வாஷிங்டன், அக்.22: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் புதிதாக விடுத்த கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.அமெரிக்க-பாகிஸ்தான் இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட அமெரிக்கா தீவிரமாகப் பாடுபட்டு வருகிறது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதிலும் முனைப்பாக உள்ளது என்று குரேஷி கூறியிருந்தார்.காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு வருவது போல் குரேஷியின் பேச்சு அமைந்திருந்தது.இது, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. குரேஷியின் கருத்து குறித்து அமெரிக்கா என்ன சொல்கிறது என்பதை அறிய விரும்பியது.இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே, குரேஷி சொல்வது போல் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவில்லை. தலையிடவும் விரும்பவில்லை. காஷ்மீர் பிரச்னை என்பது இந்திய-பாகிஸ்தான் இடையேயான பிரச்னையாகவே ஆரம்பத்தில் இருந்து அமெரிக்கா கருதுகிறது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.காஷ்மீர் பிரச்னையை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கோரிக்கையை முன்வைக்கவில்லை. இதனால் அந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் பேச்சுக்கு இடமில்லை என்றார்.இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை அமெரிக்கா மீண்டும் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேலும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுங்கள், தலையிடுங்கள் என்று பாகிஸ்தான் வலியுறுத்தக்கூடாது என்பதை உணர்த்திவிட்டது.காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும், அதன் கோரிக்கையை அமெரிக்கா தொடர்ந்து நிராகரிப்பதும் தொடர்கதையாய் உள்ளது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:29:00 AM
10/23/2010 4:29:00 AM


By thoodu
10/23/2010 12:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/23/2010 12:21:00 AM