புதன், 14 நவம்பர், 2012

நீரிழிவு நோய்க்கு அழுத்தூசி மருத்துவம்

சருக்கரை நோய்க்கு அழுத்தூசி மருத்துவம் (அக்குபஞ்சர் சிகிச்சை)

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நாடு பல துறைகளில் முன்னேற்றம் அடைந்தபோதிலும் உடல் நலத்தில் இந்தியர்கள் சரியான முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்று பார்த்தால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
குறிப்பாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 56-ல் இருந்து 63 வயதாக உயர்ந்திட்ட போதிலும் என்ன பயன்? காரணம் சக்கரை நோய், இதயநோய், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிப்புக்குள்ளானோர், இன்றைக்கு உள்ள மருந்து வகைகள் மூலம் தங்கள் வாழ்நாள்களை நீட்டித்துக் கொள்ளலாமே ஒழிய பயனுள்ளதாய் வாழ முடியாது. கடந்த 10 ஆண்டுகளில், மற்ற நாடுகளைவிட இந்தியாவில்
சர்க்கரை நோய் அபாயகரமாக அதிகரித்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) அறிவித்துள்ளது.மற்ற நோய்களைவிட சர்க்கரை நோய் அதிக தீங்கிழைக்கும் நோயாக இருக்கிறது. பிற நோய்களால் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகள் மட்டுமே பாதிக்கப்படும்.
ஆனால், சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் உள்ள பிரச்னை என்பதால் மூளை, கண், இருதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என அனைத்தையும் உறுப்புகளையும் பாதிப்பதால் மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக உள்ளது. ஏனெனில் சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியுள்ளது.
2020-ம் ஆண்டில் உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 5-ல் ஒருவர் இந்தியராக இருப்பர் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கை முறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டதுதான் இதற்கான காரணம். எல்லாவற்றுக்கும் இயந்திரத்தின் உதவி, உடற்பயிற்சியின்மை, உணவு முறையில் மாற்றம், இரவு கண்விழிப்பு, எதற்கெடுத்தாலும் அவசரம், பரபரப்பு ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
அக்குபஞ்சர் மருத்துவ முறையில் சீனர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தங்களது குறிப்பில் எழுதி வைத்துள்ளனர். அதன்படி நாங்கள் சிகிச்சையளிக்கிறோம். எங்களது மருத்துவமனையில் இதுவரை 1000 - 1500 சர்க்கரை நோயாளிகள் நிவாரணம் பெற்று,மற்றவர்களைப் போலவே எந்த மருந்தோ, உணவுக் கட்டுப்பாடோ இன்றி வாழ்கின்றனர்.

சிகிச்சையின் பலன் என்ன? சர்க்கரை நோயாளிக்கு மாத்திரையின் அளவை சற்று மாற்றியமைத்து, அவர்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 160 மில்லிகிராம் அளவுக்குக் கொண்டு வருவோம். பிறகு,நாள் ஒன்றுக்கு 40 நிமிஷங்கள் சிகிச்சை என 20 நாள்கள் செய்து கொண்டு, மாத்திரைகளை படிப்படியாக குறைத்து ஒரு காலகட்டத்தில் அவற்றை முழுமையாக நிறுத்திவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக