திங்கள், 10 ஜனவரி, 2011

Competitions conducted by Kamban Kazhagam: கம்பன் கழகத்தின் கட்டுரை, பேச்சு போட்டி

கம்பன் கழகத்தின் கட்டுரை, பேச்சு போட்டி

First Published : 10 Jan 2011 05:09:35 AM IST


சென்னை, ஜன. 9: கம்பன் கழகத்தின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் ஜனவரி 30-ம் தேதி நடைபெறுகின்றன.  காரைக்குடி கம்பன் கழகம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்/ப்பட்டுள்ளது.  கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள முழு நேர, பகுதி நேர கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.  இவை தவிர, சிவகங்கை மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கம்பராமாயண ஒப்பித்தல் போட்டிகளும் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.  காரைக்குடியில் உள்ள கம்பன் மணி மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.  இது குறித்து விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்: 94450 22137.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக