திங்கள், 9 செப்டம்பர், 2013

கண் தானம் எண்­ணிக்கை...அதி­க­ரிக்க வேண்டும்!

கண் தானம் அளிப்போர் எண்­ணிக்கை...அதி­க­ரிக்க வேண்டும்! நங்­க­நல்லூர், சவு­கார்­பேட்டை மிகுதி

சென்னை:சென்­னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப கண் தானம் இல்லை என்றும், விழிப்­பு­ணர்வு இல்­லா­ததே இதற்கு காரணம் என்றும், கண் மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர். அதே நேரத்தில், நங்­க­நல்லூர் மற்றும் சவு­கார்­பேட்டை பகு­தி­வா­சிகள் கண் தானத்­திற்கு அதி­க­ளவில் முன்­வ­ரு­வ­தாக தெரி­கி­றது.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை, தேசிய கண்­தான விழிப்­பு­ணர்வு இரு­வா­ரங்­க­ளாக அனு­ச­ரிக்கப் படு­கி­றது. கண் தானம் பற்­றிய விழிப்­பு­ணர்வை மக்கள் மத்­தியில்
ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்கம்.
சென்­னையில் தினமும், சரா­ச­ரி­யாக 156 பேர் இறப்­ப­தாக, கடந்த ஜூலை மாத மாந­க­ராட்சி புள்­ளி­வி­வ­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அதா­வது, ஒவ்­வொரு மாதமும், ஏறத்­தாழ 4,680 பேர் இறக்­கின்­றனர். ஆனால், அதற்கு ஏற்ப கண் தானங்கள் கிடைப்­ப­தில்லை என,சங்­க­ர­நேத்­ரா­லயா கண் வங்கி ஆலோ­ச­கர்கள் விக்ரம் மற்றும் சுப்­பி­ர­ம­ணியம் தெரி­வித்­தனர்.
பேருக்கு உதவும்
இது­கு­றித்து, அவர்கள் கூறி­ய­தா­வது:
கண் தானத்தில், தேசிய அள­வி­லான கணக்­கெ­டுப்பின் படி, தமி­ழகம் முத­லி­டத்தில் உள்­ளது. தேசிய பார்­வை­யி­ழப்பு கட்­டுப்­பாட்டு திட்ட தகவல் படி, 2012 13ம் ஆண்டு மே மாதம், தமி­ழ­கத்தில் தான­மாக பெறப்­பட்ட கண்­களின் எண்­ணிக்கை 8,318. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள குஜ­ராத்தில் 8,066 கண்கள் தானம் பெறப்­பட்டு உள்­ளன. 7,153 கண்­களை தான­ம­ளித்து ஆந்­திரா மூன்­றா­மி­டத்தில் உள்­ளது.
அதே­நேரம், கண் தான விழிப்­பு­ணர்வில் சென்னை பின்­தங்கித் தான் உள்­ளது.
சென்­னையில் மாதத்­திற்கு 4,680 பேர் இறக்­கின்­றனர். ஆனால், 50க்கும் குறை­வா­ன­வர்­க­ளு­டைய கண்கள் மட்­டுமே தான­மாக கிடைக்­கின்­றன.
சவு­கார்­பேட்டை மற்றும் நங்­க­நல்லுார் பகு­தி­வா­சி­க­ளுக்கு கண்­தான விழிப்­பு­ணர்வு அதி­க­ளவில் உள்­ளது. அந்த பகு­தி­களில் இருந்து, ஒரு மாதத்­திற்கு ஓரி­ரு­வ­ரா­வது கண் தானம் அளிக்­கின்­றனர். அவர்­க­ளிலும், வட­மா­நி­லத்­த­வர்கள் மத்­தியில் கண்­தான விழிப்­பு­ணர்வு நிறை­யவே உள்­ளது.
இறந்­த­வரின் உற­வி­னர்­க­ளுடன் பேசி, கண் தானம் பெற முயற்­சிகள் மேற்­கொள்வோம். ஒரு­வரின் இறப்பு அவ­ரு­டைய குடும்­பத்­திற்கு பேரி­ழப்பு தான். ஆனால் அவ­ரது கண்கள் தான­மாக தரப்­படும் பட்­சத்தில், இருண்ட உலகில் தவிக்கும் நான்கு பேருக்கு ஒளி ஏற்­றிய பெருமை கிடைக்கும்.
இவ்­வாறு அவர்கள் கூறினர்.
கண் தானம் கொடுப்­பது எப்­படி?
ஒருவர் இறந்து ஆறு மணி நேரம் வரை கண்­களை தான­மாக கொடுக்­கலாம்.
தற்­கொலை தவிர்த்து விபத்து உள்­ளிட்ட மற்ற சாதா­ரண மர­ணங்கள் எங்கு நடந்­தாலும், அருகில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் தகவல் அளிக்­கலாம் அல்­லது ‘1919’ என்ற தொலை­பேசி எண்­ணிலும் தகவல் அளிக்­கலாம்
தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­களால், தற்­போது, ஒருவர் கண்­தா­ன­ம­ளித்தால் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும்
ரத்த அழுத்த நோய் மற்றும் சர்க்­கரை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், கண்­புரை அறுவை சிகிச்சை செய்து கொண்­ட­வர்கள், கண்­ணாடி அணிந்­த­வர்­களும் கண் தானம் செய்­யலாம்
பிறந்த குழந்தை முதல் 100 வயது வரை­யி­லா­ன­வர்­களின் கண்­களும் பயன்­படும்
இறந்­தவர், ரத்தம் மற்றும் மூளை
புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தாலோ, காசநோய், மலே­ரியா, மஞ்சள் காமாலை மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்­கப்­பட்டு இறந்­தி­ருந்­தாலோ கண் தானம் அளிக்க முடி­யாது
தற்­கொலை செய்­பவர் எந்த நேரத்தில் இறந்தார் என்­பதை சரி­யாக கணிக்க முடி­யாது என்­பதால் அவ­ரு­டைய கண்­களை பயன்­
ப­டுத்த முடி­யாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக