சனி, 19 செப்டம்பர், 2009

திமுக அரசில் பங்கு கேட்பதில் தவறில்லை:
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

First Published : 19 Sep 2009 01:57:04 AM IST

Last Updated : 19 Sep 2009 11:55:08 AM IST

திருச்சி, செப். 18: "மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகிக்கிறது. அதுபோல, தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறல்ல' என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு அண்மையில் நிறைவேற்றிய தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் அமலுக்கு வந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்படும். எனவே, இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இலங்கையில் தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் பெரியார் படத்துடன் பிரபாகரன் படத்தையும் சேர்த்து வைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பணம் தமிழகத்தில் ஏராளமான தமிழ் சினிமாக்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். நதிநீர் இணைப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி கூறிய கருத்து அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். நதிநீர் இணைப்பது மூலம் ஏற்படும் பயன்களைப் போல, விளைவுகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் பிடிபட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்திருப்பது காவல் துறையின் நடவடிக்கைகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.


கருத்துக்கள்

1967 இல் விரட்டப்பட்ட கொலைகாரக் காங்.கை அரியணையில் ஏற்றாதது கலைஞர் செய்யும் மிக நல்ல செயலாகும். ஒரு வேளை இவர்களுக்கு அமைச்சர் பதவிகள் அளித்தால் மேலும் புதிய சண்டைக் குழுக்கள் வரும் என சோனியா தடுத்திருந்தால் அவரும் பாராட்டிற்குரியவரே! அடிமைத்தனமும் வன்முறை அரசியலும் உடைய காங். தமிழ் நாட்டில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டால் அதுவே நமது நாட்டின் பொற்காலமாகும். திராவிடநாடு திராவிடருக்கே என்றும் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் புரட்சிக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஈழத்தமிழ் மக்களுக்கே தமிழ் ஈழம் எனக் குரல் கொடுத்துக் களப்போரில் இறங்கியவர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். இருவர் படத்தையும் ஒருசேர வைத்தது மிகவும் பொருத்தமான செயலே. இதற்குக் காரணமானவர்களைப் பராட்டுவோம். ஆனால் இருவரின் பெயர்களையும் உச்சரிக்கக் கூட அருகதையற்றவர்கள் இது குறித்து கூறும் தகுதயுடையவர்கள் அல்லர். எனவே, சிங்கள அரசிடம் இருந்து பணம் வாங்கும் கைக்கூலிகள் குறித்து அரசு தக்க உசாவல் - விசாரணை - மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 2:54:00 PM

Maanam Ketta SRB, JJaya-vidam soram ponavane! 8% vote vachikkittu ADMK, DMK mudugila eri savari seyya vendiyathu, appuram kalai varui vittu ethir aniyil seruvathu, Nalla Congress karanna- Mullai periyaru, Cauvery thanni vaangi kodungalendaa paarkalam.. neenga mattum unga appanukke poranthirunthaaaa?????.Nee, intha vethu vettu Junior Ramadass EVKS ELANGOVAN, Dummi Thanga balu, Thothuttu Mandiriyaana PChidambaram, 20 varusama 1991-la irunthu ADMK,DMK dayavaal jeyikkum deposit kooda vaanga mudiyaatha Vellore Gnana Sekaran ungappanukke poranthirunthaa Rameswaram meenavar pirachanayil nalla mudivai vaangi kodungada paarkalam! Keduketta Congresskaranunga! Nanum arasiyalla irukken solla enga AMMA madiri oru arikkai 3 varusathukku appuram!

By Tanjore Tamilan
9/19/2009 2:42:00 PM

who is preventing Congress from insisting on DMK to give berth in TN Ministry? The deal between Congress and DMK is very clear. DMK will rule alone in TN with the support of Congress and at the Centre, coalition government. If Congress has the guts, let them stand alone or without support of DMK or AIADMK. There are plenty of other parties in TN for congress to have alignment under Congress.

By Anbarasi
9/19/2009 12:25:00 PM

அருமைத் தலைவர் எஸ்.ஆர்.பி. அவர்களே, இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள். உங்களைப் போன்ற நேர்மையான காங்கிரஸ்காரர்கள் குறிப்பாக நெல்லைக் கண்ணன், முக்தா சீனிவாசன், தமிழருவி மணியன் போன்றவர்கள் ஒதுங்கிவிட்டதால்தான் பலர் சண்டப் பிரசண்டம் செய்கிறார்கள். காங்கிரஸ் தமிழ் நாட்டில் வளர வேண்டுமானால் நீங்கள் எல்லாம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கூடா நடப்பை ஒழித்துக் கட்டி சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். வேலூர் ஞானசேகரன், நாகை முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் ஆகியோர் இந்தக் கருத்தை ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாததா நான் சொல்லப் போகிறேன். பெருந்தலைவரை எவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் இவர்கள். இவர்களோடு பதவிக்காக கூட்டு என்றால் அவமானம். காமராஜர் ஆட்சி அமைய வேண்டுமானால் சுயமரியாதையோடு, காங்கிரஸ் பாரம்பரியத்தைக் காத்து தனித்து நிற்க வேண்டும். அது உங்களால் முடியும், செய்யுங்கள் ப்ளீஸ்.

By Adithyan
9/19/2009 11:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக