சனி, 30 மே, 2009

கேபினட் அந்தஸ்து வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. பிடிவாதம்
தினமணி
First Published : 30 May 2009 03:04:00 AM IST


னபுது தில்லி, மே 29: தனக்கு கேபினட் அந்தஸ்து தராததால், காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகாந்த் ஜெனா, இணை அமைச்சர் பொறுப்பை ஏற்காமல் தட்டிக்கழித்து வருகிறார். அமைச்சரவை விரிவாக்கத்தின்போது ஒரிசாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஜெனா, ரசாயனம் மற்றும் உரத்துறையில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் பொறுப்பை ஏற்காமல் அவர் தட்டிக்கழிக்கிறார். இதுதொடர்பாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தனது கவலையை தெரியப்படுத்தியுள்ளார் ஜெனா. பிரதமரும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு உறுதி அளித்துள்ளார். முந்தைய ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்தவர் ஜெனா. தற்போது முதல்முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு ரசாயனம் மற்றும் உரத்துறை அளிக்கப்பட்டுள்ளது. அவரது துறையில் ஜெனாவுக்கு இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

என்ன செய்வது செனா ! உங்கள் அப்பா கலைஞர் போல் இல்லையே! என்றாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. பதவி இறக்கம் செய்தது தவறுதான்! என்ன செய்வது? உங்கள் துறை அமைச்சர் அழகிரி மூலமே முயன்று இலட்சியத்தில் வெல்லுங்கள்! இலட்சங்களால் முடியாத இலட்சியம் ஒன்றும் இல்லை! விரைவில் (இணைஅமைச்சரிலிருந்து) அமைச்சராக வாழ்த்துகள்!வாழ்த்துகளுடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/30/2009 4:05:00 அம

என்ன செய்வது செனா ! உங்கள் அப்பா கலைஞர் போல் இல்லையே! என்றாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. பதவி இறக்கம் செய்தது தவறுதான்! என்ன செய்வது? உங்கள் துறை அமைச்சர் அழகிரி மூலமே முயன்று இலட்சியத்தில் வெல்லுங்கள்! இலட்சங்களால் முடியாத இலட்சியம் ஒன்றும் இல்லை! விரைவில் (இணைஅமைச்சரிலிருந்து) அமைச்சராக வாழ்த்துகள்! Very nice திருவள்ளுவன்!!!
By Vasanth
5/30/2009 10:08:00 AM

Hello Jana, Please go and get counselling from Kapil Sibal. With too much experience, he was working as deputy to Dayanithi maran. What is wrong if you work for Azhagiri? Arasialla Ithellam sahajam. Console yourself

By sundaram
5/30/2009 9:52:00 AM

YENGA TR BALUVAL MUDIYADHDHU UNGALAL MUDIYUMA PAVAM TR BALU. NANDAHATHAN VEALAIKALAI SEITHAR YENNA PUNNIYAM? KALAINGARIN MAGANAKAVO PERAPPILLAYAGAVO PIRAKKAVILLAYEY. SADHARANA UDAN PIRAPPU THANEY?

By YEAMANDHA UDANPIRAPPU
5/30/2009 4:48:00 AM

----

2/2 ) (தொடர்ச்சி) தன்னைத் தமிழ் ஈழததிற்காகக் குரல் கொடுக்க முடியாத அடிமை என்றவர் தன் பிள்ளைகள், பேரனுக்குக் குரல் கொடு்க்கும் பொழுது அடிமையாக எண்ணவில்லை. இந்த அடிமையின் சொல்லைக் கேட்டு அழகிரிக்கு அமைச்சர் பதவி தந்த காங். அந்த இடத்திற்கு வரவேண்டிய இந்த செனாவைத்தான் அந்த இடததில் அவருக்குக் கீழே இணை அமைச்சராக நியமித்திருக்கிறார்கள். அந்தோ பரிதாபம்! காங். கொள்கைதான் தன் கொள்கை என்று சொன்னால் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்பதால் அதனை மாற்ற முடிந்த 'அடிமை' ஈழத்தமிழர் நலன் குறித்து மட்டும் அப்படியே ஏற்றுக் கொள்கிறாரே! தமிழன்னை மன்னிப்பாரா! வேதனையுடனு்ம் வருத்தத்துடனும்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/30/2009 8:03:00 PM

1/2 ) ஓர் உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வி்ல்லை. ஈழத்தமிழர் படுகொலைகளைப் பொறுத்தவரை, காங். கொள்கைதான் தன் கொள்கை என்று சொன்ன கலைஞர் அமைச்சரவை உருவாக்கத்தின் பொழுது காங்.கின் நியாயமான கொள்கையை ஏற்கவில்லை. 9 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் அமைச்சர் ஓர்இணையமைச்சர் என்றும் முதன் முறை நா.உ. ஆனவரக்ளுக்கு அமைச்சர் பதவி கிடையாது; இணையமைச்சர் பதவி என்றும் சரியான கொள்கையை வகுத்தது. கடந்த முறை சொல்ல வில்லையே என்று ஏற்கவி்லை. (கடந்தமுறை ம.தி.மு.க. எண்ணிக்கையையும் சேர்த்துககூடுதலாக 2 அமைச்சர் பதவியைப் பெற்றிருந்தது.)அழகிரிக்கு அமைச்சர் பதவி, கனிமொழிக்குக் குறைந்தது தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி கேட்டுக் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் ஆரிய-திராவிடப் போர் மீ்ண்டும வரும் என்றும் கூறினார். ஆனால் உண்மையில் தமிழ் ஈழத்தில் ஆரியர்கள் ஈழத் தமிழர்களைக் கொத்துக குண்டுகள மூலமும் எரி குண்டுகள் மூலமும் கூட்டம் கூட்டமாகக் கொன்ற பொழுது வாய்மூடி அமைதியாகத் தான் இருந்தார். (தொடர்ச்சி காண்க)

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/30/2009 8:02:00 PM




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக