2009 3:36:00 AM

what ever ravikumar told is 1000% correct. kumara badu nee poi ayya poola sappu

By jayadasan
7/24/2009 3:31:00 AM

guys, please don't use bad words. No need to worry about this news. KK is a writer before politics. Now also he is doing writing/screen play for some movies. Most of the times he is showing his "Actor" face also... Just laugh....Don't take it as serious

By Joe
7/24/2009 3:16:00 AM

idot ravikumar, shut your mouth and ass

By kkll
7/24/2009 1:37:00 AM

mooduda ravikumar. . . . . . . . . .

By Kumaran
7/24/2009 12:59:00 AM

Welcome one Long Live our Beloved CM

By janakiraman
7/24/2009 12:31:00 AM

எடிட்டர் சார்! அய்யா சினிமாவுக்கு எழுதின வசனத்தை சினிமா செய்தியில போடாம முக்கிய செய்தியாக போடுவது ஓவர்!

By ravikumar
7/23/2009 10:58:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக