சனி, 23 மே, 2009

உரிமை கிடைக்கும்வரை போராட்டம்

துயரங்களை சுமந்து பயணம் செய்வோம்:
உரிமை கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்;
விடுதலைப்புலிகள் அறிவிப்பு

மாலை முரசு


கொழும்பு, மே. 20-
விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் போராளி கே.பி. அறிவன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
அதில் கூறியிருப்ப தாவது:-
60 வருட கால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது.
இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச் சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடப் பதையும் உலகம் அறிந்துள்ளது.
சொந்த காலில் சுயமாக கட்டியெழுப்பப்பட்ட உமது விடுதலைப் போராட்டத்தினை அழித்து எமது போராட்டத்தினை தாம் விரும்பியவாறு பயன் படுத்த அண்டை நாடுகளும் சர்வதேசமும் போட்டி போட்டுக் கொண்டு செய்த சூழ்ச்சிகளை எமது தலைவர் கடந்த 30 வருடங்களாக உடைத்தும் தகர்த்தும் உத்வேகத்துடன் முன்னெடுத்து வந்துள்ளார்.
இன்றுவரை எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் போகாது சுயமாக நின்று போராடியதனால்தான் நாம் அனைவரும் தமிழீழ தேசம் என்ற ஒரே குடையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.
காலத்திற்கு காலம் சிங்கள அரசு எமது நியாயமான போராட்டத்தினை புறக்கணித்து அதற்கு மாறாக ஓர் இனப்படுகொலையினை எம்மக்கள் மீது ஏவி விட்டுக் கொண்டிருந்தது.
இந்த இனப்படுகொலையினை அரசாங்கம் குடியேற்றம் என்றும், அபிவிருத்தி என்றும் பயங்கரவாதம் என்றும் புதிய வார்த்தைகளில் சர்வதேசத்தின் உதவியுடன் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செய்து கொண்டிருந்தது.
இறுதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற இன அழிப்பு ஆயுதத்தினை எடுத்து சர்வதேச ரீதியான அங்கீ காரத்துடனும் அயல் நாடுகளின் வழிகாட்டு தலுடனும் ஓர் மிகப்பெரிய இன அழிப்பு போரினை அனைத்து சர்வதேச மனிதாபிமான நெறி முறைகளையும் மீறி செயற்படுத்திக் கொண்டிருந்தது.
தேசியத் தலைவர் பிரபாகரன் சிங்கள அரசின் இந்த இன அழிப்புப் போரினை உலகுக்கு தெரியப்படுத்திக் கொண்டே தமிழீழ மக்களை சிங்கள அரசின் இனப் படுகொலைகளில் இருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு போரை நடத்திக் கொண்டிருந்தார்.
சர்வதேசத்தின் மவுனம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்டு விட்டது. இன்று தமிழீழ விடு தலைப்புலிகளை துடைத்தழித்து விட்டோம் என்ற இறுமாப்பில் சிங்கள தேசமும் அதன் கூட்டாளிகளும் ஆரவாரித்துக் கொண்டிருக்க தாயகமும் புலம் பெயர் தமிழர் தேசமும் துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.
20 ஆயிரத்திற்கும் அதிக மான மாவீரர்கள் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள், பல்லாயிரம் கோடி சொத்துக்கள் ஆகியவற்றின் இழப்புகள், தியாகங்கள் அனைத்தும் வீண் போகாது வீண் போகவும் விட முடியாது.
கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து நெருக்கடி களையும் எதிர் கொள்வோம். மீண்டும் ஒருங்கிணைந்து எமது லட்சியத்தினை அடைவதற்காய் போராடுவோம்.
கணிசமான போராளி களையும் மக்களையும் எமது கட்டுப்பாட்டுப்
பிரதேசங்களையும் இழந்தது. உலகெங்கும் வாழும் எம் உறவுகளிற்கு பெரும் துயராக இருக்கும் எனினும் துயரங் களை சுமந்து பயணங்களை தொடர்வோம்.
தமிழீழ தேசம் மட்டுமின்றி உலகெங்கும் பிரிந்தும் பரந்தும் இருக்கின்ற மக்கள், போராளிகள் எமது தலை மையின் வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் விருட்சாக தோன்றி எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக