சனி, 15 ஜனவரி, 2011

Kalaignar about jaya with cong. : காங்கி. கூட்டணி நம்பிக்கையை இழந்துவிட்டார் செயலலிதா: கருணாநிதி

உண்மைதான். ஆனால், இதனால் அவருக்கு மட்டும்தான் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். மாறாகக் கொலைகாரக் காங்.கின் கையைக் கெடடியாகத் தி.மு.க. பிடித்திருப்பதால் உலகத் தமிழர்களுக்கே அல்லவா ஏமாற்றம் ஏற்படுகிறது. இருவரும் சேர்ந்தேனும் காங்.ஐ ஓட ஓட விரட்டி அடித்து இருக்க வேண்டாமா? தமிழால் தமிழுக்காக - தமிழருக்காக- ஒன்று படாதக் கட்சிகள் பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும்  ஒன்றுபடுகின்றனவே!  
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


காங்கிரஸýடன் கூட்டணி நம்பிக்கையை இழந்துவிட்டார் ஜெயலலிதா: கருணாநிதி

சென்னை, ஜன.14: காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி நம்பிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இழந்துவிட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை புஸ்வாணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளது இந்தப் பழம் புளிக்கும் என்ற கதைதான்.  பிரதமர் மன்மோகன் சிங் சென்னை பயணத்தின்போது நான் அவரைச் சந்தித்தப் பிறகு, நிலைமை மாறிவிட்டது என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.  உண்மையில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதா எந்த அளவிற்கு முயற்சி செய்தார், யார் மூலமாக முயற்சி செய்தார் என்பது தெரியும். ராசாவை கைது செய்தால் மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்றெல்லாம் சொன்னார்.  அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கூட, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை உறுதியாக்கி விடுவேன் என்பதைப் போல சவால் விட்டுப் பேசினார். நல்ல செய்தியை விரைவில் எதிர்பாருங்கள் என்றார்.  ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தி.மு.க.வோடு கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிவித்த பிறகு, ஜெயலலிதாவின் "குட்டு' அம்பலமாகிவிட்டது. உடனே அடுத்த நிமிடமே மத்திய அரசைத் தாக்குகிற முயற்சியிலே ஈடுபடத் தொடங்கிவிட்டார்.  தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள கபில் சிபலை தனது அறிக்கையில் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் உண்மை சொரூபத்தை அறிந்துதான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அவரது உறவைத் திரும்பிப் பார்க்காமல் ஒதுக்கியிருக்கிறது.  காங்கிரஸ் கட்சியோடு எப்படியும் உறவு ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதா, அந்த நம்பிக்கையை இழந்து பரிதாபகரமாக இப்போதுதான் மற்றக் கட்சிகளை குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏறெடுத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.  மீனவர் பிரச்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொன்ற விவகாரம் தொடர்பாக, இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மருத்துவ நுழைவுத் தேர்வு: பொது நுழைவுத் தேர்வு கூடாது, அதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் கருத்து. மீண்டும் நுழைவுத் தேர்வு வந்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதற்கான அனைத்து முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது. மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கூட இந்தத் தேர்வுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறுத்திவைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.  சீனிவாசபுரத்தில் குடிசைப் பகுதி மக்கள் வாழும் நிலத்தை ரியல் எஸ்டேட் நடத்தும் சிலருக்கு கொடுக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக பத்திரிகையில் வந்துள்ள செய்தி உண்மைக்கு மாறானது. அடிப்படை இல்லாத தவறான தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக