திங்கள், 19 அக்டோபர், 2009

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:
அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு



சென்னை, அக். 18: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்குமாறு சட்டப் பேரவையில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக சட்டப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடித விவரம்: தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கான ஆய்வரங்குகள் மற்றும் பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கட்சி வேறுபாடின்றி தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தங்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகிறேன். மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு மாநாட்டுக்கென அமைக்கப்பட உள்ள பல்வேறு குழுக்களில் தங்கள் கட்சியின் சார்பாக தாங்களோ அல்லது தங்களது பிரதிநிதி ஒருவரோ இடம்பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான பெயரை அக்டோபர் 25-ம் தேதிக்குள் எழுதி அனுப்பிட வேண்டுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

(3/3) 20. மழலை நிலை முதல் உயர்நிலை வரை தமிழே கல்வி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முதலிய நிலைப்பாடுகளை எட்ட இச்செம் மொழி மாநாடு உதவியதெனில் உலகத் தமிழர்கள் அனைவரும் வரவேற்பர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 3:18:00 AM

(2/3) 10. எல்லா நாட்டு இந்தியத் தூதரக அதிகாரிகளும் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும், 11. தமிழ் இலக்கிய வரலாறும், தமிழ்ப் பண்பாட்டு நாகரிகச் சிறப்பும் எல்லா மொழிப்பாடங்களிலும் சேர்க்கப்பட வேண்டும், 12. தமிழ் இந்தியாவின் மத்திய அரசின் மொழியாக வேண்டும்.13.மத்திய அரசின் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக ஆக்கப்பட வேண்டும், 14. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அனைத்துக் கல்வி நிலையங்களிலம் தமிழ்மொழிக் கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும், 15. தமிழ்நாட்டுக் கோயில்களில் மண்ணின் மொழியாகிய தெய்வ தெய்வ மொழியாகிய தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெற வேண்டும், 16. தமிழ்நாட்டின் உண்மையான ஆட்சிமொழி தமிழ மட்டுமே, 17. தமிழில் இல்லாத ஆணைகள், ஒப்பந்தங்கள், படிவங்கள், பெயர்ப்பலகைகள், பட்டியல்கள், காசோலைகள், கையொப்பங்கள்,செல்லத்தக்கன அல்ல, 18. ஆரவாரக்கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், 19. பிற கலைகளுக்கெல்லாம் தமிழ்க்கலை தாய்க்கலையாக இருப்பது ஆராயப்பட்டு உலகறியச் செய்ய வேண்ணடும், தொடர்ச்சி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 3:17:00 AM

(1/3) மாநாட்டில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றால் ஈழப் படுகொலைகளை மறைக்க மாநாடு என்னும் குற்றச்சாட்டை மூழ்கடித்து விடலாம்; பங்கேற்க வில்லையெனில் விருப்பம் போல் செயல்படலாம். எனவே, இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. எனினும், இம் மாநாட்டின் மூலம், 1. உலகின் மூத்த இனம் தமிழ் இனம், 2. உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, 3. தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம், 4. தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும், 5. மாநாட்டின பொழுது ஒரே நேரத்தில் உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ்மொழித் துறை தொடங்கப்பட வேண்டும், 6. தமிழ்மொழித்துறையை இந்திய மொழித் துறை என வரலாற்றைத் திரித்துஅழைக்கக் கூடாது, 7. இந்திய மொழித்துறை எனத் திரித்து அழைக்கப்படும் தற்போதைய மொழித்துறைகளும் தமிழ் மொழித்துறை என அழைக்கப்பட வேண்டும், 8. ஈழத் தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும், 9. உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் சிக்கல்கள ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும். தொடர்ச்சி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 3:17:00 AM

gunasekaran Thamilan abdul.com - dubai காளிதாசன் செவ்வேலர்-திருப்பூர் நன்றி நன்றி நன்றி

By usanthan
10/19/2009 2:59:00 AM

சிங்கள இனவாத பூதம் மேற்கிளம்பாமல் இருப்பதற்காகவே, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வதற்கு முன்னர் தனது யுத்தக் கப்பல் ஒன்றை கொழும்புக்கு அனுப்பி, போர்ப் பயிற்சியை சிங்களப் படைகளுக்கு வழங்கியது. ஈழத் தமிழர்களை இதே நிலையில் வைத்து தனக்கான போர்க் கருவியாகப் பயன்படுத்தும் நிலையிலிருந்து இந்தியா மாறுவதற்கான எந்த சாத்தியப்பாடும் தென்படவில்லை. இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழக நாடாளுமன்றக் குழுவின் கருத்துக்களும், நடந்து கொண்ட முறையும் இதையே நிரூபிக்கின்றன. இந்த தமிழக நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கிய டி.ஆர். பாலு அவர்களது அணுகுமுறையை அவதானித்த யாழ்ப்பாண ஊடகமான வலம்புரி தனது ஆசிரியர் தலையங்கத்தில் 'முன்பு அனுமான் வந்தனால் இலங்கை அழிந்தது. தற்போது சனீஸ்வரன் வந்துள்ளது' என்று பதிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் கொடுத்து அனுப்பப்பட்ட பொன்னாடை மகிந்தவுக்குப் போர்த்தப்பட்ட போதே அது நன்றாகவே நிரூபணமாகிவிட்டது. இந்த நிலையில், மேற்குலகின் மனமாற்றங்களையும் மனிதாபிமான சிந்தனைகளையும் எமது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான சக்தியாக புலம்பெயர் தமிழீழ மக்கள் வெற்றிகர

By Thamilan
10/19/2009 2:00:00 AM

இந்த நிலையில், மேற்குலகின் மனமாற்றங்களையும் மனிதாபிமான சிந்தனைகளையும் எமது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான சக்தியாக புலம்பெயர் தமிழீழ மக்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்த வேண்டும். அது சாத்தியப்படாமல் போனால், இந்தியாவின் கருவியாகத் தொடர்ந்தும் ஈழத் தமிழர்கள் பயன்படாத வகையில், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை ஈழத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனூடாக தமிழீழம் என்ற இலக்கை அடைய முடியாமல் போனாலும், ஈழத் தமிழர்கள் தமக்கான பாதுகாப்பு அரண்களைப் பலப்படுத்தக் கூடியதாக இருக்கும். இரு தெரிவுகளை மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு இந்தியா விட்டு வைத்துள்ளது! நன்றி - ஈழநாடு

By Thamilan
10/19/2009 1:48:00 AM

2009ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த காமெடி சுவரொட்டி.இலங்கைத் தமிழர்களுக்கு 4 நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு /செருப்பால் அடிக்கனும் கெலைஞருக்கு.usanthan

By usanthan
10/19/2009 1:27:00 AM

..WHAT A BEATIFUL JOKE...THERE IS A FUNERAL HOUSE IN THE NEXT DOOR...THIS LIVING CORPSE IS ORGANISING CONFERENCE OF TAMIL LANGUAGE...FIRST LEARN HOW TO TALK AND WRITE TAMIL THEN LET US SEE....INDIA TAMIL SPEAK TAMINGILAM...AND SUN TV PROMOTE THIS....THIS TV BLACKOUT SL TAMIL NEWS..BUT WITHOUT SHAME SELLING SUBSCRIPTION TO EELAM TAMILS IN EUROPE...BY THE WAY TILL 1966 WHEN THE FIRST INTERNATIONAL TAMIL RESEARCH CONFERENCE WAS ORGANISED BY REV.THANINAYAGAM(THEN HEAD OF TAMIL DEPT., AT UNIVERSITY OF MALAYSIA)NOT A SINGLE SO CALLE TAMILS SCHOLOR IN INDIA DREAMED ABOUT THIS...AGAIN TAMIL BROADCAST IN BBC,RADIO MOSCOW,RADIO PEKING AND PAKISTAN RADIO ALL STARTED BY SRI LANKAN TAMILS WHO SPEAK AND WRITE PURE TAMIL LANGUAGE...WHO KNOWS FOR FREE MEAL THOUSANDS OF BUSLOAD TAMINGILAM SPEAKING INDIAN WILL ATTEND.SHAME ON YOU KARUNANIDHI...FUTURE GENERATION WILL SPIT WHEN THEY HEAR NAME.

By KOOPU
10/19/2009 12:48:00 AM

Its a known fact that students are forced to learn in english in the dravidian parties rule. Dravidian parties has speak lot on tamil language. But there is no contribution by them except few filty writings. None of thema can be read by a family or a metured person.

By B Sivanesan
10/19/2009 12:42:00 AM

can karuna organize the conference in vavvunya?? after vowing to send back the 250000 tamils to the home of their choice... who are these bastards to dictate their will on these people? will he vow to garner world opinion to answer in the international court the killers who were responsible for the massacre of 25000 tamils in 2~3 months?? let him answer tamils in these things first before organizing a tamil conference before solving the most important present problem of tamil.

By durai
10/19/2009 12:08:00 AM

can karuna organize the conference in vavvunya?? after vowing to send back the 250000 tamils to the home of their choice... who are these bastards to dictate their will on these people? will he vow to garner world opinion to answer in the international court the killers who were responsible for the massacre of 25000 tamils in 2~3 months?? let him answer tamils in these things first before organizing a tamil conference before solving the most important present problem of tamil.

By durai
10/19/2009 12:08:00 AM

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே இவர் வாய்ச்சொல்லில் வீரரடி! - பாரதி ஈழப்பிஞ்சுகளின் கதறல் இவர் மஞ்சத்தில் இன்னிசையா? வீழும்தமிழர் உடல்கள் இவர் பஞ்சனைக்கு மலர்களா? சூழும்தமிழ் விதியே தீர்ப்பாய் இவர் மனக்கேட்டினை!

By செவ்வேலர்-திருப்பூர்
10/18/2009 11:59:00 PM

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே இவர் வாய்ச்சொல்லில் வீரரடி! - ஈழப்பிஞ்சுகளின் கதறல் இவர் மஞ்சத்தில் இன்னிசையா? வீழும்தமிழர் உடல்கள் இவர் பஞ்சனைக்கு மலர்களா? மூழும்தமிழ் விதியே தீர்ப்பாய் இவர் மனக்கேட்டினை!

By செவ்வேலர்-திருப்பூர்
10/18/2009 11:44:00 PM

We can say Kalainar Karunanithi is our last(but not least) Tamil scholor now. I dont know, after him, is there is any one who fight for Tamil Language with knowledge in Sanga Tamil will born or not? So until he left this world, we must united under him to grow our ancient Tamil Language. And we should found a succeccor for him to continue the same job. VAALGA TAMIL! VAALGA KALAINAR KARUNANITHI.

By Vj
10/18/2009 11:42:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/18/2009 10:28:00 PM

THERE IS NO STRONG LEADERS TO SUPPORT TAMILS LIKE M.G.R. THATS WHY SRILANGA TAMILS SUFFERING. BY SEMMALAI

By SEMMALAI
10/18/2009 10:24:00 PM

கூடாது. வலிமையான உண்மையான தமிழின தலைவர்களை வெல்ல வைத்து CM ஆக்க வைகலாம். அதுவரை கருணாநிதியை வசைபாடுவது அறிவின்மை. கருணாநிதி நேரடியாக நல்லதும் மறைமுகமாக தீயவையும் செய்திருக்கிரார். முடிவாக மிகுதியால் மிக்கக்கொளல். தன்மகளையே ராஜராஜன் சாலுக்கியனுக்கு கொடுத்தது போல, அசோகனப்போல இலங்கைக்கு தூது அனுப்பி விமானநிலையம் வரை வந்து காத்திருந்தார். நல்லவற்றை செய்யும் போது தமிழர்கள் எதிர்க்க வேண்டாம்

By keeran
10/18/2009 9:37:00 PM

சிலர் தங்களை தமிழர் போல காட்டிக் கொண்டு உலக தமிழ் மாநாட்டையும் எதிர்கின்றனர். உண்மையான தமிழர்கள் இதை எதிர்க்க அவசியமில்லை. இதிலிருந்தே இவர்கள் தமிழ் எதிரிகள் அல்லது தமிழர்களிக்கிடையே பிளவு ஏற்படுத்தும் தீயசக்திகள் என்று. முன்பு கருணாநிதி எது செய்தாலும் எதிர்த்தனர். கருணாநிதி தமிழினதிற்க்கு என்றும் வஞ்சகம் நினைத்ததில்லை. மனித சங்கிலி, சட்டசபை தீர்மானம், கடிதம், உண்ணாவிரதம் இருத்தும், மத்தியரசு எல்லவற்றையும் வஞ்சித்தது. JJ இதில் என்றுமே தானும் செய்யாமல், விமர்சித்தார். கருணாநிதி இதை வேறு விதத்தில் மத்தியரசுக்கு நெருக்கடி கொடுத்து கையாண்டிருக்கலாம். காங்கிரஸ் MP அரூண் ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்திய போது வேடிக்கை பார்த்த மற்ற MPகளை போல மத்திய காங்கிரஸரசு இவரை பொம்மையாக ஆக்கிவிட்டது. மன்மோகன், சோனியாவும் உளவு, ராவின் கைபாவைகளே. ராவின் நாடகத்தயாரிப்புக்கு இவர்கள் கதாநாயகர்கள். இவர்களுக்கு அறிவுரை கூறும் சில வஞ்சகளால் தான் தமிழினம் அழிந்தது. பாஜக போல எதிர்க்க வேண்டாம் என ரா சொல்வதை கேட்டு தன்களுக்கு சாதகமாக நடந்திருக்கலாம். கருணாநிதியின் இயலாமையை கண்டு காறி உமியலாமேயன்றி அவரை எதிர்க்கக்

By keeran
10/18/2009 9:32:00 PM

ulaga tamil manadu vellattum

By mathuram
10/18/2009 8:42:00 PM

May lost in the "battle" NOT in the war, so let us plan for the next phase. We need rejuvination in this time by conducting "tamil world conference" to unite ourself in a forum, plese set aside our difference and make it a "grand success"

By reader
10/18/2009 8:38:00 PM

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே! நீங்கள் செய்வது சரிதானா என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? நீங்கள் "எனது உடன்பிறப்புக்களே" என்று வாஞ்சையுடன் அழைக்கின்ற தமிழினம் அயல்வீட்டில் கூக்குரலில்ட்டு, ஒப்பாரி வைத்து, அழுது புலம்பிக்கொண்டிருக்கும்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த உங்களுக்கு எவ்வாறு, எங்கிருந்து மனம் வந்தது? நீங்கள் நினைத்தால் மத்திய அரசை வழிக்குக் கொண்டுவந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யமுடியாதா என்ன? "பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது" தமிழ்மறை; அருளுடைமை; குறள்-248

By காளிதாசன்
10/18/2009 7:12:00 PM

அவனவன் நொந்து நூலா போய் கெடக்குறான் ... இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லே. தமிழின தலைவன் என்று 'தன்னைத்தானே' அவர் இன்றுமா அழைத்துக் கொள்கிறார்?? போய் 'மானாட மயிலாட' நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யுங்க தலே ... வாடியிருக்கும் நெஞ்சங்களுக்கு சற்று 'குஜாலா'-வாவது இருக்கும்.

By abdul.com - dubai
10/18/2009 7:05:00 PM

இன்று ஓர் செய்தி உலக தழிழ் செம்மொழி மாநாடு ஏன் இந்த மாநாடு அப்படி நடத்த வேண்டிய அவசியம் என்ன.தழிழன் அனைவரும் செத்து மடிந்து கொண்டிருக்கிறான் இந்த வேலையில் தழிழும் செத்து மடிகிறது. இப்படி ஒரு சூழலில் மநாடு தேவை தனா. கண்டிப்பாக சொல்லுகிறேன் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிற்வர்கள் அனைவரும் கருணாநிதியின் நண்பர்கள் தானே தவிர உண்மையான தழிழன் யாருமே கலந்து கொள்ள மாட்டார்கள்.அதையும் கடந்து கலந்துகொள்கிற்வர்கள் தமிழின பகைவர்கள்.

By gunasekaran
10/18/2009 6:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக