ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இராசபட்சவைக் கைது செய்ய வேண்டும்: மலேசிய நா.உ.

௧. இங்கிலாந்து விமான நிலையத்தில் காலை ௭.௦௦ மணி முதல் இரவு ௧௦ மணி வரை பல்லாயிரக்கணக்கான மக்கள்  இனப்படுகொலைகாரனுக்கு எதிர்ப்பாகக் கூடியிருந்த போதும் ௧௦ காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிய தமிழர்களை அந்த  அரசே பாராட்டியுள்ளது. சிங்களத் தூதரகத்தை முற்றுகையிட்ட போதும் அதிகாரிகளுக்கு எதிராகத் தாங்கள் போரிடவில்லை எனக் கூறி அவர்களை நலமாக வெறியறே இசைவு தந்துள்ளனர்.  இதனையும் காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். மனித நேயம் மிக்கச் சிங்களர்களும் இங்கிலாந்து நாட்டினரும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்களைததான்  ஓராள் கொச்சைப்படுத்தி எழுதியுள்ளான். எப்போதடா திருந்துவாய் நீ?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
௨.  மலேசிய நா.உ. வேண்டுகோள் சரியானதுதான். இருப்பினும் இங்கிலாந்தில் ஏற்பட்ட  அவமானத்தைத் துடைக்க இந்தியாவே இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் அழைத்துச் சிறப்பு செய்ய ஏற்பாடு செய்யும். இந்தியாவில் மன்மோகனையோ சோனியாவையோ கலைஞரையோ பிற தலைவர்களையோ தாக்கினால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால், பக்சேவி்ற்கு எதிராகப் பேசினால்
சீமான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் அரைத்தீவு சிங்களத்திற்கு அடியாளாகத்தான் செயல்படுகிறது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ராஜபட்சவை கைது செய்ய வேண்டும்: மலேசிய எம்.பி.

கொழும்பு, டிச.4- போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த அறிக்கையில் குலசேகரன் கூறியிருப்பதாவது:லண்டன் வந்த இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழர்களின் எதிர்ப்பால் தனது சகாக்களுடன் தன் நாட்டுக்கு தப்பிச் சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் ராஜபட்சவின் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இனப்படுகொலை புரிந்த ராஜபட்சவுக்கு உலகின் எந்த நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.இனப்படுகொலை புரிந்த சூடான் அதிபரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுபோல் இலங்கை அதிபர் ராஜபட்சவையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்ப் பெண்களை இலங்கையில் ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை விசாரணையை விரைவுபடுத்தி ராஜபட்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் மலேசிய எம்.பி. குலசேகரன் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

ராஜபக்சேவை சோனியா, கருணாநிதி ஆதரவு உள்ள வரை ஒன்றும் செய்ய முடியாது
By சாமிநாதன் திருத்தணி
12/4/2010 10:42:00 PM
மலேசியா தமிழனுக்கு உள்ள உணர்வு, இங்குள்ள தமிழனுக்கு இல்லையே?............
By usanthan
12/4/2010 10:06:00 PM
மகிந்தா நாடு திரும்பி விட்டார். பிரிட்டனுக்கு அவர் வரமாட்டார் பயத்தில் இலங்கையை விட்டு போகமாட்டார் என எழுதிதள்ளிய புலி ஊடகங்கள் அவர் பிரிட்டனில் கைது செய்யப்படவில்லை என்றவுடன் அவரது உரையை நடத்த விடாமல் பண்ணி விட்டோமே வெற்றி எங்களுக்கு என்கிற பாணியில் எழுதித்தள்ளுகின்றன. புலம்பெயர்நாடுகளில் அதிகமான விசர்ப்புலிகள் உள்ள நாடு எது என்றால் அது பிரிட்டனில்தான். குறிப்பாக லண்டனில் உள்ள புலி ஆதரவாளர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. புலிகளின் நிகழ்ச்சிகளுக்கு தமிழ்மக்களை அழைக்கின்ற பாணியே தமிழ்ப்பட வில்லன்களின் அடியாட்கள் கட்டாயம் வரவேணும் என்ன என மக்களை பலவந்தமாக மிரட்டுகின்றமாதியிருக்கும். புலிகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு போகாவிட்டால் இந்த மொக்கன்கள் ஏதும் செய்துவிடுவாங்கள் என்கிற பயத்தில் போகிற தமிழ் மக்கள் அதிகமாக லண்டனில் இருக்கிறார்கள்.
By Also Tamil
12/4/2010 9:59:00 PM
இராசபக்சே வுக்கு எதிரான இந்த கருத்துக்கள் அந்த கொடுங்கோலன் மட்டுமே தமிழர்களை அழித்த மொத்தமும் முதலுமான குற்றவாளி போன்றதொரு தோற்றத்தை பொதுமக்களுக்குத் தருகிறது. அதுவா உண்மை? இங்குள்ள காங்கிரசுக்காரர்களே முதல் குற்றவாளிகள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தமிழன் இப்படியே இருந்தால்... இராசபக்சேவை எதிர்ப்பதற்கு இந்தத் தமிழர்களுக்கு இவ்வளவு துணிச்சல் யார் கொடுத்தது? இராசபக்சேவை எதிர்ப்பவர்களைக் கைது செய்து சிறையில் அடை..! என்று இங்குள்ள காங்கிரசுக்காரர்கள் சாலைமறியல் செய்தாலும் செய்வார்கள்! தமிழன்தான் ஏமாளியும், தமிழன் என்ற உணர்வும் இல்லாதவனாயிற்றே...! காசிமேடு மன்னாரு.
By காசிமேடு மன்னாரு
12/4/2010 7:52:00 PM
யார் இந்த பிரபாகரன்…? தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
By Ramasamy
12/4/2010 7:21:00 PM
A)செய்கையில் காட்டுங்கள். எங்கு முறை இடவேண்டுமோ முறை இடுங்கள்!!!.... "ராஜபட்ச தமிழர்களின் எதிர்ப்பால் தனது சகாக்களுடன் தன் நாட்டுக்கு தப்பிச் சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் ராஜபட்சவின் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது"...Well done my dear london Tamils B)சும்மா இந்த பத்திரிகைகளில் அறிக்கை விடுகிற பாவ்லாவை நிறுத்துங்கள்!!!....Hello Manoharan news in the media is very important, Mr Kulasekaran is doing a good job support him.
By Narayanan-Chennai
12/4/2010 6:23:00 PM
நாம் இன உணர்வை இழந்துவிட்டோம்?????
By ramesh
12/4/2010 5:07:00 PM
செய்கையில் காட்டுங்கள். எங்கு முறை இடவேண்டுமோ முறை இடுங்கள். அல்லது வழக்கு தொடருங்கள். சும்மா இந்த பத்திரிகைகளில் அறிக்கை விடுகிற பாவ்லாவை நிறுத்துங்கள்.
By manoharan
12/4/2010 4:45:00 PM
மலேசியா தமிழனுக்கு உள்ள உணர்வு, இங்குள்ள (தமிழ் நாட்டில் ) தமிழனுக்கு இல்லையே என்பது தான் வருத்தமாக உள்ளது .. தமிழா உன்னை அந்த பரம்பொருள் தான் காப்பாற்ற வேண்டும் ...
By மைந்தன்
12/4/2010 4:23:00 PM
what about union indian govt, Tamilnadu govt and its rulers?
By Paris EJILAN
12/4/2010 3:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக