வெள்ளி, 15 ஏப்ரல், 2011

Supporting wave ? or change of the govt. : ஆதரவு அலையா... ஆட்சி மாற்றமா?

ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணை நின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டா எனச் சீமானின் நாம்தமிழர் கட்சியும் பிற தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் மேற்கொண்ட பரப்புரையும்  வாக்களிப்பு மிகுதிக்குக் காரணம். இதனை ஏன் செய்தியாளர் கருதிப் பார்க்கவில்லை என்று தெரியவில்லை.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

ஆதரவு அலையா... ஆட்சி மாற்றமா?


சென்னை, ஏப். 14: யாரும் எதிர்பாராத அளவு வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பொதுத் தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம். வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது.ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலின்போது இந்தக் கருத்து அடிபட்டுப் போனது. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி குறையவே இல்லை. ஆனால் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கூடுதலாக பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை திமுக வேட்பாளருக்குக் கிடைத்தவை.எல்லா வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வது, அதுவும் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்கச் செய்வது என்ற அணுகுமுறையை திமுகவினர் அப்போது கையாண்டதால் அந்த வெற்றி கிடைத்தது.இப்போது முடிந்துள்ள வாக்குப் பதிவில் 80 சதவீதத்துக்கும் மேலானோர் வாக்களித்துள்ளனர்.வாக்களிக்க தாமதம் ஆனபோதிலும்கூட யாரும் கோபம் கொள்ளவோ, தகராறு செய்யவோ, திரும்பிச் செல்லவோ இல்லை. பொறுமையாகக் காத்திருந்து வாக்களித்திருக்கிறார்கள்.அந்த உறுதி, மனமாற்றம் வாக்களர்களிடம் ஏற்படக் காரணம் என்ன என்பது அரசியல் கட்சிகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பெண் வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். இது அரசியல் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே பெண்கள் இரட்டை இலையின் ஆதரவாளர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம்.இப்போது அவர்கள் அதிக அளவில் வந்திருப்பதற்கு மூன்று அம்சங்கள் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.1. கடந்த 5 ஆண்டுகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் கிடைத்தது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மனதில் கொண்டு இந்த ஆட்சி தோற்கக்கூடாது என்பதற்காக அதிக அளவில் வாக்களிக்க வந்திருக்கலாம்.2. அல்லது தேர்தலுக்கு முன்பே வேட்பாளர்களிடம் பெற்ற பணத்துக்காக, அவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக வாக்களிக்க வந்திருக்கலாம். பெண்கள் சென்டிமெண்ட் உள்ளவர்கள் என்பதால் இந்த இரு வாய்ப்புகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.3. அதேசமயம், ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கிய அரிசியைச் சமைக்க இதர மளிகைப் பொருள்களுக்கு ரூ.100 செலவிடும் அளவு விலைவாசி உயர்வு,பஸ் கட்டணம் மறைமுக உயர்வு, மின் தடைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த அரசு மறுபடி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்கூட அவர்கள் பெருமளவு வந்திருக்கலாம் என்கிறார்கள்.பல இடங்களில் வாக்களித்துவிட்டு வந்த பெண்களிடம் விசாரித்தபோது, ""யாரும் சுத்தமான ஆட்சியைத் தரப் போவதில்லை. இந்த முறை மாற்றித்தான் பார்ப்போமே. அதனால் தவறு செய்தால் 5 ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அச்சமாவது அரசியல்வாதிகளுக்கு ஏற்படும்'' என்று கூறினர்.மாற்றம் வேண்டும் என்ற கருத்து பரவலாகக் காணப்பட்டது என்றாலும், மகளிர் சுய உதவிக் குழு என்ற வாக்கு வங்கி இதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.கடைசி நேரத்தில் பரிசுகள் மூலம் பெண்கள் அமைப்பினர் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பார்களா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.தொகுதிகளில் வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பணமோ, பரிசுப் பொருள்களோ தரப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால் பண பட்டுவாடா நடக்காத பகுதிகள் உள்பட, பரவலாகவே வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. காலையில் இருந்தே கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. எனவே பணம் தராத பகுதிகளிலும்கூட வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது பணம் தந்துவிட்டு, அந்த நம்பிக்கையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பல இடங்களில், ""பணம் தந்தார்கள் வாங்கிக் கொண்டோம்; ஆனால் எங்கள் விருப்பப்படிதான் முடிவெடுத்து வாக்களித்தோம்'' என அடித்தட்டு மக்கள் கூறினர். அப்படியானால் ""பணம் வாங்கியது தவறு இல்லையா?'' என கேட்டால், ""அது எங்களுக்கு உரிய பணம், இப்போதுதான் தந்தார்கள், வாங்கிக் கொண்டோம்'' என்று உரிமையோடு கூறினர்.வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், பணம் தந்ததால் மட்டும் இந்தத் தேர்தல் முடிவு இப்படி அமைந்தது என்று கூறுகிற அளவுக்கு முடிவுகள் இருக்காது என்பது மட்டும் வாக்காளர்களிடம் பேசியதில் இருந்து தெரிகிறது.இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஊழல் எதிர்ப்பு என்ற கருத்து அவர்களிடம் அதிகம் காணப்படுவது ஆளும் கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. ஜெயலலிதா கூறியிருப்பதுபோல, வெளியில் எதுவும் சொல்லாமலே "மெüனப் புரட்சி' என்பது வாக்குச் சீட்டுகள் மூலம்தான் நடந்து வருகின்றன.1977, 1996 ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் காணப்பட்ட எழுச்சி இந்தத் தேர்தலில் காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இந்த மெüனப் புரட்சியின் முடிவுக்காக இன்னும் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை பலரையும் வேதனையடையச் செய்திருக்கிறது.
கருத்துகள்

2011 தேர்தல் முடிவுகள் 1996 இல் ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சிக்கு சாவு மணி அடித்ததை பிரதிதிபலிக்கும் என்றே தோன்றுகிறது. அப்படி நடப்பதுவே, ஜனநாயக ஆட்சி முறையை நிருபித்து, தேசிய அளவில் தமிழ் சமுதாயத்தின் மானத்தையையும் காக்கும். இலவசங்களை கொடுத்து ஒட்டு வாங்கி பதவியில் அமர்ந்து கொள்ளை அடித்து மக்களை முட்டாளாக்க நினைக்கும் இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளுக்கும் ஒரு படிப்பினை ஆகும்.
By Padhu, New Delhi
4/15/2011 11:29:00 AM
நோ ஓனே ஹெல்ப் மிடில் கிளாஸ் பெஒப்லே. எவெரி ஓனே இஸ்ஸுஎ ப்ரீ இட்ம்ஸ் போர் வோட்ஸ். இன்ச்ரியசிங் பரிசே டு மோவே இன்ச்ரியசே ஒன்லி நோ ரெடுசே. வோடேத் பாப்லஸ் ஆர் பூளிஷ். இப் ஜெயா கம் இம்மீடியாடே தேச்ரியசே நோ சமே கருணாநதி அலசோ. சோ ஆல் பர்தீஸ் சாய்ஸ் டு பெஒப்லே பட் இட் வில் நாட் ஹப்பேன்.
By Rajan
4/15/2011 11:19:00 AM
ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். ஒட்டு போடுபவர்களின் இரகசியம் காக்க படவில்லை. நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாசா காந்தி நிலையத்தில் ஒட்டு போட சென்றேன். ஒட்டு போடும் இயந்திரத்தில் '49 ௦' பதிவு செய்ய வசதி இல்லை. நான் கேட்டபோது, அங்கு இருந்த அதிகாரி உடனே எல்லோரும் கேட்கும்படி சத்தமாக என்னை பார்த்து கேட்டார் " நீங்கள் '49 o ' போடவேண்டுமா, அந்த அதிகாரியிடம் உள்ள நோட் புக்கில் கையெழுத்து போடுங்கள்" அவர் சொன்னது அங்கிருந்த அனைவருக்கும் (பூத் ஏஜென்ட்களும்) கேட்க சொல்லப்பட்டது. என்னுடைய ஒட்டுரிமையின் இரகசியம் காக்க படவில்லையே. அங்கிருந்த போலீஸ் இடம் பெற்று ஜோனல் ஆபிசருக்கு போன் செய்த பொது அவர் பூத் அதிகாரி செய்ததை நியாயபடுத்தினார். செய்தி தாள்களில் கொடுத்திருந்த புகார் நம்பருக்கு போன் செய்தால், அவர் ARO , மற்றும் RO நம்பர்களை கொடுத்தார். அந்த நம்பர்கள் கிடைக்கவே இல்லை.
By மனோகரன்
4/15/2011 11:17:00 AM
இந்த தேர்தலில் மக்கள் இந்த அளவுக்கு வாக்கு அளித்ததற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் தேர்தல் ஆணையத்தின் மீது சில பழுத்த அரசியல் தலைவர்கள் கோபமாக உள்ளனர் ஏன் இந்த கோபம் என மக்கள் உணர்துவிட்டனர் வாழ்க தேர்தல் ஆணையம் சிறக்க உனது பணி.
By முத்து
4/15/2011 11:11:00 AM
இதில் என்ன சந்தேகம் சூரியனை மறைக்க போவது இரட்டை யிலை தான்.
By மரத் thamizhan
4/15/2011 10:58:00 AM
கொலை,கொள்ளை, ஊழல் இவை அனைத்தையும் பொறுமையுடன் சகித்து கொண்டிருந்த மக்கள் எப்பொழுது தேர்தல் வரும் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று ஏங்கி காத்து கொண்டிருந்ததையே இந்த வாக்குபதிவு காட்டுகிறது.. இது ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் அமர்ந்து சிந்திக்கவேண்டிய விஷயம்.. இனிமேலும் நாங்கள் உறங்குவதாக இல்லை என்பதை மக்கள் மணியடித்து சொல்லிவிட்டனர்.. இனியாவது ஊழலில் மூழ்கியுள்ள அரசியல்வாதிகள் விழிப்பார்களா?? அனைத்து பெருமைகளும் தேர்தல் ஆணையரையும்,அதிகாரிகளையும்,முக்கியமாக தினமணி போன்ற ஊடகங்களையும் சாறும்..
By தமிழினியன்
4/15/2011 10:34:00 AM
சிறப்பான பதிவு... பெரும்பாலும் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்வதில் பெண்களும் இளைஞர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்... இவர்கள் பெருமளவில் வாக்களித்ததால் கட்சிகள் கலக்கத்தில் இருப்பது உண்மை... இந்த வெற்றி நிச்சயம் தேர்தல் கமிஷன்னையே சாரும்... ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது பரவலாக உள்ள கருத்து.. அது இந்த முறை வெளிப்படும் நிலை உள்ளது.. ஆனால் பெரும் இழுபறி நிலையும் உருவாக வாய்ப்பு அதிகம்... எது எப்படியோ.. இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி..!!!
By கோபி கிருஷ்ணா
4/15/2011 9:13:00 AM
அப்போ தி மு க தான் ஆட்சி அமைக்கும்
By ponnampalam
4/15/2011 8:59:00 AM
அப்போ கண்டிப்பாக தி மு க தான் ஆட்சி அமைக்கும்
By ponnampalam
4/15/2011 8:56:00 AM
தினமணி! திமுக தான் வெற்றி, அதிமுக கண்டிபா தோல்வி! இன்னும் 4 வாரங்கள் காத்திருக்கவும்.
By புகழேந்தி சா
4/15/2011 8:48:00 AM
அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது உண்மை என்று தெரிந்து விட்ட படியால் மக்கள் பணம் வாங்குவது தவறு இல்லை என்று முடிவு கட்டி விட்டார்கள் .பணம் கொடுப்பது தவறு என்பது உண்மை என்றாலும் அதை தடுக்க பெரும் செலவு செய்ய வேண்டியுள்ள படியால் பேசாமல் ஒன்று செய்யலாம். ஒரு வாக்காளருக்கு ஒரு அரசியல் கட்சி ஒரு குறிப்பிட்ட தொகையை ஓட்டு போடுவதற்கு முன் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டமே கொண்டு வரலாம் .மக்களும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு தங்கள் விருப்பம் போல ஓட்டு போட்டு விடுவார்கள்.
By கே.ஜானகி vallabhan
4/15/2011 8:30:00 AM
இது தினமணி கருத்து ஆனால் மக்கள் இலவசத்துக்கு அடிமை, உழளுகும் உடந்தை, இந்த தேர்தல் பணம் மற்றும் இலவசம் ஜெயா மேல மக்களுக்கு நம்பிகைலம் இல்ல ஆதலால் எல்லாம் தி மு க வுக்குதான் சாதகம், மகளிர் சுய உதவி குழ்குகள் ஒட்டு அரசு ஊழியர் இலவச வீடு வாங்கினவர்கள் எல்லோரும் தி மு க தன இந்த இணையதுள்ள கருத்து சொல்லுற எவனும் ஒட்டு போடா போகல இதை நம்பி கனிச்ச கணிப்பு தப்பதான் போகும், எதரி கட்சி ஒன்னும் உத்தமர்அஹ்ன் கள் எல்லா ஆதலால் மக்கள் தெளிவதன் இருகிறார்கள் தினமணி தினமலர் ஜெயா பஜன பாடும் செய்திதால்கத்தான் இங்க கருத்து எழுதும் மக்களை வச்சி ஒரு கணிப்பும் நீங்களா ஒரு கற்பனை கட்டுரையும் எழுதுறிங்க , நீங்க சொன்ன முதல் ரெண்டுதான் காரணம் மற்ற விளக்கம் எல்லாம் ஜெயா கோசம் சொம்புதன்
By முனைவர் இரா மணிகண்ணன்
4/15/2011 8:28:00 AM
இந்த முறை அரசியலில் ஒரு புது திருப்பம் அமையும் என்று அனைவரும் எதிர் பார்க்கிறோம் .ஆட்சி மாற்றம் அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது .
By chinna
4/15/2011 7:12:00 AM
சரியான நெரத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து தமிழக இலைஞர்களிடம் ஓரளவுக்காவது விழிப்புனர்வு ஏற்படுத்திவிட்டார் சரியாக ஓட்டுபதிவுக்கு முன்பு அவரது போராட்டம் வெற்றி அடைந்தது மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தி இருக்கும் என்று தோன்றுகிறது. எது எப்படியொ இந்த தேர்தலில் தேர்தல் ஆனையத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் மக்களிடையே கூடியுள்ளது. எல்லோரும் பணத்திற்க்காகதான் வந்து ஓட்டளித்திற்பார்கள் என்று கூறவும் முடியாது காரணம் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கோவையில் மெழுகு வத்தி ஏந்தி போராடிய மக்கள் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள். இந்த தேர்தலில் தேர்தல் ஆனையதின் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த விதத்தில் பத்திரிக்கைகளின் பங்கு மிகப்பெரிய பாராட்டுக்குறியது.
By கருவி பாலா
4/15/2011 6:57:00 AM
படித்தவர் அதிகம் உள்ள தொகுதிகளில் சதவிகிதம் குறைவு. மயிலாப்பூர், திருவெல்லிக்கேணி, அண்ணா நகர், வேளச்சேரி பகுதிகளில் குறைவு. ராயபுரம், போன்ற இடங்களில் அதிகம். படித்தவன் பெப்சி குடித்துவிட்டு வீட்டில் இருப்பன். இவர்கள்தான் உரிமை பற்றி அதிகம் சொல்வார்கள்.
By சிவ.தமிழ்மணி
4/15/2011 6:21:00 AM
இரண்டு ஊழல் கட்சிகளிடையே எதற்கு ஆதரவு தருவது? உண்மையில் மக்களுக்காக உழைக்கும் எண்ணம் கருணாநிதிக்கோ அல்லது ஜெயலலிதாவுக்கோ இல்லை. உண்மையான மக்கள் தலைவன் தற்போது தமிழ்நாட்டில் இல்லை. எதனை கோடிகள் சம்பாதித்தாலும் இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் அரசியல்வாதிகள். இவ்வளவு கோடிகளை சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள் என்று புரியவில்லை. பதவிக்காக பல அறிவுப்புகளை தி.முக. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே வாரி வழங்கி உள்ளன. தான் ஆட்சிக்கு வந்தால் என்கிற தான் என்னும் அகம்பாவம் ஜெயலலிதாவுக்கு இன்னும் போகவில்லை. அந்த பக்கம் பாரத்தால் கருணாநிதி தன குடும்ப உறுப்பினர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க ஆனந்தபட்டுக்கொண்டிருக்கிறார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மின் வெட்டு அடியோடு நீக்கப் பட போவதில்லை. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை இலங்கை தமிழர் பிரச்சினை தீர போவதில்லை. குறைந்த பட்சம் தமிழ்நாடு மக்களின் தேவைகள் என்ன என்று பார்த்து சேவை புரியும் கட்சி என்று ஆட்சிக்கு வருமோ? [பாவம் நாங்கள்தான்.
By ஜெயராஜ் வி.சி.
4/15/2011 6:19:00 AM
வாங்குபவன் இருப்பதால் தான் கொடுப்பவன் இருக்கிறான். அனால் அண்ணா நகரில் சதவிகிதம் என்ன. படித்தவர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் வாக்கு ....
By சிவ.தமிழ்மணி
4/15/2011 6:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக