திங்கள், 1 ஜூன், 2009

நோர்வே தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர்
நாடு கடத்தப்பட்டார்
பிரசுரித்த திகதி : 01 Jun 2009
நோர்வேயைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான போஃரூட் நிறுவனத்தின் தலைவர் ரான்வி டிவிட்டின்ஸ் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ரான்வி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பறக்க விடப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றுமாறு ரான்வி கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய மற்றுமொரு பிரித்தானியாரும் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளார்.குறித்த பிரித்தானியார் இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக