ஹைதராபாத், ஜூலை.21: மகாராஷ்டிர அரசு தர்மாபாதில் தங்களை கைது செய்து அரசியல் கைதிகளைப் போல் நடத்தியதாக தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.தங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்த முயற்சித்ததாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைப் போல் தங்களை நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டினார்.தன்னுடைய 32 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கொடூரமான நிலையை இதுவரை சந்தித்ததில்லை என சந்திரபாபு நாயுடு கூறினார்.முதல்வர் ரோசய்யா, இதுவரை ஆந்திரா பெற்றிராத திறமையில்லாத முதல்வர் என்ற சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அண்டை மாநிலத்தவரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும்போது ரோசய்யா பார்வையாளராக மட்டுமே செயல்பட்டார் எனத் தெரிவித்தார்.கடவுளின் கருணையாலும், மகாத்மா காந்தியின் ஆசிர்வாதம் இருந்த காரணத்தாலும்தான் மகாராஷ்டிராவிலிருந்து தெலுங்குதேச எம்எல்ஏக்கள் உயிருடன் திரும்பியதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:17:00 AM
7/22/2010 3:17:00 AM


By niththilan
7/21/2010 11:38:00 PM
7/21/2010 11:38:00 PM


By niththilan
7/21/2010 11:37:00 PM
7/21/2010 11:37:00 PM


By Sivaraman
7/21/2010 7:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/21/2010 7:32:00 PM