செவ்வாய், 15 செப்டம்பர், 2009

திருச்சியில் இன்று மதிமுக மாநாடு



திருச்சி, செப். 14: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, திருச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மண்டல மாநாடு செவ்வாய்க்கிழமை (செப். 15) நடைபெறுகிறது. தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தைத் திடலில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் அ. மலர்மன்னன் தலைமை வகிக்கிறார். புறநகர் மாவட்டச் செயலர் ஆர். நடராஜன் மாநாட்டைத் திறந்து வைக்கிறார். அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்திப் பேசுகிறார். மதிமுக பொதுச் செயலர் வைகோ சிறப்புரை நிகழ்த்துகிறார்.

கருத்துக்கள்

தடம் புரளாமல் செல்லும் மதிமுக வின் மண்டல நாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்! பேரறிஞர் அண்ணா அவர்கள வழியில் சென்று தாயகத் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பிற உலகத் தமிழர்களுக்கும் விடுதலை பெற உழைத்து வெற்றி காணட்டும்!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக