செவ்வாய், 1 செப்டம்பர், 2009

இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளருக்கு
20 ஆண்டு சிறை



கொழும்பு, ஆக. 31: இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் ஜே.எஸ்.திசைநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
"சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவரும், தனி இணையதளத்தை நடத்தியவருமான ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் (45) தீவிரவாதத்தை ஆதரித்தது உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியதற்காக 2008 மார்ச் 7-ல் திசைநாயகம் கைது செய்யப்பட்டார்.
புலிகளின் வெளியீடுகளுக்கு நிதி சேகரிப்பதில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும், புலிகளின் முக்கிய தலைவர்களுடன் அவருக்கு தொடர்பிருந்ததாகவும் அரசு நடத்தும் நாளிதழ் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டது.
அரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்த லசந்தா விக்ரமதுங்க கடந்த ஜனவரியில் அவரது பத்திரிகை அலுவலகத்துக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் திசைநாயகம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு வருந்தத்தக்க உதாரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா உலக பத்திரிகைச் சுதந்திர நாளான மே 3-ம் தேதி உரையாற்றுகையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

' இம்மென்றால் சிறைவாசம். ஏனென்றால் உயிர்ப்பறிப்பு' என்பதையே கொள்கையாகக் கொண்டு சிங்கள அரசின் படுபயங்கர வன்முறை கொடுங்கோலாட்சி நடைபெறுகிறது. மனித நேய ஆர்வலர்களே எப்பொழுது இதற்கு முடிவு கட்டப் போகிறீர்கள்? சிங்கள நீதித் துறையில ஒரு சில மனித நேயர்களாவது உள்ளமையால் மேல் முறையீட்டில் திசைநாயகம் வெற்றி காணட்டும்! மக்கள் நாயகம் மலரட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2009 4:04:00 AM

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி". உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்". உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை". உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ". அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள். உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள். அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள். மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

By Siva
9/1/2009 3:53:00 AM

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள். உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள். உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது? உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது. உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?". உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு". உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்". உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா". உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?". உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!". உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?". உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி". உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா". உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்". உங்களுக்கு "அதிரடி சி

By Siva
9/1/2009 3:49:00 AM

There is no wondering one media man arrested. So many other things are happening inside. If you compare, what did happened in the past, this is not even a size of mustard seeds. All world are supporting for the State of terrorism of Sri Lanka. Do not worry. watch more fron the all aragons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக