ஞாயிறு, 24 மே, 2009

தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வாகை சூடுக!

அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக தம்பிதுரை தேர்வு

தினமணி
First Published : 24 May 2009 11:47:00 PM IST

திரு. தம்பி துரைக்கு வாழ்த்துகள். அஇஅதிமுக இதுவரை கொத்தடிமை முறையைத்தான் பின்பற்றி வருகிறது. பொது மக்கள் கருத்துகளுக்கு மட்டுமல்ல, கட்சித் தொண்டர்கள், அடுத்த நிலைத் தலைவர்கள் உணர்விற்கும் கருத்திற்கும் மாறாகத்தான் செய்லபட்டு வருகின்றது. முதல் முறையாக - ஒரு வேளை தேர்தல் ஆாயத்திற்காக இருந்தாலும் - மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு வெற்றி பெற்றால் தமிழ் ஈழத்தை 100 நாட்களில் அமைத்துத் தருவதாக அறைகூவல் விட்டது. இதனை வெற்று(வெத்து) வேட்டாக ஆக்காமல் மூன்றில ஒரு பங்கு பெற்ற வெற்றியை எண்ணி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் துணிந்து குரல் கொடு்தால் போட்டியாகவாவது பிற கட்சிகளும் துணிந்து குரல் கொடுக்கும். இந்திய அளவிலான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வரலாற்றையும் மனித நேயத்தையும் பேரவலங்களையும் கட்டாயத் தேவையையும் வலியுறுத்தி ஆதரவுகளைத் திரட்டித் தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வாகை சூடினால் உங்கள தலைவி உலகத்திற்கே என்றும் புரட்சித் தலைவியாகத் திகழ்வார். அவரை ஆரியத் தோழர்களிடமிருந்து மீட்டு மனித நேய உணர்வாளர்கள் பக்கம் அழைத்து வருவீ்ர்களாக! மன்றாடி வேண்டும்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 4:18:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக