வியாழன், 21 அக்டோபர், 2010

கம்யூனிஸ்டுகள்தான் ஏமாறுவார்கள்: முதல்வர் கருணாநிதி

சென்னை, அக்.20: அதிமுகவின் நிழலில் இருப்பதைப் போல் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள், நிச்சயமாக ஏமாறுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியது: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறைகளைக் கூறலாம்; குற்றம்சாட்டலாம். அதுதான் ஜனநாயகம். இதை அண்ணா காலத்திலிருந்து தி.மு.க.வில் பின்பற்றி வருகிறோம். இந்த இயக்கத்துக்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு. அந்தச் சோதனைகளை எல்லாம் தாண்டி, வெற்றிகளை தி.மு.க. குவித்து வருகிறது. திராவிட இயக்கம் வேறு மாநிலங்களிலும் பரவ வேண்டும்; நம்முடைய கொள்கைகளைப் பிற மாநிலத்தவரும் உணர வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது மிக மிக முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒற்றுமை வர வேண்டும்: தி.மு.க.வின் வெற்றிக்கு தடைபோட வேண்டும் என்று சில கட்சிகள், குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் இடம் தரக் கூடாது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மீதும், அமைச்சர்கள் மீதும், கட்சியினர் மீதும் சில குறைகள் சொல்லப்பட்டன. கொள்கைக்குப் புறம்பாக நடந்துகொண்டார் என்றோ, லட்சியத்திற்கு எதிராக நடந்துகொண்டார் என்றோ பெரிய குறைகள் எதுவும் சொல்லப்படவில்லை. எனக்கு ஒரேயொரு குறை உள்ளது. உங்களுக்குள்ளே இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும் என்பதுதான் அந்தக் குறை. அந்த ஒற்றுமை ஏற்பட்டு, அது நிலைத்துவிட்டால், ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது. இதை நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.  மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் பேச்சு, ஓர் கம்யூனிஸ்ட் இதழில் பெரிதாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர், பழங்குடியின மக்களின் நிலங்களை ஜெயலலிதா அபகரித்துள்ளார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்னிடம் மனு அளித்தனர். அவர்கள் நடத்தும் பத்திரிகையில் தான் மதுரை கூட்டம் தொடர்பாக பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பெரிய கட்சி அ.தி.மு.க.தான் என்பதைப் போலவும், அதனுடைய நிழலிலே தாங்கள் இருப்பதைப் போலவும் கம்யூனிஸ்டுகள் காட்டிக்கொள்கிறார்கள். இதில் ஏமாறப்போகிறவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நிச்சயமாக கம்யூனிஸ்டுகள்தான் ஏமாறுவார்கள். நாம் ஒற்றுமையோடும், வலிமையோடும், எந்தக் கணத்திலும் நிதானம் இழக்காமல், நேர்மையான முறையில் தி.மு.க.வுக்கு தொடர்ந்து தொண்டாற்ற  வேண்டும். அவ்வாறு தொண்டாற்றினால், யாராலும் நம்மை அசைக்க முடியாது.  இந்தக் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் குறை கூறிப் பேசியிருந்தால் அதை இந்த இடத்திலேயே மறந்துவிடவேண்டும். தி.மு.க.வில் நண்பர்களாக நீங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி. தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், நிதியமைச்சருமான க.அன்பழகன், கட்சியின் பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி, தி.முக. தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான சுப.தங்கவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

எனவே, தலைவரின் வேண்டுகோளை ஏற்று அழகிரி, தாலின்,மாறன் குடும்பத்தினர்,கனிமொழி ஆகியோர் தங்களில் யார் பெரியவர் என வேறுபடாமல் ஒற்றுமையாகச் செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 3:20:00 AM
!) ஒரு ஊருல ஒரு மிகப் பெரிய திருடன் இருந்தான் ! இரவு முழுதும் ஊரில் திருடி பகல் முழுதும் பிரியாணி தின்று சாராயம் குடித்து குட்டிகளுடன் கும்மாளம் போட்டு அட்டூழியம் செய்வான் ! அவனது பக்கத்து வீட்டுக் காரன் பரம ஏழை ! பசியோடு இருந்தாலும் கண்ணியமாக நேர்மையுடன் வாழ்ந்தான் ! திருடன் பக்கத்து வீட்டு உயர்ந்த மனிதனை திருட்டுத் தொழிலுக்கு கூப்பிட்டான் ! ஆனால் அந்த மனிதனோ திருடனை முற்றாக நிராகரித்து விட்டார் ! திருடன் சொன்னான் இன்று நான் பல லட்சங்களை திருடப் போகிறேன் நீ என்னுடன் வராததால் ஏமாறப் போகிறாய் என்று கிண்டல் செய்தான்!அதையும் பொருட்படுத்தாமல் அந்த மனிதன் பசியுடன் படுத்திருந்தான் ! அடுத்தநாள் திருடனின் வீட்டில் திருட்டுப் பணத்தை பங்குபோட்டுக் கொண்டிருந்தார்கள் ! போலீஸ் வந்தது...வேட்டி சட்டைகளை உருவி எறிந்து விட்டு கோவணத்துடன் விட்டு வாங்கோ வாங்கென்று வாங்கியது ! அப்புறம் முட்டிக் கால் போடச் சொல்லி சங்கிலியால் பிணைத்து நாயை இழுத்துக் கொண்டு போவது போல் இழுத்துச் சென்றார்கள் ! இப்பொழுது யார் ஏமாந்தவன் ? பக்கத்து வீட்டுக் காரன் சிரித்துக் கொண்டான் !..( thodarchiyai 2 / ..ல் காண்க ) @ rajasji
By rajasji
10/21/2010 2:29:00 AM
2 ) இப்படியாக இன்று கருணாநிதி ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடுவதற்கு...லஞ்ச லாவண்யா வியாபாரத்திற்கு ...கம்யுனிஸ்ட்களை கூட்டு சேர்க்க முயற்சிக்கிறார் ! இதற்க்கு தியாக வரலாறுகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் படாது ! விளாத்தி குளம் முன்னாள் தி மு க M L A ரவிசங்கரை திருடும் இடத்தில் மக்கள் பிடித்து துவைத்து போலீஸ் வசம் ஒப்படைத்து இன்று திருடனாக தி மு க வின் சுய ரூபத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறான் ! இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளார்கள் ! இப்படித்தான் இனி வரும் நாட்களில் கருணாநிதியின் சுயரூபம் தெரியப் போகிறது ! சாயம் வெளுக்கப் போகிறது ! புரட்சி வெடிக்கப் போகிறது ! இதனை நன்கு அறிந்த கம்யுனிஷ்டுக்கள் ஏமாறமாட்டார்கள் ! இனி சாதாரண மக்களைக் கூட கருணாநிதியால் ஏமாற்ற முடியாது ! உனது சகாப்தம் முடிந்து விட்டது ! நீ ஒரு காற்றுப் போன பலூன் ! @ rajasji
By rajasji
10/21/2010 2:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக