வெள்ளி, 23 அக்டோபர், 2009

வீரகாவியமாகிய 21 கரும்புலிகளின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று

22 October, 2009 by admin

2007 அக்டோபர் மாதம் 22ம் திகதி அனுராதபுரம் விமானப் படை முகாம் மீது விடுதலைப்புலிகள் வான் மற்றும் தரைவழியில் மேற்கொண்ட தாக்குதலில் 21 கருப்புலிகள் வீரகாவியமாகிய நாள் இன்று. இலங்கை இராணுவ முகாமின் சில பகுதிகளை பல மணிநேரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கரும்புலிகள் இறுதியில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். இவர்களால் பல போர் விமானங்களும் இலங்கை அரசின் ஆயுதக்களஞ்சியங்களும் தாக்கியழிக்கப்பட்டன.

அம் மாவீரர்களை நினைவு கூரும் இந்நாளில் அவர்களின் இலட்சிய பயணத்தில் நாமும் பங்குகேற்போம் என்ற உறுதி எடுத்துக்கொள்வோம்

அதிர்வு இணையம் இச் செய்தியை காலையில் பிரசுரித்திருந்தாலும், தொழில் நுற்ப்ப தவறு காரணமாக இச் செய்தி பிரசுரமாகவில்லை. அதிர்வின் வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டியதால், இதனை மீள் பிரசுரம் செய்கிறோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக