செவ்வாய், 9 ஜூன், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு உதவி: இந்தியா, சீனா உறுதி
தினமணி


கொழும்பு, ஜூன் 8: போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ இலங்கை அரசுக்கு இந்தியாவும், சீனாவும் உறுதி அளித்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மருத்துவ உதவி தொடரும் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழர்களுக்கு உதவுவதற்காக ரூ.5 கோடி தருவதாக சீனா உறுதி அளித்துள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்

பேரினப் பேரழிவுகளை நடத்துவார்களாம். பின் மீதி இருப்பவர்களுக்கு உதவிகள் புரிவார்களாம்! என்ன நாடகமடா இது! அன்றிலிருந்து இன்று வரை பேராசையும் வெறியும் பிடித்த காட்டாட்சி அரசுகளால் பேரினப் பேரழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொடுங்கோலர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. எனவே இவை தொடருகின்றன. இன்றோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும வகையில் மனித நேய ஆர்வலர்கள் ஒன்று திரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்புடையவர்களும் அவர்களுடைய பரம்பரையினரும் பெறும் தண்டனை இனி யாரும் பேரழிவுச் செயல் குறித்து எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்குக் கடுமையாக இருக்க வேண்டும்.


அறத்தாயின் குரலாக இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/9/2009 3:39:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக