வியாழன், 11 ஜூன், 2009

மாநிலத்தன்னாட்சி குறித்து இப்பொழுது கலைஞர் பேசுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் தன்னாட்சி மிக்க மாநிலங்களும் வலிமையான இந்தியக் கூட்டமைப்புமே சிறந்தது. மேலும், இந்துத்துவா என்ற போர்வையில் ஆரிய வெறியைப் பரப்பி வருவதுதான் வன்முறை பரவி இந்தியா துண்டாடப்படக் காரணமாக அமையும். தேச ஒற்றுமையை விரும்பினால் உடனடியாகப் பா.ச.க. தனது ஆரிய வெறியை நிறுத்திக் கொள்ள வேணடும் அதே நேரம் பா.ச.க. சார்பில் உண்மையறியும் குழுவை இலங்கைக்கு அனுப்புவது வரவேற்கத்தக்கது.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2009 3:30:00 AM

ஐயோ என்ன கொடுமை!! காவேரி, பாலாறு, பெரியார் பிரச்சினைகளில் உங்கள் நாட்டு ஒற்றுமை எங்கே சென்றது..... பக்கத்திலே இலங்கைக்காரன் தமிழக மீனவர்களை சுட்டு கொள்கிறான்.... எங்கே சென்றது....... சாதிய முறைகளினால் குமுகம் பிளவு படுகிறதே....... எங்கே சென்றது தேச ஒற்றுமை....... சிதம்பரம் கோவிலில் விடயத்தில் தனது சாதிய முகத்தை காட்டிய சு. சாமீ எல்லாம் நாட்டு ஒற்றுமை பேசி நட்டை கழட்ட போகிறார்கள்.... இந்நாடு கொடுமைகளின் இருப்பிடம்..... அதற்க்கு எண்ணெய் ஊற்றுபவர்கள் நீங்கள்.

By MakizhNan
6/11/2009 3:10:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக