வெள்ளி, 29 மே, 2009

அமைச்சருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பொறியாளர் கைது

தினமணி
First Published : 28 May 2009 09:04:58 AM IST


போபால் (ம.பி.), மே 28: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பொறியாளர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச பொதுப்பணித் துறையில் செயற் பொறியாளராக இருந்தவர் ஆர்.என்.கரைய்யா. இவர் மீது அரசுக்கு பல புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தன்னை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக அமைச்சரை செவ்வாய்க்கிழமை இரவு அவரது இல்லத்தில் சந்தித்தார் கரைய்யா. அப்போது அமைச்சரிடம் லஞ்சமாக ரூ.5 லட்சம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர், உடனடியாக போலீûஸ வரவழைத்து அவரை கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்

அரசியல் வாதியின் நாடகம். பலிகடா வேண்டாத பொறியாளர்.

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 3:09:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக