சனி, 6 ஜூன், 2009

கருத்துகள்

இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்ன வென்றால் '' இந்த ஆண்டில் மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளுக்கும் - ஏன் கடந்த ஆண்டுகளுக்கும் சேர்த்து உலகின் மிகச் சிறந்த நடிகர் விருது கொலைகார இராசபக்சேவிற்கு வழங்கப்படுகிறது'' தமிழர்களைக் கொன்றொழித்ததுடன் இல்லாமல் தமிழர் பகுதிகளையும் நாசமாக்கி அந்தப் பகுதிக்குச் சிங்களர் பணம் போகக் கூடாது என்று தமிழர்களின் தலையிலேயே மிளகாய் அரைத்து தமிழர்களிடமே பணம் பெறும் தொண்டினைப் பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருதை அவர் காங்.தலைவர்கள் முதலான பிறநாட்டுத் தலைவர்களுடனும் இந்தியா முதலான பிறநாட்டுத் தளபதிகளுடனும் இந்தியா முதலான பிற நாட்டு அதிகாரிகளுடனும் சேர்ந்து பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அவரின் கூட்டாளிகளுக்கும் பாராட்டுகள்! சிங்களக் கைக் கூலிகள் ஆரவாரத்துடன் கைதட்டும் பொழுது ஏமாளித் தமிழர்களும் கை தட்டுமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்!. . . . .தெரிவிக்கப்படுகிறார்கள்!


அறிவிப்பாளர்: இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 3:55:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக