வியாழன், 21 மார்ச், 2013

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் 3 பேர் தீக்குளிப்பு முயற்சி: பரபரப்பு

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் 3 பேர் தீக்குளிப்பு முயற்சி: பரபரப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென இலங்கை விவகாரம் குறித்து கோஷமிட்டபடி 3 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த செவ்வேள் சந்துரு, ஒண்டிவீரன், சரவணன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராகவும்  கோஷமிட்டபடி, தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அருகில் இருந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக