புதன், 14 நவம்பர், 2012

தீவரவாதி என அவதூறு செய்தி: இளைஞருக்கு க் , கூகுள் நிறுவனம் உரூ. 1 கோடி வழங்க உத்தரவு

தீவரவாதி என அவதூறு செய்தி: இளைஞருக்கு க் , கூகுள் நிறுவனம் உரூ. 1 கோடி வழங்க உத்தரவு
தீவரவாதி என அவதூறு செய்தி: வாலிபருக்கு, கூகுள் நிறுவனம்
ரூ. 1 கோடி வழங்க உத்தரவு
சிட்னி, நவ. 14-

தீவிரவாதி என அவதூறாக செய்தி வெளியிட்டதால் வாலிபருக்கு 'கூகுள்' நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிலோரத் டிரிகுல்ஜா. இவர் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவருக்கு மெல்போர்ன் நகரில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு 'கூகுள்' இணைய தள நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனால் அவரது தொழில் முடங்கியது.

இதை எதிர்த்து அவர் விக்டோரியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடைபெற்றபோது, ஏதோ தவறுதலாக இது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இது வெளியிடப்படவில்லை என கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் அதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மறுத்து விட்டார். அவதூறு செய்தி வெளியிட்டதற்காக மிலோரட் டிரிகுல் ஜாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தர விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக