புதன், 27 மே, 2009

சனநாயகப் பாதைக்குத் திரும்பும் புலிகளின் முடிவு: கோத்தபய நிராகரிப்பு
தினமணி
First Published : 26 May 2009 05:53:03 PM IST


சனநாயக வழியில் இலங்கைத் தமிழர் நலனுக்குப் போராடப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கும் முடிவை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச ஏற்க மறுத்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு பிபிசிக்கு அளித்த பேட்டியில், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ஜனநாயக வழியில் போராடப்போவதாக விடுதலைப் புலிகள் சர்வதேச செய்தித் தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பிபிசிக்கு தொலைபேசி வழியாக கோத்தபய ராஜபட்ச அளித்துள்ள பேட்டியில், புலிகளின் அறிவிப்பை ஏற்க மறுத்துள்ளார். பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்ட அவர்களை நம்ப முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே இலங்கையில் போதுமான அளவு தமிழ் அரசியல் கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்."இலங்கையில் ராணுத்தின் பணி முடிந்துவிட்டதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவது மற்றும் காடுகளில் விடுதலைப் புலிகள் மறைந்திருக்கின்றனரா எனத் தேடுவது உள்ளிட்ட பணிகளை இன்னும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது" என்றும் கோத்தபய தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

1/2) மடையன்கள்! வீரர்கள் என்று என்று எண்ணி அனைவருக்கும் வீர மரணம் அளித்துத் தமிழ் இனத்தையே பூண்டோடு ஒழிப்போம் என்று காங். அரசுடன் ஒப்பந்தம் போட்டுச் செயல்படுத்தி வரும் பொழுது 'சனநாயக வழியாம்' வெங்காயம். நான் என்ன இளித்தவாயனா? நீ எந்த வழியை வேண்டும் என்றாலும் தெரிவு செய்து கொள்! நீயோ உன் இனமோ இங்கு இருக்கக் கூடாது. அதுதான் அன்றே சொல்லி விட்டேனே! இலங்கை என்பது சிங்களர் பூமி ; வேறு யாரும் அடிமையாகக் கூட வாழ முடியாது என்று. பத்மாநாதா!உன்னை முழுக் கருணாவாகச் சொன்னால் -முழுக் கருணா என்றால் கருணாநிதி அல்ல - ஏதோ தன்மானம் உள்ளவன் போல் பிதற்றுகிறாயே! இரு! இரு! பன்னாட்டுக் காவலிடம் (இண்டெர் போல்) சொல்லி உள்ளளேன். விரைவில் வைக்கிறேன் வேட்டு! அன்னை துணை இருக்கையில்- இல்லை இல்லை அண்ணாவின் தம்பி துணை இருக்கையில் - இல்லவே இல்லை;பாதுகாப்பு நெறியாளரின் அண்ணன் நம்பியார் ஐ.நா.வில் துணை இருக்கையில் - அடடா மீண்டும் உண்மை வெளியே வருகிறதா- 'அதிபராகிய' என்அண்ணன் துணை இருக்கையில் என்னை யார என்ன செய்ய முடியும்!

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2009 3:23:00 AM
2/2) கடைசித் தமிழன் இருக்கும வரையில்அழித்தொழிப்பதுதான் எங்கள் அனைவரின் வேலையும்! இதனைத் தெரியாமல் புரியாமல் இருக்கும் முண்டங்களே! ஒதுங்குங்கள்! -- இதுவும் கனவா? இல்லை! சிங்களவர்களின் நாடித்துடிப்பு -- உண்மையை இனியேனும் உணர வேண்டும்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2009 3:24:00 AM

its a clear message from ngothapaya rajapakse that he will ERASE all TAMILIANS in the name of LTTE (or linked to LTTE). TN CM and Congress have taken their stand and they will loot as much as possible on the dead bodies of so-called thoppul kodi uravu thamizh people at Srilanka. TN-CM could spend his time to get the cabinet berths to his family members and plan further to loot more money. Its all TN people should think why they voted such badly. I see all of us are more selfish these days. Never mind what goes at neighbour's home/next street/next village. Its just a matter of, what I get and how much money I earn in any situation. Do you think India will improve ? Ofcoz yes. You know in what the development will be. It will be in money power and mighty power. But certainly India will not have humanity and its so-called traditional values and system, social responsibility. I loose confidence with people. God Save Earth.

By Senthil
5/26/2009 6:44:00 PM
--------------------------------------------------------------------------------------------------
கருத்துக்கள்

பெயரிலேயே தமிழ்த்துரோகி என்று வைத்து உண்மையை ஒப்புக் கொண்டு இனப்பற்றாளர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைப பற்றித் தவறாகச் சொல்லலாமா? அவர் என்ன தவறாகச் சொல்லி விட்டார். காலங்காலமாகப் போர் நடத்தும் சிங்கள அரசின் மனசாட்சி போல் எழுதியுள்ளார். அமைதி வாழியை ஏற்றுக் கொள்ளாத கோத்தபய என்ன நினைத்துக் கொண்டு அவ்வாறு சொல்லியிருப்பார் எனக் கற்பனை செய்துள்ளார். அப்பொழுது அவரது நடையில்தானே அதுவும் இருக்க வேண்டும். மற்றபடி யாரையும் துரோகி என்றோ வேறு வகையாகவோ வசவு பாடவில்லையே! கருத்திற்குக் கருத்தால் பதில் சொலல முடியவில்லைஎன்றால் சும்மா இருக்கலாமே! எதற்கு கருத்து பகுதியில் சண்டை.

By B.Kesavan
5/27/2009 12:46:00 PM

தமிழ்த்துரோகி / குரு உங்கள் குறிப்பு கண்டேன். நான் உலகெங்கும் போரே கூடாது என்னும் கொள்கை உடையவன். போர் மூலம் நம் நாடு அழிவை உண்டு பண்ணும் பொழுது மனித நேயத்துடன் அதனைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை. ஆனால், நீங்கள் குறிப்பிட்டவாறு எந்தக் குறிப்பிலும் யாரையும் காதால் கேட்கக் கூசும் சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்டதில்லை. கருத்தை மட்டும்தான் தவறு என்று சுட்டுகின்றேன். ஆனால் உங்களைப் போன்றவர்கள்தாம் தவறான சொற்களைக் கையாளு கின்றீர்கள். அற்காக,என் பெயரில் நீங்களே ஏதாவது தவறாகக் கருத்துகளை எழுதி என் மேல பழி போடாதீர்கள். இன அடிப்படையில் இல்லாமல் அமைதியாக எண்ணிப் பாருங்கள். இறைவன் தந்த நிலத்தை நாம் துண்டு போட்டுக் கொண்டு மற்றொரு பகுதி மக்களை அடிமையாக்கிப் போர் மூலம் அழிக்க எண்ணுவது முறைதானா? போரில்லா உலகம் அமைப்போம் என எண்ணினால் நீங்களும் பேரழிவுகளையும் பேரவலங்களையும் ஏற்படுத்தும் போரில் ஈடுபடும் நாடுகளையும் அதற்கு உதவும் நாடுகளையும் அமைதி வழி மாற்ற வேண்டும் என விரும்பவீர்கள். ஈழத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அமைதி நிலவப் பாடுபடுவீர்கள். அமைதிவழிக்கு மாறுங்கள் என வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2009 12:38:00 PM

இலக்குவனார் திருவள்ளுவர் என்பவர் தீவிர LTTE ஆதரவாளர் எனவும், முன்பு அவர் LTTE இன் 'காகித புலிகள்' பிரிவில் உறுப்பினராக இருந்து வந்ததாகவும், தற்போது 'இனைய புலிகள்' பிரிவில் இருபதாகவும் நம்பதாகாத வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன. கடந்த சில நாட்களாக அன்னார் அவர்கள் எழுத்துக்களில் புலம்பல்கள் நிறைய கானகிடைகின்றன. அவர் மன பிறழ்ச்சி அடைதிதிருக்கலாமோ என்று அவரது தினமணி வாசகர்கள் கருதுகின்றனர். இனைய புலிகளின் கொள்கை வெளியிடப்பட்ட செய்தி இலங்கைக்கு தொடர்பற்று இருந்தாலும் அதில் இலங்கை பற்றிய கருத்துகளை எழுதுவது. புலிகளை விமர்சித்து எழுதுபவரை , தமிழ் துரோகி, இனதுரோகி, ஆரிய அடி வருடி என்பது போன்ற பட்டங்களையும், காதால் கேட்பதற்குகூட அஞ்சும் வசவுகளை வாரி இரைபதுவே ஆகும். இவர்களால் மிக மிக மதிப்புமிக்க தினமணி வாசகர்கள் கருத்து பகுதி கழிவறை போல் நாற்றம் வீசுவதாக தமிழ் கூறும் நல்லுலகம் புலம்புகிறது.

By TAMILDHROGI
5/27/2009 10:30:00 AM

yes, it is true. For the past 25+ years, there is no traces could be seen in the activities of LTTE. Whenever, they dislike someone, immediately they will kill him branding him as anti tamil. What the srilankan government says, looks to be true 100%

By sundaram
5/27/2009 9:46:00 AM

ILLAKUVANAR VALLUVAN YENBAVARUKKU SILA NATKALAGA MANA PIRALCHI YERPATTUVITTATHU POLA THERIGIRATHU. ILLAKUVANAR VALLUVAR ORU THEEVIRA LTTE AADHARAVALAR. AVAR LTTE AMAIPIN 'INAYA PULIGAL' PIRIVAI SERTHAVAR YENDRU NAMBATHAGATHA VATTARANGALIL THAGAVALGAL KASIKINDRANA. IVAR DINAMANIYIL VARUM ANAITHU SEITHIGALILUM LTTE AATHARAVU KARUTHUGALAYE YELUTHUM 'INAYA PULIGAL' VELAYAI SEMMIYAGA SEITHUVARUGIRAR. AVAR POORANA GUNAMADAYA YELLAM VALLA TAMILANNYAI PIRATHITHUKOLLUNGAL. MELUM AVARIN 'INAYA PULIGAL, PANI THODARA KODANU KODI TAMIL NENJANGALIN VALTHUKAL.

By GURU
5/27/2009 8:35:00 AM

We 100 million Tamil people in this World but without any independent state. In Srilanka the World knows the minority Tamil people are killed by the majority Sinhalese Government. To stop killing of innocent Tamils, we gave our voice in front of World’s parliament and UN but they didn’t open the door to hear our voice. (EELAM territory ruled by Tamil Government under tamil army (TIGERS) On January 2008, according to EELAM Health Department the population of Tamils was – 4, 85,457 (Before Sinhalese army occupation) On May 15 2009 report from Sinhalese Government that except Sinhalese army now, no Tamil people in the EELAM territory. On May 25 2009, Report from UN the displaced Tamil people’s population in the camp (open prison) was 2, 71, 781 So what happened to the remaining 2, 13, 676? Tamil people, is it GENOCIDE or NOT, who is going to give the answer.)

By Arumugam
5/27/2009 6:06:00 AM

Our useless Indian politician do not care about this. They always talk about India's integerity, they dont bother about ethnic cleansing carried out by Barbaric Srilankan Government.

By Annu
5/27/2009 3:30:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக