ஞாயிறு, 17 அக்டோபர், 2010

தமிழை வளர்க்க ஆசிரியர்கள் தேவை: தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கோரிக்கை


சென்னை, அக். 15: தென்னாப்பிரிக்காவில் தமிழை வளர்க்க ஆசிரியர்கள் தேவை என்று 150 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டுக்குச் சென்ற தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தென்னாப்பிரிக்காவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களால் குடியமர்த்தப்பட்ட இந்தியர்கள் ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட 50 பேர் கொண்ட குழுவாக இந்தியா வந்துள்ளனர்.  அந்தக் குழுவின் தலைவர் லாசர் பிள்ளை சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:  இந்தியாவில் தமிழகம், ஆந்திரம், மகராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 1860-ம் ஆண்டு கரும்புத் தோட்ட வேலைக்காக தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்டனர்.  இவ்வாறாக தென்னாப்பிரிக்காவில் குடியேறி 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு விழா எடுத்துள்ளோம். அந்த விழா தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 21-ம் தேதி மோசர் மபிதா என்ற இடத்தில் நடைபெற உள்ளது.  இப்போது தென்னாப்பிரிக்காவில் 15 லட்சம் இந்திய வம்சாவழியினர் வாழ்ந்து வருகிறோம். இதில் தமிழ் வம்சாவழியினர் மட்டும் சுமார் 10 லட்சம் பேர். இப்போது 3 மற்றும் 4-ம் தலைமுறையினர் வாழ்ந்து வருகிறோம். எனவே 150-ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக 50 பேர் கொண்ட குழுவினர் இந்தியா வந்துள்ளோம். முதலில் ஆந்திரம் சென்ற நாங்கள் ஹைதராபாதில் முதல்வர் ரோசய்யாவை சந்தித்தோம். மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறியுள்ளார். ஆந்திர பயணத்தை முடித்துக் கொண்ட நாங்கள் வெள்ளிக்கிழமை தமிழகம் வந்தோம். தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.  தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பேசினால் நாங்கள் புரிந்து கொள்வோம். ஆனால் அதை எழுதவோ, படிக்கவோ தெரியாது. எங்களது குழந்தைகளுக்கு தமிழை கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைந்து விட்டது. எங்களது தலைமுறையினர் தமிழை கற்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

மொரீசசு தமிழர்கள் ஏமாற்றம் அடைந்தது போல் தெ.ஆப்பிரிக்கத் தமிழர்களே நீங்களும் ஏமாற்றம்அடையாமல் இருக்க வேறு முயற்சியை நாடுங்கள். கண்டிப்பாக உங்கள் ஆர்வம் போற்றக் கூடியது. இதே நாளிதழில் தினமணி ஆசிரியர் கூறியுள்ளது போல் மொழிதான் நம் அடையாளம். எனவே, எப்பாடுபட்டேனும் தமிழ் கற்கும் ஆர்வத்தைத் தளரவிடாமல் நம்ப வைத்துக் கழுத்தறுப்போரை நம்பாமல், உண்மைத் தமிழார்வலர்களை நம்புங்கள். அடுத்த தலைமுறையில் உங்களை நாடி நாங்கள் வந்து தமிழ் பயில வேண்டிய மாற்றம் வந்தாலும் வரலாம். வளர்க உங்கள் தமிழர்வம்! வெல்க உங்கள் முயற்சி! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:40:00 AM
4/4) தொடர்ச்சி: எனவே, மொரீசசு தமிழர்களே! உங்களுக்குத் தமிழ் பயில வேண்டும் என்று ஆர்வம் இருப்பின் தமிழக மக்களை நம்பாதீர்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள உதவியுடனும் இணையம் மூலமும் தமிழ் படிக்க வழிவகை செய்து கொள்ளுங்கள். அதுவே ஏற்ற எளிய வழியாக இருக்கும். பேச்சிலே மட்டும் தமிழன் எனக் கூறிக்கொண்டு செயலிலே அயலவராக உள்ள எங்கள் யாரையும் நம்பாதீர்கள். 50 ஆண்டுகளுக்கும மேலாக நம்ப வைத்துக் கழுத்தை அறுத்த பணியை இப்பொழுதும் தப்பாமல் செய்து ஏமாற்றுவோம். மாட்டோம் என்று சொல்ல மாட்டோம். ஆனால் உதவ மாட்டோம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:35:00 AM
3/4) தொடர்ச்சி: ஆனால் செம்மொழி அறிந்தேற்பு வழங்கப்பட்ட பின்பும் நம்மால் தங்களைத் தமிழின் வேர்வழி கிளைத்தவர்களாக எண்ணி மகிழும், தமிழகம் வந்து தங்களின் மூதாதையர் இடங்களைத் தேடிக் கண்டு களிப்புறும், தமிழை எவ்வாறேனும் தங்கள் தலைமுறையிலாவது கற்பிக்க வேண்டும் என்று துடிப்புடன் விளங்கும், மொரீசசு மக்களுக்குத் தமிழ் கற்பிக்க வகை செய்ய முடியவில்லை. காரணம் ஆட்சியாளர்கள் யாராக இரு்நதாலும் தமிழ் வளர்ச்சியில் காட்டும் அலட்சியத்தில் ஒற்றுமை இருப்பதுதான். தொடர்ச்சி காண்க. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:35:00 AM
2/4) தொடர்ச்சி: அடுத்த ஆட்சியில் தமிழிசை ஆசிரியர்கள் கேட்டார்கள். ஒரே ஒருவர் அனுப்பப்பட்டார். அந்தப் பெண்மணி தன் இனத்திற்குரிய கடமையைத் தவறாமல் ஆற்றி சமசுகிருதப்பாடல்களைக் கற்பித்தும் வானொலிகளில் சமசுகிருதப் பாடல்களைப் பாடியும் ஒலிப்பேழைகள் போட்டும் தவறாமல் தமிழ் ஒலிக்காமல பார்த்துக் கொண்டார். 1998 இல் தாராபுரம் சுந்தரராசனைத் தமிழிசை ஆசிரியராக அனுப்பப் பரிந்துரைத்தும் தேவையற்ற கேள்விகள் அடுத்தடுத்துக் கேட்கப்பட்டுப் பாவம் அவர் கனவு நனவாகாமல் மறைந்து போனார். அக் கோப்பும் தூக்கி எறியப்பட்டது. செம்மொழி என்ற ஏற்பு இல்லாமலேயே நம்மால் உலகெங்கும் 140க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சமசுகிருதம் கற்பிக்க முடிகிறது. இந்திதான் தேசிய மொழி என்ற பொய்யான போர்வையில் உலகெங்கும் இந்தி கற்பிக்க முடிகிறது. தொடர்ச்சி காண்க. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:34:00 AM
1/4) 1967 இற்கு முன்பிருந்த காங். ஆட்சியின் பொழுதும் இவ்வாறு கோரிக்கை வைத்தனர். இந்திய அரசு நீங்கள் இந்தியர் எனக் கூறி இந்தி கற்பிக்க வசதி செய்து தந்ததே தவிர தமிழக அரசு தமிழ் கற்பிக்க வசதி செய்து தரவில்லை. நாங்கள் எங்கள் நாட்டில் தமிழ் படிக்கவும் இங்கு வந்து தேர்வு எழுதவும் வசதி செய்து தாருங்கள் எனக் கேடடார்கள். ஆய்வு செய்வதாக் கூறிக் காலங்கடத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் நம்பிக்கை வந்தாலும் ஒரு முன்னேற்றமும் இல்லை. மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரனார் காலத்தில் 3000 தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதுபோல் தொடங்கினார்கள். கிடப்பில் போடப்பட்டது. தொடர்ச்சி காண்க. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 3:34:00 AM
tamil natila tamil ilai pina epadi ungaluku utavathu
By tamil tai
10/17/2010 1:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலக்குவனார் திருவள்ளுவன் அடுக்கடுக்காகத் 
தெரிவித்துள்ளதைப் பார்க்கும் பொழுது தமிழ் மீது எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை என்பது புரிகிறது. தென் ஆப்பிரிக்காவிலேயே தமிழ்க்கல்விக்கான பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கத் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் முயல வேண்டும்.
By thamizhan
10/17/2010 9:01:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக