ஞாயிறு, 18 ஜூலை, 2010

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் கைது


சென்னை, ஜூலை 17: தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் உயிரிழந்தார். இதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான சீமான் தலைமையில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை காலை 10.30 முதல் 11.30-க்குள் நடத்துமாறு மாநகர போலீஸôர் நிபந்தனையின் பேரில் அனுமதி அளித்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி இந்த ஆர்ப்பாட்டம் மாலை 3.15 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக, அவர் மீது ஐபிசி 153-ஏ, 188 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் மாநகர போலீஸôரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி சீமான் கைது செய்யப்பட்டார். இதன்பின் இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னையில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
கருத்துக்கள்

உலகிலேயே அடிமை எண்ணம் மிகுதியாகக் கொண்டவர்கள் தமிழர்களே. கட்சி அரசியல் அல்லது சாதி வேறுபாடு காரணமாக வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றாலும் இன உணர்வில் கிளர்ந்தெழுவோர் ஒரு சிலராகத்தான் இருப்பர். இச் சூழலில் சீமானின் பேச்சைக் கருத்தில் கொள்வதாயின் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் போதுமானது. பாதுகாப்பு இல்லை யென்றால்தான் அவர் கூறிய நிலைப்பாடு. அதுவும் ஆரவாரப் பேச்சாகத்தான் கருத வேண்டும். எவ்வாறிருப்பினும் சிங்களர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக ஆக்கிப் பேசினால் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது என்றால், நாளும் மடியும் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது என்ன சட்டம் பாயும்? எந்தப் பிரிவில் தண்டனை வழங்குவார்கள்? மன்பதை நலத் திட்டங்களால் பெயர் வாங்கும் அரசை மாற்ற வேண்டும் எனக் காவல்துறையினர் முடிவெடுத்து விட்டார்கள் போலும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:01:00 AM
சீமானை கைது செய்ததில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி பங்கு மிக பெரியது ஆகும்... தமிழர் நலனை அடுகு வைத்து பிழைப்பு நடத்தும் இந்த கூட்டணி, வரும் தேர்தலை மனதில் வைத்து சீமானை கைது செய்து உள்ளார்கள்... எங்கே சீமான் சென்றதடவை காங்கிரஸ் போட்டியாளர்களுக்கு "ஆப்பு" வைத்து போல் இந்த தடவையும் "ஆப்பு" வைத்து விடுவார் என்று முன்னமே கைது செய்து ஓர் ஆண்டு சிறை தண்டனை கொடுத்து உள்ளார்கள்.. (இந்திய இறைபென்மை எல்லாம் சும்மா தமாசு).
By tamilan
7/18/2010 6:53:00 AM
கலைஞர் தமிழுக்கு செய்ததாக சொல்வது...... தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தியாச்சு..... எல்லாருக்கும் தமிழில் பேசியதற்கு விருது கொடுத்தாச்சு... தமிழில் படித்தவருக்கு அரசு வேலை கொடுத்தாச்சு.... தமிழில் பொறியியல், மருத்துவ படிப்பு கொண்டுவந்தாச்சு... விளம்பர பலகையெல்லாம் தமிழில் மாற்றியாச்சு.... தமிழில் படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு கொடுத்தாச்சு.... கலைஞர் தமிழருக்கு செய்தது........ தமிழை வைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதிச்சாச்சு..... ஈழத்தில் தமிழ்மக்களை லட்ச கணக்கில் கொன்றாச்சு முழுவதுமாக கொல்வதற்கு உண்ணாவிரதமும் இருந்தாச்சு.... தமிழக மீனவர்களை சுட்டு கொல்ல மூழு உரிமையும் ராஜபக்சவுக்கு கொடுத்தாச்சு...... உலகத்தமிழர்களை அழிக்க சோனியாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தாச்சு... தமிழுக்காக போராடும் அனைவரையும் தேசீய பாதுகாப்பு சட்ட்த்தில் கைது செய்தாச்சு.... தமிழரின் பண்பாட்டை உயர்த்தும் விதமாக கலைஞர் தொலைகாட்சியில் மானாட மயிலாட காண்பிச்சாச்சு... (அங்கு மானும் ஆடாது மயிலும் ஆடாது வேறதான் ஆடும்)
By Vani
7/18/2010 3:33:00 AM
தமிழர்களை கொலை செய்தவனுக்கு Red Carpet Welcome தட்டி கேட்டவனுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை ...இது தான் இந்திய இறையாண்மையா ? Shame on you Indian Govt and Karunanidhi Govt.
By Karthik
7/18/2010 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக