ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

Reservation for Vanniyar -kalaignar promised: 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு'

சாதிமறுப்புக்கட்சியான தி.மு.க.  இவ்வாறு குறிப்பிட்ட ஒரு சாதிக்கு முன்னுரிமை அளிப்பது தவறாகும். எவ்வகை வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும. அதற்கு ஆவன  செய்ய முதல்வரை வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு'


திண்டிவனம்,ஏப் 8: திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமென திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார்.  ÷விழுப்புரம் திமுக மாவட்ட செயலர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக சார்பில் திண்டிவனம்,மயிலம்,செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மொ.ப .சஙகர், ரா.பிரகாஷ்,அ.கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:  பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளாகும். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் அவரை மும்பையில் அண்ணா சந்தித்தது பற்றி என்னிடம் கூறியுள்ளார். அதிலிருந்து அம்பேத்கர் மீது எனக்கு தனி மரியாதை.  வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் கருணைத் தொகையை வழங்கி வருகிறேன். ராமதாஸின் இடஒதுக்கிடு கோரிக்கையை நான் கைவிட மாட்டேன் என்றார்.
கருத்துகள்

தி.மு.க விற்கே எனது ஓட்டு
By நீலா
4/9/2011 9:17:00 PM
தி.மு.க விற்கே எனது ஓட்டு
By நீலா
4/9/2011 9:15:00 PM
திரு தினமணி பத்திரிகை அசெரியர் அவர்களே .ஒரு கட்சியென் தலைவர் ஒரு குறுப்பிட்ட ஜாதிக்கு மட்டும் அதை செய்கிறேன் இதை என்று சொல்கிறார் .செட்டியார் ,நாயடு இன்னும் பிற ஜாதிகளு எல்லாம் வாரியம் அமைகவேண்டியதுதனே .எப்பபர்தலும் ஜாதி தமிழ் பற்றிய பேச்சுதான் .இந்த ஒரு மாநிலம் தான் அசிங்கம் ஆகிவிட்டது . தமிழ்நாடு அழிவின் வில்லிம்புக்கு வந்து விட்டது .மக்கள் புரட்சி வெகு விரைவில் வரபோகிறது .
By samy
4/9/2011 5:48:00 PM
மு.க அவர்களே தற்போது ஆதிக்க சக்தி தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம்தானே - அதை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளா. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் அழகரசன்
By alagaeasan
4/9/2011 1:34:00 PM
மு.க அவர்களே தற்போது ஆதிக்க சக்தி தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம்தானே - அதை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளா. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் அழகரசன்
By alagarsan
4/9/2011 1:09:00 PM
எதனை காலம்தான் இவ்வாறு சாதி சொல்லலி நாட்டை கெடுப்பீர்கள்??முதலில் உங்கள் பதவிக்கு ஒதுக்கீடு கொண்டு வாருங்கள் .பார்க்கலாம்.
By cheena
4/9/2011 11:15:00 AM
YOUR POLITICAL PARTNERS BOTH ARE KNOWN FOR THEIR ACTIVITIES LIKE STONING BUSES, CREATING DISTURBANCES FOR PUBLIC, DAMAGING PUBLIC PROPERTIES ETC. BUT YOU ARE KEEPING THEM FOR YOUR OWN WELFARE FOR YR PARTY. TAMILNADU PEOPLE ARE NOT GETTING BENEFITTED FROM YOU ALL THE 3 PARTIES JOINED IN THIS ELECTION. PEOPLE HAS THE RIGHT TO SELECT THEIR OWN CHOICED CANDIDATES !!!!!!!!!!!!! THEY WILL NOT ADHER TO ANYBODY'S FALSE PROPAGANDAS
By JEYAPRAKASH.
4/9/2011 10:47:00 AM
வன்னிய சகோதர்கள் சத்தியமாக நம்ப வேண்டாம் .
By muthu
4/9/2011 9:49:00 AM
குரங்கு ஆப்பத்தை பங்கிட்ட கதை சிறுவயதில் கேட்டதாக ஞாபகம்
By கணேசன்
4/9/2011 9:34:00 AM
மற்றவர்கள் என்ன வாயில் விரலை வைத்து சூபின்கொண்டிருப்பது தான. அருந்ததியர்களுக்கு தாழ்தபட்டவர்களுக்குள்ள சதவீதத்தில் தானே ஒதுக்கீடு செய்யப்பட்டு மற்றவர்களுக்கு குறைந்தது. என் நூறு சதவீதத்தில் கை வைக்கவில்லை. இவர் ஜாதிகளுக்குள்ளே புகுந்து பிரித்து ஒட்டு பிடிக்கிறார். பதவியை காப்பாற்றிக்கொள்ள கலைஞர் "என்னவேண்டுமானாலும், எதைவேண்டுமானாலும் செய்வர். இனி ஐந்தாண்டுகளுக்கு ஸ்ர்வதிகரன்க்தான்
By kala
4/9/2011 9:00:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக