ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மதுரை அ.தி.மு.க. கூட்டம் முடியும் வரை அமைதி காக்க வேண்டும்: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை, அக்.15: மதுரையில் அதிமுகவினர் கூட்டம் நடத்தி முடிக்கிற வரையில், திமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.  அங்கே தி.மு.க.வினர் அந்தக் கூட்டத்தைக் கலைக்கவும்,அவருக்கு ஆபத்து விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், அதனை எச்சரிக்கையாக்கி ஏராளமான சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  அதற்கு எதிரான சுவரொட்டிகள் அ.தி.மு.க.வினரால் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் ஒட்டப்பட்டிருக்கிறதாம்.  இந்த இரண்டுமே அரசியல் நாகரிகத்துக்கு அடியோடு எதிர்ப்பான செயலாகும். இதன்காரணமாக, இரு சாராரிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக காவல் துறையினர் விழிப்புடன் இருந்து வருகின்றனர்.  மோதல் ஏற்படுவதற்கான தடயம் இருக்கக்கூடாது. அவ்வாறு மோதல் ஏற்படுத்தும் வகையிலான தடயங்களை ஆளுங்கட்சியினரோ, எதிர்க்கட்சியினரோ யார் ஏற்படுத்தினாலும் ஒரே விதமான குற்றச்சாட்டுக்கும், தண்டனைக்கும் ஆளாவார்கள். இந்த நிலைப்பாட்டுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காமல் செயல்பட்டு வருகிறது.  இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் இருக்கின்ற ஆத்திரக்காரர்கள் எவராயினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், நகரின், நாட்டின் அமைதி காப்பதும் அரசுக்கு இலக்கணம் ஆகும். இது அரசுக்கு மாத்திரமல்ல, எதிர்க்கட்சிக்கும் மற்றும் எல்லா கட்சிகளுக்கும் உரிய நடுநிலை இலக்கணம் ஆகும்.  மதுரையிலே ஏதாவது சம்பவம் நடக்கக்கூடும் என்றும், அதைத் தடுக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அதிமுக கோரியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  ஆனால், சி.பி.ஐ. நடவடிக்கை எடுப்பதற்குள்ளாகவே, காவல் துறையை சிலர் குற்றம் சொல்லியும், குறை கூறியும், திமுக அரசு மீது வீண் பழி சுமத்தியும் வருகின்றனர். அதற்கு பக்கபலமாக சில கட்சியினரை இணைத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் அதன் பொருள்தான் என்ன?  இப்படிப்பட்ட பிரசாரங்களால் பெருங்கூட்டம் சேர்க்க வேண்டிய நிலையில் எதிர்க்கட்சி இல்லை. அதன் வலிவும், மக்கள் ஆதரவும் எவ்வளவு என்பதும் நமக்கு தெரிந்திருப்பதைப் போலவே, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.  இதற்கிடையே நம் மீது ஓர் பழியைச் சுமத்துவதன் மூலம் அவர்கள் பெறப் போகும் பயன் என்ன?  எதிர்க்கட்சியினர் வன்முறை, வன்முறை என்று எச்சரிக்கைக் கூச்சல் போடுவது ஒருவேளை, இவர்களின் வன்முறை ஆயுதத்தை நம் மீது வீசுவதற்குத் தானோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.  எனவே, மதுரையிலே அவர்களின் (அதிமுக) கூட்டம் நடந்து முடிக்கிற வரையில், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற அஹிம்சாவாதியாக (திமுகவினர்) இருக்க வேண்டும் என்று முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

முதல்வரின் நல்ல நோக்கம் நிறைவேற உடனடியாக மதுரையை விட்டுத் தி.மு.க.வின் முதல் இரு நிலைத் தலைவர்களையும் தீவிரத் தொண்டர்களையும் வெளியேறச் செய்யவும் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் கலவரத்தை உண்டு பண்ணி விட்டுப் பின் ஆட்சியைக் கலையுங்கள் எனக் கத்திப்பேசும் நிலை வரலாம் எனக் கனவு காண்போருக்கு அதுவே சரியான பதிலடி. மதுரையில் கூட்டம் அமைதியாக நடந்தால் இரு கட்சிகளுக்குமே பெருமை என்பதுடன் மதுரை மக்களுக்குப் பெரும் மன அமைதியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:56:00 AM
நான் உங்களை (திமுக‍.வினரை) அமைதியாயிருங்கள் என்று சொன்னல் அதன் உள் நோக்கம் உங்களுக்கு புரியுமல்லவா? கவணமாக செயல்படுங்கள். நீங்கள் செய்வதற்கு சாட்சியில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நம் கையில் காவல் துரையும் மற்ற அரசு அதிகாரிகள் அனைவரும் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் 20% போனஸ்வேறு அரிவித்துள்ளேன். எனவே வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு உங்களின் இருப்பிடத்தை ஒரு 3 நாளைக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு நான் வேறுஒரு இலவச அறிவிப்பை சொன்னால் முட்டாள்மக்கள் பழையதை மறந்துவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன்.. கழக கண்மணிகளே! கவனமாக செய்யுங்கள். எத்தனை சேதம்வந்தாலும் நமெக்கென்ன????
By Boomi
10/16/2010 5:01:00 PM
Potta paiya Karunaanithi!!!!!!! Valga!!!!!!Kollai kootta thalaivan Karunaanithi!!!!Valga,THIRU MUTTALKAL KALAGAM!!!!!!! VALGA
By Indian
10/16/2010 2:11:00 PM
கருணாநிதி கடிதத்தின் சாரம் இதுதான் ! " திட்டமிட்டபடி மிரட்டல் கடிதங்களுடன் ...கொடிய ஆயுதங்களுடன் ...கூறிய வார்த்தைகளுடன் களகம் விளைவித்து எதிர் கட்சியினரை அச்சுறுத்தி பொதுமக்களை விரட்டி அடிக்கும்படி பயிற்ச்சியளித்து அனுப்பப் பட்ட குண்டர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் ! தற்பொழுது சிபிஐ போலிசார் தீவிர கண்காணிப்பு செய்கிறார்கள் ! எனது ஆருயிர் மகனும் மதுரை ரௌடியும் ஹார்லிக்ஸ் திருடன் என்று வரலாற்றில் பெரும் புகழுடனும் விளங்குபவரிடம் உடன் தொடர்புகொண்டு சூழ்நிலைக்குத் தக்கபடி புதிய வியூகம் வகுத்து சிபிஐ கண்ணில் மண்ணைத் தூவி மதுரையை கலக்கு கலக்கு என்று கலக்கவும் ! பத்திரம்...மாட்டிக்காதீங்க !!! @ rajasji
By Indian
10/16/2010 2:07:00 PM
KALAIGER IS A SEASONED POLITITION. THAT IS WHY HE IS REQUESTING HIS OWN PARTY PEOPLE TO MAINTAIN LAW AND ORDER. WHERE AS JAYA IS A ACTOR CUM POLITISION.WE CAN NOT EXPEC THE SAME FROM HER.
By KADOTHKAJAN
10/16/2010 11:34:00 AM
கருணாநிதி கடிதத்தின் சாரம் இதுதான் ! " திட்டமிட்டபடி மிரட்டல் கடிதங்களுடன் ...கொடிய ஆயுதங்களுடன் ...கூறிய வார்த்தைகளுடன் களகம் விளைவித்து எதிர் கட்சியினரை அச்சுறுத்தி பொதுமக்களை விரட்டி அடிக்கும்படி பயிற்ச்சியளித்து அனுப்பப் பட்ட குண்டர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் ! தற்பொழுது சிபிஐ போலிசார் தீவிர கண்காணிப்பு செய்கிறார்கள் ! எனது ஆருயிர் மகனும் மதுரை ரௌடியும் ஹார்லிக்ஸ் திருடன் என்று வரலாற்றில் பெரும் புகழுடனும் விளங்குபவரிடம் உடன் தொடர்புகொண்டு சூழ்நிலைக்குத் தக்கபடி புதிய வியூகம் வகுத்து சிபிஐ கண்ணில் மண்ணைத் தூவி மதுரையை கலக்கு கலக்கு என்று கலக்கவும் ! பத்திரம்...மாட்டிக்காதீங்க !!! @ rajasji
By rajasji
10/16/2010 9:33:00 AM
Well said Vijaysarabeswaran. Look at the drama he and his family are enacting! Take care Tamils. Now it is time you did something to throw away both the centre and state government and don't be fooled this time by their promises
By John Christopher
10/16/2010 8:42:00 AM
மதுரையிலே அவர்களின் (அதிமுக) கூட்டம் நடந்து முடிக்கிற வரையில், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற அஹிம்சாவாதியாக (திமுகவினர்) இருக்க வேண்டும் it shows that terrorist cum story writer can act as jesus.
By VIJAYASARABESWARAN
10/16/2010 6:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக