ஞாயிறு, 17 மார்ச், 2013

தமிழகம் முழுவதும் 20 அன்று மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்: வெள்ளையன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 20 அன்று  மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்: வெள்ளையன் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 20-ந்தேதி
மாணவர் போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள்:
 வெள்ளையன் அறிவிப்பு
சென்னை, மார்ச். 17-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த கொடியவன் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக்க வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. உலகத்தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் இந்த இனவெழுச்சியை முன்னெடுத்துச் செல்வது நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

மாவீரன் முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த பிறகு ஏற்பட்ட இனவெழுச்சி அரசியல் சூழ்ச்சியால் வீழ்ச்சி அடைந்தது. தேர்தல் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஈழ மக்கள் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்திலும் தமிழகத்து மாணவர்கள் தனித்து விடப்பட்ட போதிலும் எழுச்சி குன்றாமல் வாதாடினார்கள் போராடினார்கள். இப்போதும் மாணவர்கள் எழுச்சியுடன் களம் இறங்கியுள்ளதை எமது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வரவேற்கிறது.

மாணவன் நினைத்தால் முடித்துக்காட்டுவான் என்கிற சொற்றொடர் மெய்ப்பட எல்லோரும் உதவ வேண்டும். அந்த வகையில் மார்ச் 20-ந்தேதி அன்று தமிழகம் எங்கும் மாணவர்கள் நடத்தும் தொடர் முழக்க போராட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா விதத்திலும் மாணவர்களின் போராட்டங்களுக்கு வணிகர் சங்கங்கள் உதவியாய் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக