சனி, 15 ஜனவரி, 2011

vegetable sales center: காய்கறி விற்பனை மையங்கள் தொடங்க அரசு முடிவு

எதிர்பார்த்த நல்ல முடிவு. ஆனால் இதற்கு முன்பு கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்பெற்ற காய்கனிகள் வாடி வதங்கி விலை குறைக்கப்படாமல் வீணான நேர்வுகள் உள்ளன. எனவே, முதல் நாள் காய்கனிப் பட்டியல் அளித்தால் அதற்கேற்ப மறுநாள் காய்கனி விற்கப்படும் என்னும் கூடுதல் வசதியை ஏற்படுத்தித்தந்தால் இதனைச் சமாளிக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காய்கறி விற்பனை மையங்கள் தொடங்க அரசு முடிவு

சென்னை, ஜன.14: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய தலைமைச்செயலகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் அப்போது எடுக்கப்பட்டன.இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச்செயலர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தைகளை வலுப்படுத்தவும், கூடுதலாக 25 இடங்களில் உழவர் சந்தைகளைப் புதிதாகத் தொடங்கவும் நடவடிக்கை.சென்னையில் தற்போது கூட்டுறவு அமைப்புகள் மூலமாக ஒரு நாளைக்குச் சுமார் 20 டன் காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை.நியாய விலைக்கடைகள் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் மற்றும் மளிகைப் பொருட்கள் போதிய அளவு இருப்பு வைத்து, எந்த தட்டுப்பாடுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை.சர்க்கரை விலையைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்க, முன்பேர வர்த்தகத்திலிருந்து சர்க்கரையைத் தவிர்க்க மத்திய நிதியமைச்சருக்கு உடனடியாகக் கடிதம்.நீண்டகாலத் திட்டமாக பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டங்களைத் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை.நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலும், உழவர் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காய்கறிகளைப் பயிரிட வாய்ப்புள்ள கிராமங்களைக் கண்டறிந்து, தரமான விதைகளை வழங்குதல் மற்றும் பல்வேறு வேளாண் யுக்திகளை விவசாயிகளிடம் பரப்பி, காய்கறி  சாகுபடி பரப்பளவையும், உற்பத்தியையும் பெருக்கிட தீவிர நடவடிக்கை.வரும்காலங்களில் விவசாயப் பொருள்களின் விற்பனை மையங்களை நவீனமயமாக்குதல், ஒருங்கிணைத்தல், போதிய குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்களைத் தீட்டி  செயல்படுத்தப்பட வேண்டும்.விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பிற துல்லிய பண்ணை சார்ந்த திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நீர்ப்பாசனப் பரப்பை அதிகப்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.முக்கியப் பயிர்களான நெல் போன்றவற்றின் உற்பத்தித் திறனை வட்டார வாரியாக ஆராய்ந்து, திட்டம் வகுத்து, அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்ட தொடர் நடவடிக்கைகள் எடுக்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

இது நல்ல முடிவாக இருந்தாலும் இன்றைய காய்கறி விற்பனையாளர்களை கட்டுபடுத்த முடியாத கையாலாகதனத்தை தான் இந்த முடிவு காட்டுகிறது!
By ஸ்ரீனி ம
1/14/2011 10:52:00 PM
இராசாவிடம் கூறி, தேர்தல் வரை எல்லா வீடுகளுக்கும் காய்கறிகளை இலவச விநியோகம் செய்யலாமே!
By பொன்மலை ராஜா
1/14/2011 7:18:00 PM
இந்த திட்டங்கள் எல்லாமே நகர்ப்புற மக்களின் வசதியை கருத்தில் கொண்டவையே. மானியத்தில் 24 மணி நேர வீட்டு மின்சாரம், மானிய LPG, பஞ்சப்படி, ஊதிய உயர்வு, குறைந்த விலையில் பால், உணவுப்பொருள்கள், காய்-பழங்கள் எல்லாம் இந்த நகர்ப்புற ஒட்டுண்ணிகளுக்கு வேண்டும். வங்கி வசதிகளும் இவர்களுக்கே. கிராமங்களில் ஒழுங்கான மின் வசதி இல்லை. பயிர் செய்ய பாசன வசதி இல்லை. கந்து வட்டியை விட்டால் விவசாயிக்கு வேறு கதி இல்லை. கட்டுபடியாகும் விலை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயியின் கடன் உங்களுக்கு பணி செய்து மடிவதுதானா? மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கெல்லாம் கிடையவே கிடையாதா! சேற்றில் கைவைப்பவர்களைப்பற்றி சோற்றில் கை வைக்கும் பொது நினைத்துப்பாருங்கள்.
By திண்டல் சங்கர நாராயணன்
1/14/2011 5:58:00 PM
VAO- க்கள் இப்போது அவர்கள் ஏரியாவில் என்ன பயிர்கள், எவ்வளவு விளைச்சல், தோராய விலை + கொள்முதல் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்புகிறார்களா? இயலவில்லை எனில், வேளாண்மைதுறை மூலம் எடுக்க முடிவு செய்யப்பட்டதா? கிராம, வட்ட, மாவட்ட, மாநில நிலைகளில் தகவல் சேகரிப்பு மையங்கள் இருக்கின்றனவா? உடனுக்குடன் தகவலை கம்ப்யுடர் வழியே தலைமை செயலகத்திற்கு அப்லிங்க் செய்ய வழி உள்ளதா? இதுமுதல் பணி.இதனை வைத்தே மற்றவை எல்லாம்.
By ASHWIN
1/14/2011 4:14:00 PM
GOOD! I WELCOME THIS SCHEME AND IT SHOULD BE DONE AS EARLY AS POSSIBLE.
By Tamilan from Thailand
1/14/2011 3:39:00 PM
வரவேற்கத்தக்க முடிவு... இந்த நடவடிக்கையால் மக்களுக்கு நியாமான முறையில் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமாயின் இது நிச்சயம் 108 ஆம்புலன்ஸ் சேவையை போன்று நல்ல வரவேற்பை பெறும். மாறாக இதிலும் எவனாவது ஊழல் செய்தால் தமழக மக்களை காப்பாற்ற யாராலும் முடியாது நல்ல முயற்சி....இதனை உடனே செயல்படுத்தினால் சில வாரங்களிலே கூட நல்ல பலன் கிடைக்கும்... மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியவாசியப்போருட்கள் தங்கு தடையில்லாமல் ...அவர்கள் பொருளாதார நிலைமைக்கேற்றாவாறு கிடைக்க வேண்டும்... அதனை செய்பவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க முடியும்
By samy
1/14/2011 2:53:00 PM
If govt participates in production of vegetables, in agriculture the rates may come down to a great extent. Let the Govt think about production , then distribution and sale through its outlets. Agriculture is so neglected in our country. No one wants to do agriculture. There is loss in doing it. Let the farmers produce and give it FREE to Karunanidhi so that he can give free to all. The market is open and buy it ....allow the goods to flow to other states so that farmers get their due for their produce.
By A.Natarajan
1/14/2011 2:25:00 PM
வரவேற்கத்தக்க முடிவு... இந்த நடவடிக்கையால் மக்களுக்கு நியாமான முறையில் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமாயின் இது நிச்சயம் 108 ஆம்புலன்ஸ் சேவையை போன்று நல்ல வரவேற்பை பெறும். மாறாக இதிலும் எவனாவது ஊழல் செய்தால் தமழக மக்களை காப்பாற்ற யாராலும் முடியாது..!
By நரேன்
1/14/2011 2:07:00 PM
நல்ல முயற்சி....இதனை உடனே செயல்படுத்தினால் சில வாரங்களிலே கூட நல்ல பலன் கிடைக்கும்... மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியவாசியப்போருட்கள் தங்கு தடையில்லாமல் ...அவர்கள் பொருளாதார நிலைமைக்கேற்றாவாறு கிடைக்க வேண்டும்... அதனை செய்பவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க முடியும்...
By R.Parthiban
1/14/2011 1:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக