வெள்ளி, 14 ஜனவரி, 2011

anbarasu about vaiko: வைகோவை கைது செய்ய வேண்டும்: முன்னாள் எம்.பி. அன்பரசு

காங.நேர்மையாகவும் உண்மையாகவும் நாணயமாகவும் தூய்மையாகவும் சிறப்பாகவும் மனித நேயத்துடனும் அனைத்துத்  தேசிய இனங்களையும் ஒடுக்காமலும் நடந்து கொண்டால் எந்தக் குறுந்தகடு குறித்தும் அஞ்சவேண்டியதில்லையே! வைக்கோ உருவாக்கியுள்ளதாகக் கூறப்படும் குறுந்தகட்டில் கற்பனைச் செய்தியோ பொய்யுரையோ புனைந்துரையோ மிகையுரையோ இடம் பெற வாய்ப்பில்லையே! பிற ஊடகங்களில் வந்ததைத்தானே தொகுத்திருப்பார். பின் ஏன் அச்சம்?  தேர்தலை நேர்மையாகக் கையாளாமல் அரட்டல் உருட்டல் மிரட்டல் கைது சிறைவைப்பு முதலானவற்றைப் பின்பற்றினால் கிடைக்கும் வாக்குகள்கூடக் கிடைக்காமல் போய்விடும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



வைகோவை கைது செய்ய வேண்டும்: முன்னாள் எம்.பி. அன்பரசு
First Published : 14 Jan 2011 03:03:28 PM IST

Last Updated : 14 Jan 2011 03:06:57 PM IST
சென்னை, ஜன.14- மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குறுந்தகடு ஒன்றை தயாரித்துள்ளார் என்றும், எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ தயாரித்துள்ள குறுந்தகடுகளை (சி.டி.) கைப்பற்ற வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வைகோவை கைது செய்ய வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும்.இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது என்று வைகோ கூறிவருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.வைகோவின் ஆலோசனையால் தான் பிரபாகரன் சர்வாதிகாரியாக செயல்பட்டார். இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை மற்றும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக