வியாழன், 22 ஜூலை, 2010

கொழும்பில் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து


கொழும்பு, ஜூலை 21- கொழும்பில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக்க தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கொழும்பு பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும், இதனால் திட்டமிட்டு அரசு இவ்வாறு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்திருக்கலாம் என்றும் ரவிகருணாநாயக்க கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றதி்ல் இருந்து நடைபெறும் தொடர் அவலம்தான் இது. வாக்குரிமை பறிப்பு! குடியுரிமை மறுப்பு! வாழ்வாதாரம் பறிப்பு! உடைமைகளும் உயிர்களும் பறிப்பு! பாவம் ஈழத் தமிழர்கள்!எந்த நாட்டிலும் உரிமையில்லாத அடிமை இனத்தைச் சேர்ந்தவர்களாகி விட்டாரகள். இந்திய அடிமைகளை எண்ணி ஏமாறுகிறார்கள்! சிங்களர்களிலேயே உண்மையாகப் புத்தர் வழியில் வாழ எண்ணும் மனித நேயம் மிக்கவர்கள் தோன்றினால்தான் உரிமை வாழ்வு பெறுவர்.அந்நாள் விரைவில் வருவதாக! 
வருத்தத்துடன இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:28:00 AM
Uunited States of America says United Nations have no power for the juridiction about the war crime. They Just help Ban Ki moon to understaand about the war crimes or not war crime. Good luck UNs.
By Murugan
7/22/2010 12:38:00 AM
thedipaar.com
By ki
7/22/2010 12:35:00 AM
Reconciliation key to peace -US The visiting US Assistant Secretary of State for South Asia and Central Asia, Robert O Blake says that he is pleased that the LTTE has been defeated. Speaking to journalists in Colombo he said that Sri Lanka has a great opportunity to gain long lasting peace and stressed the importance of resettling all internally displaced persons as soon as possible. Blake who is on a day’s visit to Sri Lanka said that "key part of reconciliation will be to assure accountability to redress past wrongs" While expressing confidence in the government's reconciliation efforts he said that the expert panel appointed by UN Secretary General Ban Ki-Moon could provide valuable inputs into it. Blake pointed out that the UN expert panel has no investigative or judiciary powers and it only has an advisory role. Blake said, "A last pillar of reconciliation will be to advance democracy and human rights" Blake who was the former US ambassador to Colo
By Murugan
7/22/2010 12:34:00 AM
1st of all 10,000 Tamils votes cancelled by the Srilankan Governemt. resemble, in ten years time, whole srilankan Tamils votes will be cancelled.Only sinhala people will have votes in Srilanka in whoile Island. India is resposible for this unscrupolous task in Srilanka. India broke the Tamil nations back bone. There no more Tamil will be alive in Srilanka as well as India. Sorry for Tamil Hindu people.
By Samlim
7/22/2010 12:23:00 AM
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒருசிலதினங்களிலே கொன்று குவித்த சிங்கள பாசிச அரசின் கவுரவ விருந்தினராகவே அசின் அந்த பகுதிகளுக்கு வியயம் செய்தார் என்பதை நாம் எண்ணிபார்க்கவேண்டும். உண்மையில் இலங்கை தமிழர்களாகிய நாம் வெறும் மருத்துவ வசதிகளுக்கும், உணவுக்கும் ஏங்கிக்கொண்டிருக்கவில்லை. அரசு சுதந்திரமாக வர அனுமதித்தால், புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழ் மருத்துவர்கள் பறந்துவர தயார் நிலையிலேதான் இருக்கிறார்கள். வன்னியின் இறுதி பொழுதுகளில் உணவில்லாமல், மருந்தில்லாமல் எம்மவர்கள் சாவுடன் தத்தளித்த வேளையில் எவராவது அரசின் தடைகளை மீறி வன்னிக்குள் சென்றிருந்தால் நிச்சயமாக வரவேற்றிருப்போம். தற்போது உலகின் கண்டன கணைகளுக்கும் விசாரணை கமிஷன் களுக்கும் பயந்து தமிழர்களின் மேல் பாசம் உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அரசுக்கு வக்காலத்து வாங்கவே இப்படியான இனத்தை விற்கின்ற நடிகைகள் வருகைதருகிறார்கள். நிச்சயமாக யாழில் அசினின் வருகையால் மக்கள் கொதித்துப்போய் உள்ளதே உண்மை. அரசு வற்புறுத்தி அழைத்து வந்திருந்த மக்களே அசினுடன் பேசுவதற்கு நிர்பந்திக்கபட்டார்கள் எங்களுக்கு தேவையானவை எல்லாம் நிம்மதியான உர
By niththilan
7/21/2010 11:33:00 PM
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மன்னார் பொலிஸாரால் மீட்பு! இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 1 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேற்படி ஹெரோயின் போதை பொருளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 மணியளவில் மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையிலான பொலிஸ் குழுவினரே போதை பொருளை கைப்பற்றியதோடு அதனை வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர். ஒரு கிலோ கிராம் எடையை கொண்ட மேற்படி போதைப்பொருள் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என்றும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் (20.07.2010) மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ம் திகதிவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறும் நீதிபதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By Musthafa
7/21/2010 5:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக