வியாழன், 22 ஜூலை, 2010

மெட்ரிக் பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடம்: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்


காஞ்சிபுரம், ஜூலை 21:  தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்திள்ளார்.ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அவர் தலைமை தாங்கி பேசியது:கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். பல மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் மாணவர்கள் படித்து விட்டு வருகின்றனர்.இவர்கள் கல்லூரிக்கு வந்து எப்படி தமிழ் படிப்பது? மெட்ரிக் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக படிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கல்லூரிக்கு வரும்போது தமிழை படிக்கும்போது எளிதாக இருக்கும்.இதுபோல் மற்ற மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியை ஒரு பாடமாக படிக்கின்றனர். தமிழகத்திலும் அதுபோல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தாய்மொழியை படிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்க மாட்டார்கள். கல்லெறி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். மாணவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

உண்மையாகவே கூறி இருப்பார் என எண்ணிப் பாராட்டி வரவேற்போம். அதுபோல் அவர் செல்லும் பொழுது சமற்கிருத முழக்கங்கள் எழுப்புவதை நிறுத்தி விட்டுத் தமிழ்ப் பாக்கள் முழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவாரம், திருவாசகம், திருமொழி, திருமந்திரம், திருவருட்பா என எண்ணற்ற தமிழ் இறைப்பாடல்கள் இருக்கும் பொழுது தம்மைத் தமிழில் பாடுமாறு அறிவுறுத்திய கடவுள் மொழியாகிய தமிழை விட்டு விட்டு அயல்மொழியாகிய சமற்கிருதம் முழங்கச் செல்வதுதான் உயர்வு என்னும் மூட நம்பிக்கையைக் கைவிடவேண்டும். அவர் சார்ந்த அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாட்டை மட்டும் முன்மாதிரியாக நடைமுறைப்படுத்தட்டும்! 
வாழ்க உலக முதல் மொழியாகிய அன்னைத் தமிழ் மொழி! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/22/2010 2:47:00 PM
அய்யா திரு ஜயேந்திர சிகாமணியே, போய் உங்க அடி பொடிக்கிட்ட சொல்லி கோவிலில் பூஜையை தமிழில் நடத்த சொல், பிறகு மற்றத்தை கவனிப்போம்.
By Paris EJILAN
7/22/2010 2:27:00 PM
The views expressed by the respected swamiji is very correct.I agree with his stand and I request the authorities of technical universities in tamilnadu also to consider the implementation of one language paper tamil as compulsory and also to medical courses. Because they are the persons to practice their profession in Tamilnadu. By Prof.Dr.Syed shabudeen.P.S.
By Syed Shabudeen
7/22/2010 12:00:00 PM
JAYA JAYA SHANKARA! HARA HARA SHANKARA! ACAARIYAR VALHA! AMMAYAR OLIHA!
By SANGU IYER
7/22/2010 11:25:00 AM
What HIS Holiness has said is absolutely correct. HE has mentioned that they should have it as subject so that everyone knows to read/write and speak their mother tongue. Read properly the news before commenting like politicians.
By Ramanan, Dubai
7/22/2010 10:57:00 AM
சமஸ்கிருதச் சாத்தானே, கோயில்களில் பூணூல்களை தமிழில் ஓதச் சொல் முதலில்.
By ravivararo
7/22/2010 10:22:00 AM

திமுக எம்எல்ஏ வின் மகனே செம்மொழி யை விட தேவநகரி மொழியே சிறப்பானது என்றும் அதனா லேயே அந்த மொழியில் இந்திய ரூபாயின் வடிவத்தை அமைத்ததாக நக்கீரன் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிஎச்டி பட்டம் பெற மட்டுமே செம்மொழி உதவும் என்பது அவரது கணிப்பு. சாமானிய மக்களின் பிழைப்புக்கு ஆகாத மொழிபாடம் படித்து என்ன பயன்? அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அது பிழை ப்புக்கு வழி செய்யலாம்! எத்தனை நூறு கோடிகள் செம் மொழி மாநாட்டில்? முன்னேறியது யாருடைய நிலை? மக்களுக்கு தெரியும் எது பிழைப்புக்கு உதவும் என்று.
By Unmai
7/22/2010 9:50:00 AM
sathan vetham othutu
By raja
7/22/2010 7:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக