சனி, 23 அக்டோபர், 2010

தேர்தலில் திமுக போட்டி ஏன்? - கருணாநிதி விளக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் தலைவரும், முத
சென்னை, அக்.22: பெரியார், அண்ணா தந்த திராவிடக் கொள்கைகளைக்  காப்பாற்றுவதற்காகத்தான் தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறோமே தவிர, நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார்.   சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தி.மு.க.வினருடனான கலந்துரையாடல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியது:  இந்த ஆய்வுக் கூட்டம் நிர்வாகிகளைப் பேசச் செய்து வேடிக்கைப் பார்ப்பதற்காக நடைபெறவில்லை. தி.மு.கவை வலுப்படுத்துவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது;   தேர்தல் ஓட்டுகளுக்காக அல்ல. பெரியாரும், அண்ணாவும் இந்த இயக்கத்தை உருவாக்கி எங்கள் கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்கள் என்றால், இந்தக் கைகளிலே ஓட்டுகளைப் பெற்று, தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சியின் கொள்கையை விட்டுவிட்டு, லட்சியத்தை விட்டுவிட்டு ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று நினைக்கும் யாரும் தி.மு.க.வில் இருக்கும் தகுதி படைத்தவர்கள் அல்ல. இந்த லட்சியம் காப்பாற்றப்பட, கொள்கை உறுதிபட இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால், முடிந்த வரையில் பயன்படுத்திக்கொள்கிறோம். ஒருவேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம்.  இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதில் வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் தி.மு.க. வரும் தேர்தலிலே வெற்றி பெற முடியாது. தி.மு.க.வினுடைய வெற்றியில் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி இருக்கிறது. பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தி.மு.க. வெற்றி பெற்றால்தான் நிலைக்கும். இல்லாவிட்டால், அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய்விடும். தி.மு.க. ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அப்படி வருகிற ஆட்சி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருந்தால் தமிழகத்திலே மூட நம்பிக்கை படர்ந்துவிடும். தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று கருதுவதற்குக் காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.  இந்த இயக்கத்தைக் காப்பாற்றினால்தான், இதனுடைய மூலாதாரக் கொள்கைகள் காப்பாற்றப்படும். பெரியார் விழா, அண்ணா நூற்றாண்டு விழா,  நூற்றாண்டு நூலகம் ஆகியவை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால் நடைபெற்றிருக்க முடியுமா? நாளைக்கு ஒரு வேளை - அது நடக்காது, நடக்கக் கூடாது - தி.மு.க. மாற்றப்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால், அந்த நூலகத்தை இடித்து தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டிற்கு, தமிழனுக்கு ஏற்பட வேண்டும் என்று எண்ணலாமா? கோவை தமிழ்ச் செம்மொழி மாநாடு, தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு விழா ஆகியவை தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால்தான் நடைபெற்றன. இந்த ஆட்சி போய்விட்டால், இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சயமாக அண்ணா கனவாகிவிடுவார். பெரியார் கடந்த காலமாகிவிடுவார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

2 / 2 ) பெரியாரின் தமிழ்நாடு தமிழர்க்கே கொள்கை கைவிடப்பட்ட பின்பு அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கையும் குடும்ப ஆட்சி எதிர்ப்பும் கைவிடப்பட்ட பின்பு அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பயனில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இடைத் தேர்தலில் பரப்புரை செய்த பெருந்தலைவர் காமராசரைச் சாடியவர் அறிஞர் அண்ணா. ஈழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற பொழுதும் கொலைகாரர்களுடன் கூட்டணி வைத்து பதவி அறுவடை செய்து கொண்டு அவர்களின் இலட்சியத்தைக் காப்பாற்றத்தான் ஆட்சி என்றால் எள்ளி நகையாட மாடடார்களா? ஆட்சிச் சுவையை இழக்க ஆயத்தமாக இல்லை ; எனவேதான் தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஒத்துக் கொள்ளலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (முன் தொடர்ச்சி 1/2 காண்க)
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:15:00 AM
1 / 2 ) தமிழ் என்னும் சொல்லின் சிதைவுரு திராவிடம் என்னும் பொருளில் திராவிடம் கையாளப்படவில்லை. தமிழ்க்குடும்ப இனம் என்னும் பொருளில் திராவிடம் எனத் தமிழ் நாட்டில் மட்டும் குறிக்கப்படுகிறது. அந்த வகையில் பிற தென் மாநிலங்களில் திராவிட உணர்வு ஊட்டப்படவில்லை. அவர்கள் அயல் மொழியான ஆரியத்தைப் போற்றுகிறார்கள். மூலத்தாய் மொழியான தமிழைப் பகை மொழியாகக் கருதுகிறார்கள். தமிழினத்தையும் பகை இனமாகவே கருதுகிறார்கள. அவ்வாறிருக்க திராவிடக் கொள்கையைக் காப்பாற்றத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழர்க்கே தலைமை என்னும் கொள்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கேற்ப தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தொடர்ச்சி 2/2 காண்க)
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:14:00 AM
தமிழ் என்னும் சொல்லின் சிதைவுரு திராவிடம் என்னும் பொருளில் திராவிடம் கையாளப்படவில்லை. தமிழ்க்குடும்ப இனம் என்னும் பொருளில் திராவிடம் எனத் தமிழ் நாட்டில் மட்டும் குறிக்கப்படுகிறது. அந்த வகையில் பிற தென் மாநிலங்களில் திராவிட உணர்வு ஊட்டப்படவில்லை. அவர்கள் அயல் மொழியான ஆரியத்தைப் போற்றுகிறார்கள். மூலத்தாய் மொழியான தமிழைப் பகை மொழியாகக் கருதுகிறார்கள். தமிழினத்தையும் பகை இனமாகவே கருதுகிறார்கள. அவ்வாறிருக்க திராவிடக் கொள்கையைக் காப்பாற்றத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழர்க்கே தலைமை என்னும் கொள்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கேற்ப தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பெரியாரின் தமிழ்நாடு தமிழர்க்கே கொள்கை கைவிடப்பட்ட பின்பு அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கையும் குடும்ப ஆட்சி எதிர்ப்பும் கைவிடப்பட்ட பின்பு அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பயனில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இடைத் தேர்தலில் பரப்புரை செய்த பெருந்தலைவர் காமராசரைச் சாடியவர் அறிஞர் அண்ணா. ஈழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற பொழுதும் கொலைகாரர்களுடன் கூட்டணி வைத்து
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:11:00 AM
Please Karuna, stop your noncence talking, How many year still keep taking same thing, You can not further defend your bad politics in the mane of graet Periyar & Anana Are you tamilan, Just think youreslf, where yuu wend hide our own tamil people when they have been dying in EElam We know your ugly politics,when your comfortable in place of Cheife mnister you will forhget everthing except your famiy but when you are come to crticalthen sart think about Anans, Periayar, Tamilan Sory this is enough, we are counting your life to be end
By Anbu
10/23/2010 4:07:00 AM
என்ன இது முக கொள்கை அது இது என்று பேசுகிரார். முகவின் திராவிடம், தமிழ், தீண்டாமை போராட்டம் எல்லாம் தன் குடும்பத்திர்க்கு தமிழ் நாட்டிர்க்கு அல்ல.
By Appan
10/23/2010 4:01:00 AM
In terms of corruption Karuna is way, way better than Jeya. Atleast his family is enjoying and also facing the public in elections. What about the human waste eating pigs Mahadevan, Venkatesh, Divakaran, Kaliyaperumal, Sasi, Ravanan,Ilavarashi, etc, etc. What did they do either for TN or ADMK party, except born in Sasi's family. rajasji you can go and eat these pigs waste, but do not try to make other people to eat it.
By PA Valarmathi
10/23/2010 3:18:00 AM
யோவ் ...என்னைய்யா உளறுற !....என்ன ஒரு கால் ஜெயலலிதா வந்து விட்டால் !...புரட்சித் தலைவி முதல் அடி வெற்றிகரமாக கோவையில் எடுத்துவைத்தார்கள்! உனக்கு நுரையீரல் அவுட் ஆயிடுச்சு ! திருச்சியிலே இரண்டாவது அடி எடுத்து வைத்தார்கள் ! உனது கல்லீரல் காணாமல் போய் விட்டது ! மதுரையிலே மூன்றாவது அடி எடுத்து வைத்தார்கள் ! உனது கிட்னி சட்னியாயிருச்சு ! வரும் தேர்தலோடு உனது இதயம்.....இல்லை நீ பேரறிஞர் அண்ணாவிடமிருந்து ஏமாற்றி திருடிய இதயம் விடை பெற்றுக்கொள்ளும் ! தமிழ் தமிழ் இனம் என்று இனி எந்த தமிழனையும் நீ ஏமாற்ற முடியாது ! அண்ணா ...பெரியார் என்று சொல்லும் தகுதியினை நீ என்றோ இழந்து விட்டாய் ! தமிழ் இனத்தை அடிமைப் படுத்தி சுரண்டிக் கொண்டிருக்கும் உன்னை....கட்சியினரை வஞ்சித்து உன் குடும்பத்தினர்கள் அனைவரையும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்து தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்ச வாய்ப்பளித்த உன்னை.... அண்ணாவின் ஆன்மா ..பெரியாரின் ஆன்மா மன்னிக்காது ! இதனை ஒவ்வொரு தமிழர்களும் நன்கு அறிவர் ! உனது அரசியல் மோசடி இனி எடுபடாது ! குடும்பத்துடன்..கொள்ளைக் கூட்டத்துடன் நேரத்தோடு விடைபெறு !!! @ rajasji
By tamilatchi
10/23/2010 2:39:00 AM
Shut up your mouth. Just tell the people of Tamil Nadu why the hell you went to Delhi, immediately after the two parilament elections? To get posting for Anna and Periyar family people? All the political parties now a days contesting the elections to win it and then loot the people. Nobody today is working for people. Just for themselves and for their family. Just accept that fact and shut up.
By PA Valarmathi
10/23/2010 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக