ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அன்னை தெரசா நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது: கருணாநிதி

ன்னை தெரசா நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது: கருணாநிதி

சென்னை, டிச. 4: அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார்.அன்னை தெரசா விழாவில் அவர் சனிக்கிழமை பேசியதாவது: அன்னை தெரசாவின் அரும்பெரும் தியாகத்தைப் போற்றி, அவர் வழி நடப்பதாக நாம் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டுமே போதாது. எடுத்துக் கொண்ட உறுதியை காற்றிலே பறக்கவிடாமல், தேர்தல் கால வாக்குறுதியாக ஆக்காமல் என்றென்றும் அந்த உறுதிமொழியை நன்றியுடன் நினைத்து நிறைவேற்றுவோம், நடைமுறைப்படுத்துவோம் என்று நானும் உங்களுடன் சேர்ந்து உறுதியேற்கிறேன்.முதன்முதலில் முதல்வராகப் பொறுப்பேற்று பேரவையில் உரையாற்றியபோது மிக, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான். இதில் எத்தனை மிக, மிக என்று வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் வெற்றிக்காகப் போராடுவேன், வெற்றி கிடைக்கும்வரை ஒயமாட்டேன் என்று சூளுரை மேற்கொண்டேன்.சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் நலனுக்காக, உலகத்தின் அன்னை என்று போற்றப்படும் தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது.ஏழைகளைக் கண்டு இரங்கிய மாதரசி அவர். அன்னை தெரசா என்று ஒருவர் மட்டுமே இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது. நலிந்தோருக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தெரசா. உலகுக்கே அன்னையாக விளங்கிய அவரது புகழுக்கு அவர் பெற்ற விருதுகளே சான்று. அவருக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே ஒரு நாளை தேர்வு செய்து நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. அவருக்கு இந்த விழா போதாது.இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் இந்த விழா நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், மத்திய அரசை விட்டுக் கொடுக்காமல், ""அன்னை தெரசாவின் நினைவாக நாங்கள் நாணயத்தை வெளியிட்டுள்ளோம்'' என்றார்.நாணயத்தை வெளியிடுவது மாத்திரம் அல்ல. நாடு முழுவதும் அன்னை தெரசாவின் விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும்.தமிழக அரசைப் பொறுத்தவரை, ஒரு பெரிய கட்டடத்துக்கு தெரசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெரசாவின் புகழ் நிலைக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவற்ற பெண்களின் திருமண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கும் ஏற்கெனவே  அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த டாக்டர் ராய் தனது பிறந்தநாள் செய்தியில், ""என்னை முழுவதுமாக காந்தி, நேரு மற்றும் எனது நெருங்கிய உறவினர்கள் கூட ஆக்கிரமித்துக் கொண்டதில்லை. ஆனால், ஏழைகளின் துயர்நீக்கப் பாடுபடும் அன்னை தெரசா குறித்த நினைவும், எண்ணமும் எனது இதயம், மூளை அனைத்தையும் அணைத்துக் கொண்டது'' என்று தெரிவித்துள்ளார்.அந்த வங்கத்தில் இந்த விழாவைக் கொண்டாடவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவை இல்லை. நாம் விழா கொண்டாடுவதும் வங்கம் கொண்டாடுவதைப் போலத்தான். ஏழை, எளியோரை, பாட்டாளிகளை மனிதர்களாக மதிக்க வேண்டும் எனபதே தெரசாவின் கொள்கை ஆகும். அந்தக் கொள்கையை மதித்து நடப்பதால் அவருக்கு விழா கொண்டாட நமக்குத் தகுதி இருப்பதாக நாமே கருதுகிறோம். தெரசா வாழ்ந்து, மக்களுக்காக பாடுபட்ட மேற்கு வங்கத்தில் இன்னமும் கை ரிக்ஷா வண்டிகள் ஓடுகின்றன. ஆனால், தமிழகத்தில் அவற்றுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே, தகுதியோடு இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். நம் அளவுக்கு சில மாநிலங்கள் கொண்டாடா விட்டாலும் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும். நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றாலும், மனித தெய்வமாக வணங்கக் கூடியவர் அன்னை தெரசா' என்றார் முதல்வர் கருணாநிதி.முன்னதாக அன்னை தெரசாவின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
கருத்துகள்

ஹா ஹா ஹா ஹா ஹா ........................ஹா ஹா ஹா ஹா ...............................ஹா ஹா ஹா.............................................ஹா ஹா ...........முடியல வயிறு நோவுது..............ஹா ஹா ஹா ஹா .......
By தமிழன்
12/5/2010 12:41:00 PM
ஒட்டு காக பேசும் கருணா, ராஜ வூழல் திசை திருப்ப கருணா செய்யும் நாடகம். தமிழர்களே விளிழ்து கொள்வீர்
By basarie
12/5/2010 12:40:00 PM
அன்னை தெரசா அவர்கள் ஏழை ,மற்றும் அநாதை குழந்தைகளுக்காக சேவை செய்தார்களே தவிர பிற்ப்படுதப்பட்டோர்,மிக பிற்ப்படுதபட்டோர்,மிக மிக பிற்ப்படுதப்பட்டோர் மிக மிக மிக பிற்ப்படுதப்பட்டோர் என்று பார்க்கவில்லை .அரசியலுக்காக அன்னையின் பெருமையை சிறுமைப்படுத்தாதீர்கள் கலைஞரே
By சாமி
12/5/2010 12:22:00 PM
Thalaivar reminds 3 issues 1) Even the centre forget the minorities we are here to celebrate 2) Kai rickshaw West bengal (Left ) has no " thakuthi " 3)I am only the person following Mother Therasa's policy Ellam Spectrum paduthum padu ,Thalaivar Thaguthi manithaneyam pesugirar
By sekar
12/5/2010 11:34:00 AM
சரி!!! சரி!!! விடுங்கப்பா அவரு எதாவது பேசிட்டு போறாரு ,,,,,,,, பாவம் !!!!,,,,,,,,
By MUTHU
12/5/2010 11:25:00 AM
மு ச...வுக்கு மட்டும் அருகதை இருக்கிறதா? //அது உண்மை தான் என்றாலும், அதை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை. நீயும் ஈழ தமிழர்களை கொன்ற பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டும். // ஈழத்தமிழனை கொன்றவன் கொன்றவன் என்று சொல்லி சொல்லியே ராஜபக்சேவுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலில் வாக்களித்தீர்களோ? எதிரிக்கு எதிரி நண்பன் என்று சரத் பொன்சேகாவை ஆதரித்தீர்களோ? அவர் என்ன தடவியா கொடுத்தார்? இப்போது டக்ளஸ், ஆறுமுக தொண்டைமான் இவர்கள் எல்லாம் இலங்கை அமைச்சர்களாக ராஜபக்சேவுடன் கைகோர்த்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் யார்? அங்குள்ள தமிழர்கள் எல்லாம் என்ன? தேர்தலையா புரக்கணித்தார்கள்...அதிபரை ஜெயிக்கவைக்கவில்லை...என்ன நீ மட்டும் தான் தமீமீமீல்லனா? நீங்கள் எத்தனை சதவீதம் உங்கள் நாட்டில் உள்ள மொத்த தமீலர்களில்...? முதலில் உன் வீட்டு அரசியலை பார் அப்புறம் அடுத்த வீட்டிற்குள் மூக்கை நுழைக்கலாம். உன் வீட்டிலேயே உனக்கு ஆதரவு இல்லை. என்ன? தமிலா...? சரியா?
By Es
12/5/2010 10:46:00 AM
As the elections for TN assembly is shortly approaching, this gentleman will play more magic just to gain the vote bank of minority community. Instead of wasting his time to plead the Union government for Mother Terrassa's centenary celebrations, let this gentleman consider the welfare of common men who suffering from power-cut, price rise of commodities, etc. No body will bother if the Union government fails to pay attention on Mother Terrasse or her centenary celebration.
By Umashankar. K
12/5/2010 10:15:00 AM
அன்னை தெரசாவை பற்றி உச்சரிக்க எந்த அருகதையும் இல்லை இந்த முத்துவேல் கருணாநிதிக்கு. சீக்கிரம் பதவியை விட்டு விலகு.
By மு. ச. chagla
12/5/2010 9:34:00 AM
for vote,,,,
By imran
12/5/2010 9:28:00 AM
அன்னை இன்று இருந்தால் தினகரன் ஏற்ரிப்பு , தா கீ கொலை பற்றி என்ன நினைப்பர். சில குடும்பம் வாழ , அப்பாவிக்கள் பலியைக் பற்றி என்ன நெனிபர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை கொலை கொள்ளை அட்டிக்க உரிமை இருக்கிறது. என்று நேநிபர்ரோ ?
By Pandiyan
12/5/2010 9:19:00 AM
அய்யா யாருக்காக இந்த neethi போதனைகள்? உங்களுக்கு நீங்களே solli கொள்ளுங்கள்.. அதன் padi நடந்துகொள்ள muyarchiyaavathu செய்யுங்கள்.. தியாகம் என்ற சொல்லை ucharikka கூட தகுதி இல்லாத நிலையில் தான் இன்று ungaluthu செயல்பாடு இருக்கிறது. arasu பணத்தில் ௫ ருபாய் எடுத்து மக்களுக்கு செயல் திட்டம் அறிவித்து விட்டு ஐநூறு ருபாய் எடுத்து தனது சந்ததிக்கு சேர்த்து வைப்பதன் பெயர் தியாகம் அல்ல... திறுடு.. கொள்ளை... nambikkai துரோகம்.....
By இளந்தளிர் - மதுரை
12/5/2010 8:50:00 AM
யோவ் ! இப்போ அன்னை திரேசா தினம் கொண்டாடனும் என்பாய்! பின் அன்னை சோனியா தினம் கொண்டாடனும் என்பாய்! நிறுத்துய கதை வசனம் எழுதுவதை!
By Indian
12/5/2010 8:30:00 AM
kalaingar can try another 30minutes fasting against central govt. High drama aasaami!!
By SRV
12/5/2010 7:49:00 AM
மனித உயிர்களை நேசித்த கடவுள் போன்ற அன்னை தெரசா வாழ்ந்த இந்த பூமியில் மனித நேயம் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் எல்லாம் தங்களை தங்கள் அடிமைகளால் 'அன்னை', 'அம்மா' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்துக்கொள்கின்றதுகள்.
By மரமண்டை
12/5/2010 6:56:00 AM
மற்ற உயிரினங்களுக்கு இல்லாத நிறைய சிறப்புகள் மனித இனத்துக்கு உண்டு. அந்த மனித இனத்திலேயே சிறந்து விளங்குபவர்கள் அவ்வப்போது இந்த மண்ணில் தோன்றுவதும் உண்டு. அந்த சிறந்தவர்களுக்கே சிறந்தவராக வந்து தோன்றிய அன்னை தெரசா அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவோம். அவரது நல்ல பல குணங்களில் ஒன்றை யாகிலும் வாழ்நாளில் கடைபிடிப்போம் என்று இந்த அவரது நூற்றாண்டு நாளில் சபதமேற்போம்.
By மரமண்டை
12/5/2010 6:53:00 AM
கேப் கேட்ச போதும், வோட்டு ஆகீடிவாரூ .
By அண்ணா துரை
12/5/2010 6:52:00 AM
"வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது " பின்னே ராசாவை ராஜினாமா பண்ண வைத்தால் என்ன சொல்லுவதாம்
By mpm
12/5/2010 5:54:00 AM
கருணாநிதி தாத்தா, கருணாநிதி தாத்தா, நீங்கள் கேட்டவரா, நல்லவரா
By Jothi
12/5/2010 5:34:00 AM
ஒட்டுககாக
By Cholan
12/5/2010 5:32:00 AM
வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது. !!!???? அய்யா யாரை சொல்லுறார் ????
By துரை
12/5/2010 5:23:00 AM
அன்னை தெரசாவின் தொண்டு பாராட்டிற்குரியது. என்றாலும் அதன் அடிப்படை சமயம் சார்ந்ததே. எனவே, அவரை மதித்தாலும் அவரது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட வேண்டா என இந்திய அரசு கருதியிருந்தால் அது சரியே. மேலும் இலங்கையில நடைபெற்ற படுகொலைகளுகு்க்கு எதிராக மனித நேய ஆர்வலர்கள் அறிக்கை ஒன்றில் கையொப்பம் இட வேண்டியவர்களிடம் அதற்கு மறுப்பு தெரிவித்தவர் இவர். என்ன இருந்தாலும் பக்சே புத்தர் போர்வையில் உள்ள கிறுத்துவர்தானே. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழின வளர்ச்சிக்கும் பாடுபட்ட அறிர்ஞர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தமிழக அரசின் கொள்கையாக இருந்தும் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாத கொடும் போக்கை மாண்புமிகு முதல்வரிடம் சுட்டிக்காட்டி நினைவு படுத்தப்போவது யார்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2010 5:21:00 AM
தமிழக மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல் படுத்தும் தங்களை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் இதற்காக தாங்கள் துவண்டு விடமாடீர்கள் இன்னும் பல தமிழக முன்னேற்றத்திற்கு திட்டங்களை செயல் படுத்த தங்களுக்கு சக்தியை தரும் படி எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
By swathi
12/5/2010 4:41:00 AM
அது உண்மை தான் என்றாலும், அதை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை. நீயும் ஈழ தமிழர்களை கொன்ற பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டும்.
By tamilan
12/5/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக