திங்கள், 18 மார்ச், 2013

இலங்கை த் தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

இலங்கை த் தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
ஐ.நா.சபை மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2009-ஆம் ஆண்டு ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசின் ராணுவத்தினரால் நம் தொப்புள் கொடி உறவான அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் ஏராளமாக கொன்று குவிக்கப்பட்டனர். 2011-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் 08.06.2011 அன்று கீழ்க்கண்ட தீர்மானத்தை

பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது

மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது

மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது

உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது

இலங்கை அரசு விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது

போன்ற போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர் குற்றம் புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது. அந்த தீர்மானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட அம்சங்கள் இடம்பெறும் வகையிலே இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்து, இந்திய அரசு இத்தீர்மானத்தை உறுதியாக ஆதரித்து தீர்மானம் நிறைவேறிட எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட வகையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறிட போராட்டங்கள் நடத்திவரும் அனைத்து அமைப்பினருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து உறுதியான நிலைப்பாட்டுடன் விரைவில் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக